ADS 468x60

31 August 2019

பொருளாதார வளர்ச்சிக்கு கால்கோலாக இருப்பது மத்திய வங்கி

எமது நாட்டைபொறுத்தவரை பல அபிவிருத்திச் செயற்பாடுகளில் மத்தியவங்கியானது பல வகையிலும் முக்கிய வகிபாகத்தினை வகித்து வருகின்றது. அவைசார்ந்த பல விடயங்களை நாம் இக்கட்டுரை மூலமாக பார்க்கலாம். இது மாணவர்களுக்கும் மற்றும் வங்கித்துறைசார்ந்தவர்களுக்கும் பயனுள்ள முறையில் இருக்கும்.

1. இறுதிக் கடன் ஈவோன் (Lender of last resort)

வர்த்தக வங்கிகளுக்கு நிதிப் பிரச்சனைகள் ஏற்படுகின்ற வேளையில் இறுதியாக கடன் கொடுக்கும் பொறுப்பு மத்திய வங்கியே பொறுப்பெடுத்துள்ளது. எதிர்பாராத விதமாக ஒரு வர்த்தக வங்கிக்கு நிதிப் பிரச்சனை ஏற்படுகின்ற போது அதனை கொடுத்து உதவும் பொறுப்பு மத்திய வங்கியே கொண்டுள்ளது. இத் தொழிற்பாட்டினை மத்திய வங்கி ஆற்றும் போது ஏற்கனவே வர்த்தக வங்கிகளினால் கழிவு செய்யப்பட்ட உண்டியல்களை மறுகழிவுடன மாற்றிக் கொடுக்கின்றது. இதனால் வர்த்தக வங்கிகளுக்கும் திரவத்தன்மை குறைந்த சொத்துகளில் முதலீடு செய்து இலாபம் உழைக்கும் சந்தர்ப்பத்தினை பெறும் வாய்ப்பு இருக்கின்றது.

25 August 2019

எழுந்த வாருங்களேன்

எங்கள் உயிர்களே வந்து சேருங்களேன்
வெற்றி நமதே சொந்த தேசம் நமதே!
வெற்றி நமதே சொந்த தேசம் நமதே!

உணர்வுகள் ஒன்றி அனைவரும் ஒன்றாய்
உரிமைகள் வெல்ல ஓர் வழி நின்றால்
வெற்றி நமதே!

குரோதங்கள் மறந்து மனங்களைத் திறந்து
வளங்களைக் காக்க கைகளைத் கோர்த்தால்
வெற்றி நமதே!

18 August 2019

தமிழனுக்கு நாடுதான் ஒன்றில்லை ஆள, நமக்கென்று ஒரு பண்பாடும் இல்லையா வாழ!

நாம் எதற்காக சண்டை போடுகின்றோம், அல்லது எதை வைத்துக்கொண்டு சண்டை போடுகின்றோம்?. நாம் தமிழர்கள், எமது கலாசாரம், பாரம்பரியம் காப்பாற்றப்பட்டு நாங்கள் ஒரு தனித்துவமான குடிகளாக சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காகவே இத்தனை சண்டை, பேச்சுவார்த்தை மற்றும் அரசியல் எல்லாமே. ஆனால் நம்மில் எத்தனை பேர் எமக்கென்று இருக்கும் கலாசாரத்தினை, பண்பாட்டை, நாகரிகத்தினை பின்பற்றுவதனூடாக நாம் மற்றவர்களின் கலாசாரத்தில் இருந்து வேறுபட்டவர்கள் எனக் காட்டுகின்றோம் என்றால், அது பூச்சியமாகவே இருக்கும்.

11 August 2019

தேர்தல் கால வாக்குறுதிகளும் தெருவில் நிற்கும் பட்டதாரிகளும்.

இன்று எந்தச் செய்தித் தலைப்பினை எடுத்தாலும் வேலையில்லாப் பட்டதாரிகள் பற்றியே பேசப்படுகின்றன. இவ்வாறான ஒரு சூழலில், ஊழியச் சந்தையில் (Labour Market) என்ன வகையான வேலைவாய்ப்புக்கள் மற்றும் திறன்கள் தேவைப்படுகின்றன? எவ்வாறு கைநிறைய சம்பளம் கிடைக்கின்றன, அத்துடன் எவ்வாறு தொழில்வாய்ப்புக்கு இன்றய இளைஞர் யுவதிகளை நெறிப்படுத்துவது என்பன போன்றவற்றினை சிந்திக்கவேண்டிய நேரமிது.

