வணக்கம், தேர்தலுக்கான நாட்களை எண்ணிக்கொண்டிருந்தோம், இப்போது அது முடிவடைவடைந்துவிட்டது. நாட்டின் எட்டாவது புதிய தலைவரை அமோக வாக்குவீதத்தில் வெற்றிபெறச் செய்துள்ளனர். அதற்கு முதலில் வெள்ளிச்சரம் தனது உளம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகின்றது.
நாடும், நாட்டு மக்களும் பல இன்னல்களை சந்தித்து, கடந்த அரசாங்கத்தை வெறுத்து அந்த வெறுப்பினை கோபத்தினை புதிய கட்சி, புதிய வேட்பாளர் ஒருவரை தெரிவுசெய்வதன் ஊடாக தீர்த்துள்ளனர்.









