கட்சியோ சின்னமோ ஒரு விடயமல்ல. தனிமனித ஆளுமைதான் ஒரு வழிகாட்டிக்கு முக்கியத்துவம் !
கட்சியோ சின்னமோ ஒரு விடயமல்ல. தனிமனித ஆளுமைதான் ஒரு வழிகாட்டிக்கு முக்கியத்துவம் பெறுகின்றது எங்கும். அந்த ஆழுமை மக்கள் நலன் சார்ந்து அவர்களை மீட்பதற்காக சிந்தித்துத் திட்டமிடுதலிலும் அதனை செயற்படுத்துவதிலும்தான் தங்கியிருக்கின்றது.
எனவே அதற்குள் 'சமுதாயம்' என்பது ஒரு வார்த்தை மட்டும்தான். நிஜத்தில் அப்படி எதுவும் இல்லை. ஒவ்வொரு தனிமனிதனும் தனக்குள் உருவாக்கிக் கொண்ட இணைப்பின் மூலமே 'சமூகம்' என்ற கட்டமைப்பு உருவாகிறது. தனிமனிதமாற்றம் இல்லாமல், இவ்வுலகில் மாபெரும் மாற்றங்கள் உருவாவதற்கு வாய்ப்பே இல்லை. சமூகம் மாறவேண்டும் என்ற சிந்தனை தனிமனிதனுக்குள் உண்டாகும்போது அதன்வழிநடத்தல் அவனாலே ஆரம்பிக்கப்பட வேண்டும். இதனால் நாம் இன்று தனிமனித ஆழுமையை மையப்படுத்துகிறோம்.
இன்று சமூகமாற்றம் என்பது சிறுபான்மையினரான எங்களுக்கு ஆட்சிமாற்றம் அல்லது தங்களது கட்சியின் வெற்றியை மையப்படுத்திய குறுகிய கண்ணோட்டத்தில் அணுகப்படுகிறது. இன்றைய எமது சமூகம் தனது கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் இருப்பு தொடர்பில் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது .நவீன தொழிநுட்ப வளர்ச்சி மற்றும் அந்நிய சக்திகளின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தனது சமூகமாற்றத்தை உள்வாங்கவில்லை என்பது யதார்த்தமாகும்.
அரசியலில் சமூகமாற்றம் என்பது அதிகாரமிக்கவர்களாக மாறுவதாகும். அதேபோன்று சகல துறைகளிலும் தங்களது தனித்துவத்தையும் தன்னிறைவையும் அடையவேண்டும். இதற்கான தயார்படுத்தலில் இருந்து நமது நமது சமூகம் விலகிச் செல்வதற்கு அரசியலை மட்டும் மையப்படுத்திய நகர்வே காரணமாகும்.
ஆந்தவகையில் தனிமனிதரில், அரசியல் தலைமைகளில் அதிகாரமுள்ளவர்களாக இருப்பவர்கள் அபிவிருத்திப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளவேணடும், அனர்த்தங்களின் போது ஆஜராகவேண்டும், அத்துடன் சாணக்கியத்துடன், சாமர்த்தியத்துடன் பணியாற்றவேண்டும் என்பதை ஏற்கும் மனோபாவம் அரசியல் செய்யும் எல்லோரிடத்திலும் இருப்பது அவசியம் என்றும் மக்களின் நலன்களுக்காக என்று கடமை உணர்வுடன் செயற்பட்டால் நம் மக்களைவிட விட மட்டற்ற மகிழ்ச்சி அடைபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.
எனவே அந்த தலைமத்துவ விருப்பம் உங்களுக்கு இருக்கிறதா அப்படியானால் பின்வருவனவற்றை ஒப்பிட்டுப்பாருங்கள்!
1. பதவி அதிகாரம் பட்டம் என்பன இறைவன் தந்த கொடை என்பதை சிரமேற் கொண்டு, மக்கள் அதற்கான வித்துக்கள் என்பதை மறக்காமல். பொறுப்புக்களை, கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றுவது.
2. மக்களின் எஜமானன் என்பதற்கு பதிலாக மக்களின் சேவகன் என்று சதாவும் நினைவில் கொள்வது.
3. சமூகத்தில் இடம் பெறும் கூட்டு முயற்சிகளுக்கு பங்களிப்பு செய்வது, நற் பணிகளை செய்வதற்கு முனைபவர்களை பரந்த மனதோடு ஆதரிப்பது, தட்டிக் கொடுப்பது, ஊக்கப்படுத்துவது அவற்றை விரும்புவது.
4. தன்னை விட பிறரை முற்படுத்துவது. யாரையும் குறைத்து மதிப்பிடாதது. பழிவாங்கும் எண்ணத்தை கைவிடுவது, காழ்ப்புணர்வுடன் செற்படுவதில் இருந்து விடுபடுவது.
5. ஆக்கபூர்வமான கருத்துக்களையும், விமர்சனங்களையும் வரவேற்பது, பிறரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பது.
6. ஜனநாயக மரபுகளையும்,விழுமியங்களையும் பேணுவது, மதிப்பது.
7. உரியவர்களுக்கு உரிய அந்தஸ்தையும், மதிப்பையும், கௌரவத்தையும் வழங்குவது.
8. சமயத் தலைவர்கள் மூத்தோர், துறைசார் நிபுணர்கள், கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள் முதலானோரின் தொடரான ஆலோசனைகள், வழிகாட்டல்களை பெறுவது.
9. பிறர் பற்றி கிடைக்கும் தகவல்களை முறையாக ஊர்ஜிதம் செய்வது, உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காது விவேகத்துடன் செயற்படுவது.
10. வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம் முதலான சந்தர்ப்பங்களில் பொறுமைக் காப்பது.
0 comments:
Post a Comment