10 August 2019

அன்றும்_இன்றும்.

அந்தக் காலங்களில் பொழுதுபோக்கு என்றால் விளையாட்டு மாத்திரமே இருந்தது. எமது ஊரின் மேற்குப் புறத்தில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. அது எமது அழகான சொத்தாக இருந்தது. எங்கும் பச்சைப்புல்வெளி அங்கு ஒரு குப்பைகூடக் கிடையாது. உருண்டு பிரண்டு விளையாடி மகிழ்வோம். பாடசாலை விட்டதும் அந்த குளம்தான் தஞ்சம். இப்போதுபோல அந்தக்காலத்தில் நிறைய பிரத்தியேக வகுப்புக்களும் இருந்ததில்லை. இன்று அந்தக் குளத்தையே நாசமாக்கி விட்டார்கள். அதைப்பற்றி நான் சொல்ல வரவில்லை.
நாங்கள் சின்னவர்கள் என்பதனால் ரவுண்டப்புக்களில் பிடிபடவில்லை. ஆனால் கேம்களில் சென்றி அடிக்க களியேற்றுவதற்கு எங்களையெல்லாம் செட்டிபாளையம் கேம்புக்கு புடிச்சிக்கொண்டு போய் வேலைவாங்கியது ஞாபகம் வருகின்றது. ஆக இவர்கள் பிடித்துக்கொண்டு போகும் அளவுக்கு நாங்கள் பெரியவர்கள் இல்லை. அதனால் கொஞ்சம் பயம் இல்லாமல் விளையாடினோம்.

08 August 2019

கொள்கை பேசி ஏமாற்றும் கோமளிகளுக்காக!

கொள்கை அது எமது ஒவ்வொரு தமிழ் குடிமகனின் கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் சார்ந்த நிறைவாக இருக்கணும் முதலில். 'சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்' என்பது அனைவருக்கும் தெரியும். எமது மக்கள் அனர்த்தம், வறுமை, வேலைவாய்ப்பின்மை, திறனின்மை, குடும்பச்சுமை, கடன்சுமை, தொழில் இழப்பு காரணமாக நலிவுற்று அன்றாட வாழ்க்கையை கொண்டு நடாத்த முடியாமல் மாற்றானிடம் அடிமையாக, வேற்றானிடம் வேலையாளாக, வேண்டிய மதத்திற்கு மாற்றப்பட்டு நுண் கடனால் நுடங்கி நிற்கும் இவர்களிடம் ஏன்டா இன்னும் இன்னும் போய் கொள்கை என்று கொடுமைப்படுத்துறீங்க!

07 August 2019

அரசியன் தொழில் முயற்சியாண்மை திட்டம் அபிவிருத்திக்கான ஆரம்பமாகுமா?

நமது நாட்டை பொருளாதார ரீதியில் உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள பல வேலைத்திட்டங்களை எமது அரசாங்கம் காலத்துக்கு காலம் முன்னெடுத்து வந்துள்ளது. தற்போதைய அரசும் மக்களுக்கு தொழில் முயற்சியாண்மையை ஊக்குவிக்க ஒரு திட்டத்தினை முன்னெடுத்து, கடந்த பாதீட்டில் அதற்கான நிதி ஒதுக்கீட்டினையும் பரிந்துரை செய்திருந்தது. ஆதன் பிரகாரம் நாட்டின் பொருளாதாரத்தினை முன்னேற்றவும் முயற்சியாண்மையை ஊக்குவிக்கவும் இதுவரைக்கும் ரூபாய் 88 பில்லியன் பெறுமானமுள்ள 55,000 கடனுதவிகளை வழங்கியுள்ளது.

04 August 2019

சுற்றுச்சூழல் தூய்மை பற்றி எந்த மதம் எடுத்துரைக்கின்றது?

அனைவருக்கும் தெரியும், நாம் வாழும் இந்த பூமியில், எதிர்கால தலைமுறையும் நலமாக வாழ வேண்டுமெனில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது அவசியம். உலக நாடுகளுக்கு சவாலான பிரச்னையாக, சுற்றுச்சூழல் பாதிப்பு உருவெடுத்துள்ளது. உலகின் வெப்பநிலை உயர்கிறது. மழை குறைகிறது. அன்டார்டிகா, இமயமலை பகுதிகளில் பனிகட்டிகள் உருகுவதால், கடல்மட்டம் உயர்ந்து, தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் எழுந்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இவை இன்று அனைவருக்கும் பொதுவாக தெரிந்த விடயம்.