ADS 468x60

17 November 2019

இலங்கையின் புதிய ஜனாதிபதியும் முன்னே உள்ள சவால்களும்.

வணக்கம், தேர்தலுக்கான நாட்களை எண்ணிக்கொண்டிருந்தோம், இப்போது அது முடிவடைவடைந்துவிட்டது. நாட்டின் எட்டாவது புதிய தலைவரை அமோக வாக்குவீதத்தில் வெற்றிபெறச் செய்துள்ளனர். அதற்கு முதலில் வெள்ளிச்சரம் தனது உளம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகின்றது.

நாடும், நாட்டு மக்களும் பல இன்னல்களை சந்தித்து, கடந்த அரசாங்கத்தை வெறுத்து அந்த வெறுப்பினை கோபத்தினை புதிய கட்சி, புதிய வேட்பாளர் ஒருவரை தெரிவுசெய்வதன் ஊடாக தீர்த்துள்ளனர்.

08 November 2019

மட்டக்களப்பு மற்றும் யாழ்பாணம்: இனத்தால் ஒன்றானாலும் தேவையால் மாறுபட்டவர்கள்- ஐனாதிபதி தேர்தல் 1982-2015.

ஆய்வுக்கட்டுரை 

பின்புலம்.
வடகிழக்கில் உள்ள தமிழ் வாக்காளர்கள் பல தேர்தல் சூழலை கடந்து வந்த அனுபவசாலிகள். பல விதமான தேர்தல்களை பலவிதமான மனிதர்களுடன், கட்சிகளுடன், கொள்கைகளுடன், அதனால்  நாம் இத்தனை காலமும் வடக்குடன் ஒப்பிடும்பொழுது மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தின் கடந்துவந்த தேர்தல் களம், முற்றிலும் மாறுபட்டது, இந்த ஆண்டு ஒரு புதிய ஐனாதிபதியினையும் அடுத்த ஆண்டு ஒரு புதிய பிரதமரினையும் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு வாய்ந்த ஒரு கூட்டமாக வாக்காளர்கள் பார்க்கப்படுகின்றனர். 

வேறுபட்ட வாக்குப் பதிவுகள் கீழுள்ள அட்டவணையில் ஆண்டு மற்றும் மாவட்டம் கட்சி என்ற ரீதியில் தரப்பட்டுள்ளது

Source :https://en.wikipedia.org

05 November 2019

விவசாயிகளின் குரல்வளையை நசிக்கும் வெட்டுவாய்ப் பிரச்சாரம்.

இன்று ஒரு புதிதான சற்று விசனமான செய்தி ஒன்று பரவி வருவதனைப் சமுகவலைத் தளங்களில் பார்க்ககூடியதாக இருக்கின்றது. அது, திடீரென வந்த காட்டுவெள்ளம் காரணமாக இம்முறை மட்டக்களப்பில் செய்கை பண்ணப்பட்டுள்ள 150,000 ஏக்கர் வயல் நிலங்களில் கிட்டத்தட்ட 20-30 வீதம் வரையான வாவிக்கரையை அண்டிய வெறும் ஓரிருவார இளம் வேளாண்மைப் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளமை அனைவருக்கும் தெரிந்ததே.

இவற்றின் மூலம் இந்த வெள்ளநீர் ஆரம்பத்திலேயே வடிந்து ஓடாவிடின் எமது மாவட்ட விவசாயிகள் பெறும் சுமார் 20-30 வரையான மெற்றிக்தொன் விளைச்சல் பாதிக்கப்படலாம் என்பது எனது கணிப்பு.

29 October 2019

இருவயது உலக ஆசான்- சுஜித்

என்ன வளம் திருநாட்டில் இல்லை
இந்தியாவே நாசாவின் பிள்ளை
உலகிற்கு உணவூட்டும் நாடு
ஊiமையும பேசிய இறை வீடு

விஞ்ஞானமும் அதை மிஞ்சிய மெய்ஞானமும்
அஞ்ஞானம் அகற்ற அருகதையான சொத்து
இருந்தும் பிள்ளையை எடுத்தென்ன செத்து

26 October 2019

அரசியலை தீர்மானிப்பது பொருளாதார வாக்குறுதிகளா?

