எல்லா மனிதர்களையும் நம்பிவிடுவது ஆபத்து. ஒருவரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து. என ஆபிரஹாம் லிங்கன் அவர்கள் சொன்னார். உண்மை, நாம் நம்பி வாக்களித்த நம்பி இருந்த தலைவர்கள் எங்கே போய் ஒளிந்துகொண்டார்களோ தெரியவில்லை.
ஆனால் நாம் இன்று நம்பாமல் இருந்த சிங்கள மதகுருமார்கள் மற்றும் தலைவர்கள் ஆகியோர், எமது குறைந்தபட்ச உரிமையையாவது பெற்றுத்தர முன்வந்து இருப்பது பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. அவர்களின் அர்பணிப்பு அளப்பரியதாக இருக்கின்றது. இதனை தமிழர்;களாகிய நாங்கள் பெரிதும் மதிக்கின்றோம். இது எமது போராட்டத்துக்கு வலுவான பெறுமதி சேர்க்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.








