ADS 468x60

27 November 2020

உறங்கியும் உறங்காத அற்புத வரலாறு!

 உறங்கியும் உறங்காத அற்புத வரலாறு 

உலகத்தில் நினைக்காட்டா தமிழனா நீ கூறு


வாய்ப்பேச்சில் வீரர்களாய் வாய்தவர்கள் கண்டேன்

வாய்பேசா மிருகங்களை வதைத்தவர்கள் கண்டேன்

அரசியலில் அராஜகங்கள் புரிந்தவர்கள் கண்டேன்

ஆள்வைத்து அடித்தவீர ஆம்பளைகள் கண்டேன்

13 November 2020

இப்படித்தான் இம்முறை தீபவளி இருக்கவேண்டும்!

நண்பர்கள் மற்றும் வெள்ளிச்சரம் வாசகர்கள் அனைவருக்கும் முதலில் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்! 

இது பண்டிகைக்காலம் அதனால் நீங்கள் தீபாவளி கொள்வனவு செய்ய துணிக்கடை, மளிகைக்கடை, நகைக்கடை செல்லும்போது கொரோனா இன்னும் நம்மைவிட்டு போகவில்லை என்பதை நினைவுபடுத்தி கொண்டு தனிமனித, சமுக இடைவெளியைக் கட்டாயம் கடைப் பிடியுங்கள். கடையில் மற்றவர்கள் மறந்தாலும் வாங்கச் செல்லும் நாம் மறக்கவே கூடாது.

நீங்கள் செல்லும்போது மாஸ்க் கட்டாயம் அணிந்து கொள்ளுங்கள். எந்தக் கடையில் பொருள்கள் வாங்கச் சென்றாலும், கடைக்குள் செல்வதற்கு முன்பும், வெளியே வரும்போதும் கட்டாயம் சானிடைசரால் கையை சுத்தம் செய்ய தவறாதீர்கள்.

12 November 2020

இப்படியும் ஒரு கல்வியை நாம் நினைக்கவில்லை!

கோவிட்-19 தொற்றுநோய் உலகளவில் கல்வி முறைகளை பாதித்துள்ளது, இது பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்விக் கல்லூரிகளை மூடுவதற்கு வழிவகுத்தது. கோவிட்-19 இன் பரவலைக் குறைக்கும் முயற்சியில் உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான அரசாங்கங்கள் கல்வி நிறுவனங்களை தற்காலிகமாக மூட முடிவு செய்தன என்பது நாம் அறிந்ததே.

அந்தவகையில், மிகமுக்கியமாக இந்த வளர்ந்து வருகின்ற நாடுகளில் அதிலும் எம்போன்ற யுத்தத்தினால் மற்றும் வேறுபல அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள பிராந்தியங்களுக்குள் ஏற்கனவே கல்வி பின்னடைந்துள்ள இந்தச் சூழலில், இது நமக்கு விழுந்த பேரிடியாகவே பார்க்கப்படுகின்றது.

இவற்றையெல்லாம் வெற்றிகொள்ளும் மனப்பாங்கை நாம் அனைவரும் சிந்தித்து வளர்த்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் நாம் உண்மையான வெற்றியாளர்களாக கருதப்படுவோம். இதற்கு அனைத்து வகையான சுகாதார பாதுகாப்பு முறைகளையும் நாம் நிச்சயம் கடைப்பிடித்து வாழப்பழகவேண்டும்.

11 November 2020

நாடு கொரோணாவால் எதிர்நோக்கும் சவால்களுக்குள் நலிவுறும் வாழ்வாதாரம்: ஒரு பொருளியல் ஆய்வு.

கொரோனா ஊரடங்கு மார்ச் இல் ஆரம்பித்து பின்னர் சுமூக நிலை தோன்றி பின்னர் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தில் வளர்ந்த பெரிய நாடுகள்கூட கட்டுப்படுத்த முடியாத இந்த கொரோனா வைரஸ் பாதிப்பை (கோவிட்-19), நமது அரசாங்கங்கள் ஊரடங்கை அமுல்படுத்தி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதை பல நாடுகளும், உலக சுகாதார அமைப்பும் பாராட்டியுள்ளன. ஆனால், இதன் மறுபக்கம், மோசமான பொருளாதார வாழ்வாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதைக் கண்கூடாக உணர முடிகிறது. 

சென்ற மாதத்திலிருந்து கொவிட்-19 இன் புதிய அலை வாழ்வாதாரங்களுக்கும் பொருளாதாரத்திற்கும் கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளது. வறுமை, பட்டினி மற்றும் உயிர் இழப்பிற்கு வழிவகுப்பதுடன், அண்மைக்காலமாக மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை மேலும் இழக்க நேரிடும் என்பதால் பசியும் பட்டினியும் தாண்டவமாடத்துவங்கியுள்ளது. 

10 November 2020

கொரோணாவும் நாட்டின் பொருளாதார மாற்றமும்: ஒரு ஆய்வு.

