ADS 468x60

13 October 2019

மாவட்டத்தின் வறுமையை ஒழிக்கும் கிராமப்புற முயற்சியாண்மை.

எமது நாட்டில் சுதந்திரம் கிடைத்து 7 தசாப்தம் கடந்தும் பல கைத்தொழில்மயமாக்கலை நிறுவியும் இன்னும் எமது நாடு அபிவிருத்தியடைந்துவருகின்ற நாடுகளின் பட்டியலில் வறுமைக்கோட்டிற்குள் உள்ள மக்கள் தொகையினை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இருந்து விடுபடவில்லை.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழுகின்ற மொத்த சனத்தொகையில் கிட்டத்தட்ட 80 விகிதமானவர்கள்  விவசாய கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவர்களுக்கான பல புதிது புதிதாக அறிமுகப்படுத்தும் சேவைத்திட்டங்கள் உண்மையில் பாரபட்சமின்றி சென்றடைகின்றதா என்றால் இல்லை என்றே பதில் வரும். ஆதனால்தான் இன்று வறுமை என்னும் குறை வருவாய் உள்ள கூடிய குடும்பங்களைக் கொண்ட மாவட்டமாக இன்னும் முதனிலை வகுப்பது வெட்கம் வெட்கம்.

05 October 2019

இப்படியே தமிழர் அரசியல்போனால் என்னவாகும்?

நாம் இன்று அரசியலை முழுமையாக அறியமுடியாதவர்களாக, அதில் இருந்து அப்பால் வைக்கப்பட்டவர்களாக ஆக்கப்பட்டிருக்கின்றோம். இதனால் ஒவ்வொரு தடவையும் அரசியல் மூலம் நம்பிக்கை இழந்த ஒரு வர்க்கமாக நலிவுற்றவர்களை அதிகம் பெருக்கிக்கொள்ளும் இனமாக நாம் மாற்றப்பட்டுள்ளோம். இவ்வாறான நிலை தொடராமல் இருக்க என்னவகையான அரசியல் எமக்கு இன்றய நிலையில் தேவையாக இருக்கின்றது? என்பதனையே இக்கட்டுரையில் உற்றுநோக்க இருக்கின்றோம். 

01 October 2019

சிறுவர்கள்- கல்வியறிவின்மை- வறுமை ஒரு மீள முடியாத நச்சு வட்டம்

இன்றைய குளந்தைகளே நாளைய தலைவர்கள். அவர்கள்தான் விஞ்ஞானிகளாகவும், விமானிகளாகவும், ஞானிகளாகவும், வழிகாட்டிகளாகவும் என பல வடிவங்களில் இந்த உலகத்தினை முன்னே கொண்டு செல்லும் மாபெரும் சக்திகள் என்பதை இந்த உலகமே ஏற்றுக்கொண்டுள்ளது. அதனால்தான் பல அபிவிருத்தியடைந்த நாடுகள் இவர்களை வளர்த்துவிடுவதில் அதிக செலவினையும், அக்கறையினையும் செலுத்திவருவதனைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

ஆகவேதான் சிறுவர்களிடையே காணப்படும் வறுமையை கணிசமான அளவு குறைத்து இல்லாமல் செய்யும் ஒரு செயற்திட்டம் எல்லா நாடுகளிடையேயும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் உள்ளடங்கலாக முக்கியமானதொன்றாகப் பார்க்கப்படுகின்றது. 

23 September 2019

அடி வாங்கும் போதும் அகிம்ஷையே மோதும்

சிறியோர் பெரியோர் வலியோர் என்பது
நாட்டினில் எதற்காக – வேண்டாம்
வேற்றுமை நமக்காக

சட்டம் நீதி ஒழுக்கம் எல்லாம் இருப்பது எதற்காக – அதை
சமமாய் மதித்து சகலரும் ஒன்றாய் வாழனும் அதற்காக

எமெக்கென களத்தில் எழுச்சி கொண்டு எழுவது எதற்காக
தர்மத்தை மதிக்கும் தமிழர்கள் எங்கள் உரிமை அதற்காக

21 September 2019

தமிழர்கள் இந்நாட்டின் தலைவரை தெரிவுசெய்துவிட்டனர்.

ஒரு நாடு வளர வேண்டும் என்றால் நல்ல தலைமை வேண்டும். நல்ல தலைமை வேண்டும் என்றால் சுயநலம் இல்ல தலைவன் வேண்டும்.. அவ்வாறு இல்லாத காரணத்தினால் ஓவ்வொருவரும் தமது வாழ்க்கையைக் கொணடுநடாத்த இன்று பல பிரச்சினைகள் சவால்களை எதிர்நோக்கவேண்டியுள்ளது. பொருளாதார, சமுகஈ சுற்றுச்சூழல், வேலைவாய்ப்பு, லஞ்சம், ஊழல் என பல சவால்களை நாளாந்தம் எதிர்நோக்கி வருகின்றனர்.

17 September 2019

நல்ல தலைவனை தெரிவுசெய்யும் சுய தீர்மானம் எடுக்கும் சக்தி.

நல்லிணக்கம் என்பது பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முழுமையான தேவையாக இருக்கவேண்டும். நம் நாட்டின் பன்முகத்தன்மையை பல இன, பல மத, மற்றும் பல மொழி தேசமாக உள்ளதை உணர்ந்து அதற்கமைவாக இல்லாது ஒரு நவீனமயமாக்கப்பட்ட, நிலையான, வளமான தேசமாக நமது திறனைப் பயன்படுத்தி முன்னேறுவதற்கான வழி எதுவுமில்லை. . '

14 September 2019

பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்தும்; அபிவிருத்திக்கான திட்டமிடல்

வளர்முக நாடுகள் உலக மயமாக்கத்தின் பின்னர் புதிய விடயங்களை அறிந்து கொண்டிருக்கின்றனர். இருப்பினும் எமது இலங்கை போன்ற அரசியல் சிக்கல் நிறைந்த நாடுகள் திட்டமிடல் முறையில் ஏற்படும் இழு பறியினால் ஒப்பீட்டளவில் பின் தங்கியே காணப்படுகின்றன.

அபிவிருத்தியடைந்த நாட்டிற்கும் அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டிற்கும் இடையே பாரிய இடைவெளி தொடர்ந்து அதிகரித்து செல்வதனை காணக்கூடியதாக உள்ளது. இது தலாவருமான ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் உணரப்பட்டுள்ளது.

கொக்கட்டிச் சோலை தனில் குடி கொண்ட ஈஸ்வரனே!

திக்கெட்டும் உன் பெயர் தெரியாதார் யாரும் உண்டோ
தமிழ் திகழ் மட்டு மண் வந்தமர்ந்த நீல கண்டா
நிற்கட்டும் என்று சொல்ல நீண்டெழுந்த நந்தி கண்டு
நிலை கெட்டு வெள்ளையனை நெடுந்தூரம் விரட்டியவா
தக்கித் தகதி என நடம் ஆடி நலம் அருளும்
தான்தோன்றி ஈஸ்வரனாய் தமிழீழ மண்ணின் கிழக்கே
கொக்கட்டிச் சோலை தனில் குடி கொண்ட ஈஸ்வரனே!
கொடும் பாவி எந்தனுக்கு குறை களைவதென்நாளோ!