ADS 468x60

29 May 2022

நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்பக் கெட்டுப்போச்சுங்க

 குடியிருப்பு என்பது தேத்தாத்தீவின் ஜீவநாடி. மட்டக்களப்புக்கே உரிய வனப்பினையும், இதன் அருகே வளைந்தோடும் மட்டு வாவி வளம்சேர்க்க அதனருகே மருத மண்ணையும், தமிழ் பண்பாடையும் பறைசாற்றும் பண்புடைய கிராமம். தேத்தாத்தீவின் தாய் எனச் சொல்லுமளவுக்கு அதன் வயது பழமைவாய்தது. அங்கு கிட்டத்தட்ட 50 க்கும் மேல் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் அதிகம்பேர் வயல் மற்றும் மீன்பிடியில் ஈடுபட்டு தமது ஜீவனோபாயத்தினை நடாத்தி வருகின்றனர். இவர்கள் பாடசாலைகள், ஆலயங்கள், ஏனைய அரச சேவைகளைப் பெற இக்கிராமம் இருந்து கிட்டத்தட்ட 2 கி.மீ பயணம் செய்து பிரதான வீதியை அடைய ஒரே பாதையினையே பயன்படுத்துகின்றனர். இப்பாதையூடாகவே சிறியவர் தொடங்கி முதியவர் வரை பயன்படுத்தி வருகின்றனர். 

இலங்கை உணவு இல்லாத நாடுகளின் பட்டியலில் - தலைவர்கள் வெட்கப்பட வேண்டும்.

இன்றய அரச முகாமைத்துவத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நெருக்கடிகளை உருவாக்கி நெருக்கடிகளை உருவாக்கி நாட்டை ஒரு ஆபத்தான நெருக்கடி நிலைக்கு தள்ளியுள்ளது. உலகளாவிய கொரோணா தொற்றுநோய் சூறாவளியாக வீசியதை அடுத்து, சரியான எந்தவித மதிப்பீடும் இல்லாமல் இயற்கை, கரிம உரத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் இன்னும் அந்த நெருக்கடி எல்லை மீறியுள்ளது. அது தவறான முடிவு என ஜனாதிபதியும் அண்மையில் ஒப்புக்கொண்டார். ஆனால் அதற்குள் அழிவு ஆரம்பித்துவிட்டது. ஒரு காலத்தழில் கிழக்கின் தானியக் களஞ்சியம் என்று அழைக்கபபட்ட நம் நாடு அரிசியை இறக்குமதி செய்தமை இந்நாட்டின் பாரதூரமான தவறு.

26 May 2022

இன்று நாட்டில் அவசரத் தேவைக்கு 50 காசு கூட மிச்சமில்லை

எரிபொருளின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தேங்காய் எண்ணெய் விலையும் உயரும் நிலை தோன்றியுள்ளது. ஆரம்பத்தில்; இது சற்று நடைமுறைக்கு மாறானது என்று தோன்றலாம். அதாவது மத்திய கிழக்கிலிருந்து தேங்காய் எண்ணெய் வருவதில்லை. அது பெட்ரோலியமும் அல்ல. ஆனால் எரிபொருள் விலை உயரும் போது அனைத்து போக்குவரத்து செலவுகளும் உயரும். இதனால் அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. 

நம் நாட்டில் பண்டங்களின் விலை உயர்வுக்கு எப்பொழுதும் ஏதோ ஒரு காரணம் உண்டு. மழையால் காய்கறிகள் விலை உயரும். அல்லது வெயிலின் காரணமாக பயிர்கள் கருகி, காய்கறிகளின் விலை உயரும். ஒன்று ரசாயன உரம் இல்லாததால் அரிசி விலை உயரும். அல்லது உலகச் சந்தை விலை உயர்வு எண்ணெய் விலையை உயர்த்தும். இதனால் பெட்ரோலியத்திற்கும் தேங்காய் எண்ணெய்க்கும் பெட்ரோலியத்திற்கும் மனித வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொள்வது எளிது. 

22 May 2022

இன்றய தேவை தேர்தலல்ல

பொருளாதாரக் கோட்பாட்டின் படி, பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் ஒரு நாடு அந்த நாட்டு மக்களுக்கு உதவி வழங்குவது முடியாத காரியம், அது தவறானதாகவே சுட்டிக்காட்டப்படுகின்றது. அதனால் அவர்களுக்கு அனைத்து சலுகைகளும் குறைக்கப்பட வேண்டும், அத்துடன் வரிகளை உயர்த்துவதன் மூலம் அரசின் வருவாயை அதிகரிக்க வேண்டும் என்றும் உலக நிதி நிறுவனங்கள் அறிவுறுத்துகின்றன. ஆனால், மக்கள் உணர்வுடன் செயல்படும் அரசால் உலக வங்கியின் அறிவுரையை முழுமையாக ஏற்க முடியாது. அத்தகைய அரசாங்கம் பொருளாதாரக் கோட்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களை வாழ வைக்க நிபந்தனையின்றி முன்வர வேண்டும். 