உலக மக்கள்தொகையில் கால் பகுதியினர் தற்போது கொரோனாவினால் ஒரு இறுக்கமான கட்டுப்பாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். சமீபத்திய மனித வரலாற்றில் முதல்முறையாக, கொரோனா வைரஸானது பொருளாதாரம் இந்த உலகில் முதலில் வர வேண்டும் என்ற கட்டுக்கதையை சிதைத்துவிட்டது. கொவிட்-19 தொற்றுநோயைக் கையாளும் போது பொது சுகாதார சவால்கள் சந்தேகத்திற்கு இடமின்றி மற்ற எல்லா விடயங்களுக்குள்ளும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றாலும், தற்போதைய சூழ்நிலையின் பொருளாதார செலவுகளை புறக்கணிப்பது விவேகமற்றது என்னே எண்ணத் தோணுது.

உலகத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்தான கொரோணா தொற்றால் பல எதிர்மறை மாற்றங்களை உண்டுபண்ணி இழப்புகளை தோற்றுவித்தவண்ணம் உள்ளன. சுகாதார, சமுக மற்றும் பொருளாதார சவால்களை இதனால் எதிர்கொண்டுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்கும். இவ்வாறான பாதிப்பு எந்தவகையில் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது, அது எவ்வாறான அரசின் கொள்கை மாற்றத்துக்கு தூண்டுகோலாக இருந்துள்ளது? அதன் எதிர்கால பொருளாதார அரசியல் தன்மை எவ்வாறு அமையப்போகின்றது என்பன பற்றி இந்தக் கட்டுரையில் ஆய்வுசெய்யப்பட்டுள்ளது.

08 November 2020

"வேலைத்தளங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாரியசவால்கள்- கொவிட்-19"

 'வீட்டிலிருந்து வேலை செய்வது' (Work from home) என்பது கொவிட்-19 ஆல் புதிதாகத் தூண்டப்பட்ட ஒரு முறையாக இருக்கின்றது.  ஆனால் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களிடமிருந்து அதிக உற்பத்தித்திறனை ஊக்குவிக்க விரும்பினால், அவர்கள் வீட்டிலிருந்து வேலையை ஒரு பாலின முன்னோக்குடன் (gendered perspective) வேறுபாடற்ற நிலையில் அணுக வேண்டும். மற்றும் புதிய கொள்கைகளை உருவாக்கும்போது தற்போதைய  நிலையைக் கருத்தில்கொண்டு உருவாக்க வேண்டும் என்று ஒரு சமீபத்திய ஆய்வு சுட்டிக்காட்டுகின்றது. இந்த ஆய்வானது; உற்பத்தித்திறனுடைய பெண் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை கருத்தில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

07 November 2020

நாம் ஏற்றுமதிசார் உற்பத்தியாளர்களாக மாறுவதற்கு சிந்திக்கவேண்டும்

உலகம் படிப்படியாக பல புரட்சிகளைச் செய்து ஒரு கண்டத்துக்கும் இன்னொரு கண்டத்துக்கும், ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டிற்கும் இடையிலான தொடர்பானது ஒரு கிராமத்திற்குள் நடப்பதுபோல் மாறி அதை 'உலகமயமாதல்' என்ற பதம் கொண்டு அழைத்து வந்தனர். ஆனால் இந்த தொடர்புகள் கொரோணா வைரஸ் பரவல் காரணமாக இன்று துண்டிக்கப்பட்டுள்ளது. 

ஒரு நாட்டில் செய்யும் மிகை உற்பத்தியை ஏற்றுமதி செய்தும், இன்னொரு நாட்டிற்கு மிகைத் தேவையாக இருக்கின்ற பொருட்களை இறக்குமதி செய்தும், வர்தகம் உலகத்தின் ஒரு மூலையில் இருந்து இன்னொரு முலைக்கு 24 மணித்தியாலங்களில் பரிமாறப்பட்டன. இதனைக் கருத்தில்கொண்டு இலங்கையிலும் பல தொழிற்கிராமங்கள், தொழிற்பேட்டைகள், வர்த்தக வலயங்கள் என முயற்சியாளர்களை பெருக்கி வர்த்தகத்தினை வளர்த்துக்கொண்டனர். ஆனால் இவையெல்லாம் இந்தக் கொரோணாவால் கணப்பொழுதில் மாறிவிட்டதனை அவதானித்து வருகின்றோம். அதனால்தான் கிராமத்துக்குள் இருப்பனவற்றையே இன்று பரிமாறிக்கொள்ளும் நிலையில் அந்தக் கிராமம் இன்று உலகமாக விரிந்துவிட்டதனை காணலாம்;. இவ்வாறு அந்த அந்த மக்களுக்கு தேவையானவற்றை அவர்களே உற்பத்தியாக்கிக்கொள்வதனை தன்னிறைவுப் பொருளாதாரம் என்றழைத்தனர்.

06 October 2020

மீண்டும் கோவிட்-19 சொல்லித்தரும் பாடம் என்ன?

ரு புதிய கோவிட்19 சந்தேகநபர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டு, அமைதியாக இருந்த ஞாயிற்றுக் கிழமையன்று திடுக்கிடும்  செய்தி ஒன்று பொதுமக்களால் பெறப்பட்டது. ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு தொழிலாளி ஒருவர் கொரோணா வைரஸ் பாதிப்புள்ளதனை பரிசோதித்துக் கண்டறிந்துள்ளனர். இது கோவிட் -19 மீண்டும் எழுச்சி பெற்றால் இலங்கை எவ்வளவு பாதிக்கப்படக்கூடியது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, ஆகவே நாம் ஒவ்வொருவரும் முன்னெச்சரிக்கையினை வலுப்படுத்தவேண்டிய நிலையில் உள்ளோம்.