ADS 468x60

06 May 2020

கிராமமட்டத்திலான மக்களை மையப்படுத்திய பல்தேவைக் கம்பனிகளின் இன்றய தேவை.

நாம் தூக்கி ஓதிக்கியவற்றினை இன்று தூக்கி நிறுத்தும் ஒரு உன்னத உணர்வை இன்றய நிலை தோற்றுவித்துள்ளது. இந்த உணர்வுடனே நாம் பல மாற்றங்களைக் கொண்டுவர ஒவ்வொரு புத்திஜீவிகளும் சிந்தித்து முன்மொழிய வேண்டிய நேரமிது. 

விவசாயத் துறைக்கு முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில், தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் உற்பத்தி செய்யும் விவசாயப்; பொருட்களை கொள்வனவு செய்யவும்;, சேமித்து வைப்பதற்கும், விநியோகிப்பதற்கும் ஒரு பொறிமுறையை இயக்குமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அண்மையில் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அந்தவகையில்; மாவட்ட அளவில் உள்நாட்டு தொழில்கள் மற்றும் பிற உற்பத்தித் துறைகளை வளர்ப்பதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

05 May 2020

சுதேசிய வழிமுறைகளினூடான தன்னிறைவை முதன்மைப்படுத்தும் கொவிட்-19

விவசாயமும் மருத்துவமும்.

இன்று கொவிட்- 19 வைரஸ் அனைத்து நாடுகளையும், முக்கியமாக விவசாயம் மற்றும் மருத்துவ அறிவியலில் அதன் தன்னிறைவை ஆய்வு செய்ய அழைத்து வந்துள்ளது. இந்த இரண்டு துறைகளும் நமது பண்டைய பாரம்பரியத்தில் கைகோர்த்துக் கொண்டிருப்பதாகக் காணப்பட்டது. இவை நமது மக்களின் நல்வாழ்வோடு மட்டுமல்லாமல் மண்ணின் நல்வாழ்வையும் அதனோடு தொடர்புடைய மரங்கள் மற்றும் பிற உயிரினங்களின் பாதுகாப்பினையும் தொடர்புபடுத்தின.  

14 April 2020

நான்கு மில்லியன் தொழிலாளர்கள் வீட்டில் முடக்கம்.

இலங்கையில் 6 மாவட்டங்களில் விதிக்கப்பட்ட 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு அதன் மூன்றாவது வாரமாக நீடிக்கிறது. பொது மக்களுக்கு (சேவையில் உள்ளவர்கள் அல்லாத) தொடர்ந்தும் கஷ்டங்கள் சொல்லமுடியாதவை, அவற்றை அவற்றை நாம் யாரும் புறக்கணிக்க முடியாது. 

முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் மற்றும் பஸ் ஓட்டுநர்கள் மற்றும் பஸ் நடத்துனர்கள் என, நாளாந்த வருமானத்துக்காக எமதுநாட்டில் வேலைசெய்யும் தொழிற்படையில் மொத்தமாக கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பேர் இருக்கின்றனர். அதுபோல் தினசரி கூலிவேலை செய்து சம்பாதிக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், காய்கறி மற்றும் மீன் விற்பனையாளர்கள் போன்றவர்கள் சுமார் 2.5 மில்லியன் மக்கள் தமது சுயதொழிலில் ஈடபடுகின்ற மக்கள். 

கொரோணா: இலங்கைக்கு சந்தர்ப்பமா சறுக்கலா?

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவுவதால் உலகம் முழுவதும் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளது, மேலும் அனைத்து நாடுகளும் தங்கள் தங்கள் குடிமக்களை ஊரடங்கு உத்தரவுபோட்டு வெளியில் உலாவ விடாமல் வீட்டுக்குள்ளேயே முடக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

13 April 2020

அனைவருக்கும் பாதுகாப்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

இந்த வார இறுதியில், இலங்கையர்கள் தங்களது அனைத்து இயக்கங்களை தடைசெய்த உலகளாவிய தொற்றுநோயின் இருள்சூழ்ந்த மேகத்தின் கீழ் முக்கியமான தேசிய புத்தாண்டு மற்றும் மத நிகழ்வுகளை கொண்டாடுகிறார்கள். உண்மையில், ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட குறுகிய காலங்களைத் தவிர, இவர்கள்; வீடுகளில் இருந்து ஒருபோதும்; வெளியேற முடியவில்லை, அதுவும் சில பகுதிகளில் மட்டுமே அதுமுடியுமாக இருக்கின்றது.

12 April 2020

நாடு எதிர்நோக்கும் பிரச்சினையும் புதுவருட எதிர்வுகூறலும். #COVID19

இன்று மக்கள் பாரிய சவால்களை எதிர்கொண்டு வாழ்வாதாரம் முதற்கொண்டு தமது வாழ்க்கைக்கே ஆதாரம் இல்லை என்ற நிலையில் இலெட்சக்கணக்கான மக்கள் வீட்டில் முடங்கிய நிலையில் புத்தாண்டு பிறக்க இருக்கின்றது. ஆனால் வெறுமனே தமக்கிடையே பாரம்பரிய புத்தாண்டு வாழ்த்துக்களை மாத்திரம் தொலைவில் இருந்து தொலைபேசியில் பரிமாறிக்கொள்ளும் புத்தாண்டு வாழ்த்துக்கள் மூலம் ஒரு மகிழ்ச்சி ஊற்றெடுக்கும் என நம்புகின்றோம். அது ஒரு பிரகாசமான மற்றும் வளமான ஆண்டின் எதிர்பார்ப்பை விட அதிகமாக இருக்கும்;.

ஊரடங்கு காலத்தில் புதுவருடம் பிறப்பது வரலாற்றில் முதல்தடவையல்ல! #COVID19

இந்த பண்டிகை காலங்களில் நாடு ஊரடங்கு உத்தரவின் கீழ் இருப்பது சமகால வரலாற்றில் முதல் தடவையல்ல. 1971 ஆம் ஆண்டில், ஏப்ரல் 5 ஆம் தேதி தொடங்கிய தெற்கு இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட தூண்டுதல் அனைத்து நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தியது.
அதுபோல மூன்று தசாப்த கால வடகிழக்கு கிளர்ச்சியின் போது ஒரு முறை அல்ல பலதடவைகள், பாரம்பரிய சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு அனைத்து தீவுக்குமான ஊரடங்கு உத்தரவின் கீழ் நாட்டோடு சீர்குலைந்தது.

11 April 2020

இன்றய உணவுத்தட்டுப்பாடு அன்றய நீர்வள நாகரிகத்தை நினைவுபடுத்துகின்றது. #COVID-19

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் இலங்கையர்கள் 'உணவுப் பற்றாக்குறையை' சந்தித்து வருகின்றனர். உணவுத்தட்டுப்பாடானது புதிதாக இந்த வைரஸ் தொற்று முடக்கத்தினால் மாத்திரமல்ல அண்மைக்காலமாக ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றம் காரணமாக வரும் வரட்சி மற்று வெள்ளப்பெருக்குக் காரணமாகவும் அவை ஏற்பட்டு வந்துள்ளது. எமது நாட்டினுடைய பொருளாதார நிலையங்களில் கொணடடுவருகின்ற காய்கறிகள் அழுகக்கூடும் என்று ஏகப்பட்ட கதைகள் பரவி இருந்தாலும்;, மக்கள் சுகாதார விதிமுறைகளை சரிவரப் பின்பற்றாததாலும் அவற்றை மூடுவதற்கு அரசாங்கம் உறுதியான முடிவை எடுக்க வேண்டியிருந்தது.