18 May 2022

நீதியும், நியாயமும் இருந்தால் மட்டுமே, சுற்றுலாத்துறை மீட்சிபெறும்!

இலங்கைக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டு டொலர்வருவாயை ஈட்டித்தரும் பல நாடுகள் அந்நாட்டு மக்களை இலங்கை குறித்து கவனமாகச் செயற்படும்படி அறிவுறுத்தியுள்ளனர். நியூசிலாந்து அரசாங்கமும் அவுஸ்திரேலியா அரசாங்கமும் இலங்கை தொடர்பான தமது பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ளதுடன், அவசர தேவைக்கு தவிர இலங்கைக்கு விஜயம் செய்வதைத் தவிர்க்குமாறு தமது பிரஜைகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும், வெளிநாட்டவர்கள் தாக்கப்படக்கூடிய பொது இடங்கள் என்பனவும் நியூசிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை முழுவதும் பதிவாகியுள்ள அதிகளவான வன்முறைகள் மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு முன் இருமுறை யோசிக்க வேண்டுமென அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. பிரிட்டன் இதேபோல் எச்சரிக்கை பயண வழிகாட்டிகளை அந்த மக்களுக்கு வெளியிட்டுள்ளது.

17 May 2022

ஆரோக்கியமான நாடளுமன்றத்துக்கு ஐந்து பரிந்துரைகள்

ஒரு தடைவை நாடாளுமன்றத்தினைக் கூட்ட 90 இலட்சம் ரூபாய்களை இலங்கை செலவிடுகின்றது. இந்த இக்கட்டான நேரத்தில் இது மிக முக்கியமானதொன்றாகவே பார்க்கப்படுகின்றது. இந்த செலவினை வைத்து எந்தவித நல்ல முடிவுகளையும் எடுக்கமுடியவில்லை எனில் அதனால் மக்களுக்கு என்ன பயன்?. ஆதனால், இன்று நாட்டு மக்கள் ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தின் மீதும் கடும் கோபத்தில் உள்ளனர். ஆனால் அவ்வாறு நினைப்பதற்குக் காரணங்கள் இருக்கின்றன என்பது பெரும்பான்மையான கருத்து. இது நாடாளுமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை தகர்க்கப்பட்டிருப்பதையே காட்டுகிறது. ஆட்சியில் மக்களின் நம்பிக்கை மிகவும் முக்கியமானது. ஆட்சியாளர்களை நியமிப்பதற்கும் ஆட்சியாளர்களை அகற்றுவதற்கும் மக்களுக்கு உரிமை இருக்க வேண்டும் என்று பலர் வாதிடுகின்றனர். அது புறந்தள்ள முடியாத ஒரு வாதம்.

15 May 2022

பங்களாதேசிடம் இருந்து இலங்கை கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள்

இலங்கை தற்போது கடுமையான பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது மற்றும் இந்த மோசமான படுகுழியில் இருந்து வெளியேறுவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துவருகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வழிகாட்டுதல்களை நாடு எடுத்துள்ள அதே வேளையில், மூன்றாம் உலக நாடுகளின் மறுமலர்ச்சி (third world resurgent Nation) அனுபவம் மிகவும் பொருந்தக்கூடிய மற்றும் நடைமுறைக்கு ஏற்றதாக இருப்பதால், இந்த அண்டைய பிராந்தியத்திலிருந்து தீர்வுகளைப் பார்ப்பது பயனுள்ளது.

14 May 2022

சஜித்துக்கு வாக்கு அடித்தளம் உள்ளது. ரணிலுக்கு சர்வதேச அடித்தளம் உள்ளது.

இன்று, நம் அனைவருக்கும் தெரியும் இலங்கையின் 26 வது பிரதமராக ரணில் விக்ரமசிங்கே யாரும் எதிர்பார்க்காத வகையில் பதவியேற்றார். எமக்குத் தெரிந்த வரையில், ஜனாதிபதி கோட்டாபய முதலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமராகப் பதவி ஏற்குமாறு அழைப்பு விடுத்தார். கோத்தபாய பிரதமரானால் ஜனாதிபதி பதவியில் இருந்து விலக வேண்டும் என சஜித் தெரிவித்துள்ளார்.