ADS 468x60

23 September 2019

அடி வாங்கும் போதும் அகிம்ஷையே மோதும்

சிறியோர் பெரியோர் வலியோர் என்பது
நாட்டினில் எதற்காக – வேண்டாம்
வேற்றுமை நமக்காக

சட்டம் நீதி ஒழுக்கம் எல்லாம் இருப்பது எதற்காக – அதை
சமமாய் மதித்து சகலரும் ஒன்றாய் வாழனும் அதற்காக

எமெக்கென களத்தில் எழுச்சி கொண்டு எழுவது எதற்காக
தர்மத்தை மதிக்கும் தமிழர்கள் எங்கள் உரிமை அதற்காக

21 September 2019

தமிழர்கள் இந்நாட்டின் தலைவரை தெரிவுசெய்துவிட்டனர்.

ஒரு நாடு வளர வேண்டும் என்றால் நல்ல தலைமை வேண்டும். நல்ல தலைமை வேண்டும் என்றால் சுயநலம் இல்ல தலைவன் வேண்டும்.. அவ்வாறு இல்லாத காரணத்தினால் ஓவ்வொருவரும் தமது வாழ்க்கையைக் கொணடுநடாத்த இன்று பல பிரச்சினைகள் சவால்களை எதிர்நோக்கவேண்டியுள்ளது. பொருளாதார, சமுகஈ சுற்றுச்சூழல், வேலைவாய்ப்பு, லஞ்சம், ஊழல் என பல சவால்களை நாளாந்தம் எதிர்நோக்கி வருகின்றனர்.

17 September 2019

நல்ல தலைவனை தெரிவுசெய்யும் சுய தீர்மானம் எடுக்கும் சக்தி.

நல்லிணக்கம் என்பது பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முழுமையான தேவையாக இருக்கவேண்டும். நம் நாட்டின் பன்முகத்தன்மையை பல இன, பல மத, மற்றும் பல மொழி தேசமாக உள்ளதை உணர்ந்து அதற்கமைவாக இல்லாது ஒரு நவீனமயமாக்கப்பட்ட, நிலையான, வளமான தேசமாக நமது திறனைப் பயன்படுத்தி முன்னேறுவதற்கான வழி எதுவுமில்லை. . '

14 September 2019

பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்தும்; அபிவிருத்திக்கான திட்டமிடல்

வளர்முக நாடுகள் உலக மயமாக்கத்தின் பின்னர் புதிய விடயங்களை அறிந்து கொண்டிருக்கின்றனர். இருப்பினும் எமது இலங்கை போன்ற அரசியல் சிக்கல் நிறைந்த நாடுகள் திட்டமிடல் முறையில் ஏற்படும் இழு பறியினால் ஒப்பீட்டளவில் பின் தங்கியே காணப்படுகின்றன.

அபிவிருத்தியடைந்த நாட்டிற்கும் அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டிற்கும் இடையே பாரிய இடைவெளி தொடர்ந்து அதிகரித்து செல்வதனை காணக்கூடியதாக உள்ளது. இது தலாவருமான ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் உணரப்பட்டுள்ளது.

கொக்கட்டிச் சோலை தனில் குடி கொண்ட ஈஸ்வரனே!

திக்கெட்டும் உன் பெயர் தெரியாதார் யாரும் உண்டோ
தமிழ் திகழ் மட்டு மண் வந்தமர்ந்த நீல கண்டா
நிற்கட்டும் என்று சொல்ல நீண்டெழுந்த நந்தி கண்டு
நிலை கெட்டு வெள்ளையனை நெடுந்தூரம் விரட்டியவா
தக்கித் தகதி என நடம் ஆடி நலம் அருளும்
தான்தோன்றி ஈஸ்வரனாய் தமிழீழ மண்ணின் கிழக்கே
கொக்கட்டிச் சோலை தனில் குடி கொண்ட ஈஸ்வரனே!
கொடும் பாவி எந்தனுக்கு குறை களைவதென்நாளோ!

31 August 2019

பொருளாதார வளர்ச்சிக்கு கால்கோலாக இருப்பது மத்திய வங்கி

எமது நாட்டைபொறுத்தவரை பல அபிவிருத்திச் செயற்பாடுகளில் மத்தியவங்கியானது பல வகையிலும் முக்கிய வகிபாகத்தினை வகித்து வருகின்றது. அவைசார்ந்த பல விடயங்களை நாம் இக்கட்டுரை மூலமாக பார்க்கலாம். இது மாணவர்களுக்கும் மற்றும் வங்கித்துறைசார்ந்தவர்களுக்கும் பயனுள்ள முறையில் இருக்கும்.

1. இறுதிக் கடன் ஈவோன் (Lender of last resort)

வர்த்தக வங்கிகளுக்கு நிதிப் பிரச்சனைகள் ஏற்படுகின்ற வேளையில் இறுதியாக கடன் கொடுக்கும் பொறுப்பு மத்திய வங்கியே பொறுப்பெடுத்துள்ளது. எதிர்பாராத விதமாக ஒரு வர்த்தக வங்கிக்கு நிதிப் பிரச்சனை ஏற்படுகின்ற போது அதனை கொடுத்து உதவும் பொறுப்பு மத்திய வங்கியே கொண்டுள்ளது. இத் தொழிற்பாட்டினை மத்திய வங்கி ஆற்றும் போது ஏற்கனவே வர்த்தக வங்கிகளினால் கழிவு செய்யப்பட்ட உண்டியல்களை மறுகழிவுடன மாற்றிக் கொடுக்கின்றது. இதனால் வர்த்தக வங்கிகளுக்கும் திரவத்தன்மை குறைந்த சொத்துகளில் முதலீடு செய்து இலாபம் உழைக்கும் சந்தர்ப்பத்தினை பெறும் வாய்ப்பு இருக்கின்றது.

25 August 2019

எழுந்த வாருங்களேன்

எங்கள் உயிர்களே வந்து சேருங்களேன்
வெற்றி நமதே சொந்த தேசம் நமதே!
வெற்றி நமதே சொந்த தேசம் நமதே!

உணர்வுகள் ஒன்றி அனைவரும் ஒன்றாய்
உரிமைகள் வெல்ல ஓர் வழி நின்றால்
வெற்றி நமதே!

குரோதங்கள் மறந்து மனங்களைத் திறந்து
வளங்களைக் காக்க கைகளைத் கோர்த்தால்
வெற்றி நமதே!

18 August 2019

தமிழனுக்கு நாடுதான் ஒன்றில்லை ஆள, நமக்கென்று ஒரு பண்பாடும் இல்லையா வாழ!

நாம் எதற்காக சண்டை போடுகின்றோம், அல்லது எதை வைத்துக்கொண்டு சண்டை போடுகின்றோம்?. நாம் தமிழர்கள், எமது கலாசாரம், பாரம்பரியம் காப்பாற்றப்பட்டு நாங்கள் ஒரு தனித்துவமான குடிகளாக சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காகவே இத்தனை சண்டை, பேச்சுவார்த்தை மற்றும் அரசியல் எல்லாமே. ஆனால் நம்மில் எத்தனை பேர் எமக்கென்று இருக்கும் கலாசாரத்தினை, பண்பாட்டை, நாகரிகத்தினை பின்பற்றுவதனூடாக நாம் மற்றவர்களின் கலாசாரத்தில் இருந்து வேறுபட்டவர்கள் எனக் காட்டுகின்றோம் என்றால், அது பூச்சியமாகவே இருக்கும்.