ஒரு நாட்டின் ஜனநாயகதினை பலப்படுத்தும் அதே நேரம் பொருளாதாரத்தினை பலவீனப்படுத்தும் பாரிய செலவீனமாக தேர்தல் பார்க்கப்படுகின்றது. இலங்கையில் ஒவ்வொரு தேர்தல் நிறைவடையும் தறுவாயிலும் நமது நாடு செலவின் உச்சத்துக்கே சென்று விடுகின்றது. அதற்காக எமது பொருளாதாரம் பாரிய விலைகொடுக்க வேண்டி நேருவது அனைவருக்கும் தெரிந்த விடயம். 

இவ்வாறான தேர்தல் காலங்களில் எமது பொருளாதாரம் மூன்று வகையான சவால்களை எதிர்நோக்குகின்றது அவற்றையே இங்கு பார்க்க உள்ளோம். அதற்கு முன்னர் ஏன் பொருளாதாரம் வாக்களிப்பில செல்வாக்கு செலுத்தவேண்டும் என்பதனை சற்று பார்த்துவிட்டு வரலாம்.

13 October 2019

மாவட்டத்தின் வறுமையை ஒழிக்கும் கிராமப்புற முயற்சியாண்மை.

எமது நாட்டில் சுதந்திரம் கிடைத்து 7 தசாப்தம் கடந்தும் பல கைத்தொழில்மயமாக்கலை நிறுவியும் இன்னும் எமது நாடு அபிவிருத்தியடைந்துவருகின்ற நாடுகளின் பட்டியலில் வறுமைக்கோட்டிற்குள் உள்ள மக்கள் தொகையினை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இருந்து விடுபடவில்லை.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழுகின்ற மொத்த சனத்தொகையில் கிட்டத்தட்ட 80 விகிதமானவர்கள்  விவசாய கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவர்களுக்கான பல புதிது புதிதாக அறிமுகப்படுத்தும் சேவைத்திட்டங்கள் உண்மையில் பாரபட்சமின்றி சென்றடைகின்றதா என்றால் இல்லை என்றே பதில் வரும். ஆதனால்தான் இன்று வறுமை என்னும் குறை வருவாய் உள்ள கூடிய குடும்பங்களைக் கொண்ட மாவட்டமாக இன்னும் முதனிலை வகுப்பது வெட்கம் வெட்கம்.

05 October 2019

இப்படியே தமிழர் அரசியல்போனால் என்னவாகும்?

நாம் இன்று அரசியலை முழுமையாக அறியமுடியாதவர்களாக, அதில் இருந்து அப்பால் வைக்கப்பட்டவர்களாக ஆக்கப்பட்டிருக்கின்றோம். இதனால் ஒவ்வொரு தடவையும் அரசியல் மூலம் நம்பிக்கை இழந்த ஒரு வர்க்கமாக நலிவுற்றவர்களை அதிகம் பெருக்கிக்கொள்ளும் இனமாக நாம் மாற்றப்பட்டுள்ளோம். இவ்வாறான நிலை தொடராமல் இருக்க என்னவகையான அரசியல் எமக்கு இன்றய நிலையில் தேவையாக இருக்கின்றது? என்பதனையே இக்கட்டுரையில் உற்றுநோக்க இருக்கின்றோம். 

01 October 2019

சிறுவர்கள்- கல்வியறிவின்மை- வறுமை ஒரு மீள முடியாத நச்சு வட்டம்

இன்றைய குளந்தைகளே நாளைய தலைவர்கள். அவர்கள்தான் விஞ்ஞானிகளாகவும், விமானிகளாகவும், ஞானிகளாகவும், வழிகாட்டிகளாகவும் என பல வடிவங்களில் இந்த உலகத்தினை முன்னே கொண்டு செல்லும் மாபெரும் சக்திகள் என்பதை இந்த உலகமே ஏற்றுக்கொண்டுள்ளது. அதனால்தான் பல அபிவிருத்தியடைந்த நாடுகள் இவர்களை வளர்த்துவிடுவதில் அதிக செலவினையும், அக்கறையினையும் செலுத்திவருவதனைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

ஆகவேதான் சிறுவர்களிடையே காணப்படும் வறுமையை கணிசமான அளவு குறைத்து இல்லாமல் செய்யும் ஒரு செயற்திட்டம் எல்லா நாடுகளிடையேயும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் உள்ளடங்கலாக முக்கியமானதொன்றாகப் பார்க்கப்படுகின்றது.