ADS 468x60

13 July 2022

கவனமாக வெல்ல வேண்டிய ஒரு அரசியல் போர்.

எது எவ்வாறு நடந்தாலும், உணர்சி அரசியலுக்கு அப்பால் சிந்திக்கவேண்டிய தருணம் இது. அந்தவகையில் இந்த இக்கட்டான நேரத்தில் நமக்கு மிக முக்கியமான காரணியாக கருதப்படவேண்டியது அரசியலமைப்பு. அரசியலமைப்பு என்பது நாட்டின் அடிப்படை சட்டம். அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் மற்றும் சட்டம் மாற்றப்பட வேண்டும் என்றால்; அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் செய்யப்பட வேண்டும். இல்லை என்றால் தற்கால நாகரீகத்திலிருந்து பின்னோக்கி நகர்வோம். அரசியலமைப்பை கிழிக்க வேண்டும், ஜனநாயகத்தை நசுக்க வேண்டும் என்று யாராவது கூச்சலிட்டால்; அதை எப்படி ஏற்பது. இறுதியாக அரசியலமைப்பின் பிரகாரம் அதிகாரம் பரிமாறப்பட்டு அதிகாரம் கைவிடப்பட வேண்டும் என்பதை நாம் நன்கு விளங்காமல், கல்லாதவர்போல் இல்லாதவற்றை சமுகவலைத்தளங்களில் பதிவிடுவது வேடிக்கை.

முதலாளித்துவம் சோசலிசம் இவற்றுக்கப்பால் ஜனநாயகம் என்று ஒரு சக்தி உள்ளது அது மிகவும் ஆபத்தானது.

மிக மிக ஆபத்தான முறையில் கையாளக்கூடிய இரண்டு மாபெரும் சக்தி உலகில் உள்ளது. ஒன்று மக்கள் சக்தி மற்றது குடிநீர் இவை இரண்டும்தான் மிகவும் ஆபத்தான முறையில் கையாளக்கூடியவை. ஜனநாயகம் பலவீனமாக இருக்கும் இடங்களில் மக்கள் சக்தி கிளர்ந்தெழுந்து அரசாங்கத்தை கவிழ்க்கிறது. 

அவ்வாறு ஆட்சி மாற்றத்தை கட்டுப்படுத்த முடியாவிட்டால், நூறு இருநுர்று அல்லது இருபதாயிரம் அல்லது முப்பதாயிரம் பேர் கூட கொல்லப்பட வாய்ப்புள்ளது. அதேபோல குடிநீர் விநியோகத்தில் விஷம் கலந்தாலும் இதேதான் நடக்கும். அப்போது ஆட்சி மாறாமல் விஷம் கலந்த தண்ணீரைக் குடித்து ஏழாயிரம், எட்டாயிரம் பேர் இறக்கலாம். நாட்டில்; தற்போதய அரசியல் ஒரு குழப்பமாக உள்ளது. 

10 July 2022

இத்துடன் முடியவில்லை, இது அரசியலின் அடுத்தபடி!

எமது நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய மக்கள் எழுச்சியாக அறியப்படும் ஜூலை 09 போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவி விலகும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், அன்றிரவே ஜனாதிபதி எதிர்வரும் புதன்கிழமை ஜூலை 13 பதவி விலகுவதாக சபாநாயகருக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தார். சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவாக பதவியை இராஜினாமா செய்ய தயாராக இருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

07 July 2022

பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள நாம் இன்று கருத்தில்கொள்ளவேண்டியவை!

நம்மில் பலர் இன்று நெருக்கடியென்றால் என்ன என சொல்லாமலே அனுபவித்து அறிந்துகொண்டிருக்கின்றார்கள். நான் உட்பட யாரும் கண்டிராத பதிய ஒரு இறுக்கத்துள் வாழ இன்று எமத மக்களுக்கு இந்த ஆட்சியாளர்கள் ஏற்படுத்திக்கொடுத்திருக்கின்றார்கள். அதனால் இன்று எமது தேசத்தில் பொருளாதார நெருக்கடி நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு அதி உச்சத்துக்கு வந்துள்ளது. அதிலிருந்து விடுபடுவது ஒரு சாதாரண விடயமல்ல. வாங்கிய கடனை அடைக்க முடியாமல் ஒருபுறம். மறுபுறம், எரிபொருள் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தேவையான அந்நியச் செலாவணி நம்மிடம் இல்லாத நிலை. இவ்வாறான இந்த அபாய சூழ்நிலையிலிருந்து வெளியேற வழி இல்லை. அதற்கு என்ன செய்யலாம்? இதை ஒரு பொருளாதார ஆய்வாளன் என்ற நிலையில் இருந்து நோக்க விரும்புகின்றேன்.

06 July 2022

இன்பமே சூழும் இன்பா நீ எங்கே!

ஒரு மாசத்தின் முன் நண்பர் இன்பராசனை சந்திக்கக் கிடைத்தது.
'சீலா எல்லாம் கடவுள் செயல், அவருடைய கையில் ஒப்படைத்துள்ளேன் என் பாரத்தை' என கவலையுடன் தெரிவித்தார். இருப்பினும் பழய நினைவுகளை நான் அவனுடன் இருந்து மீட்டும்போது அவன் அகமகிழ்ந்து, முகம் மலரக் கண்டேன். இறுதியாக ஒன்று சொன்னான், 'மற்றவர்கள் என்னைப் பார்த்து கஷ;டப்படுவதை நான் அனுமதிப்பதில்லை' என என்னிடம் கூறினான் அதனால் இவன் இவ்வாறு நோய்பட்டிருப்பதனைக்கூட பலர் அறிந்திருக்கவில்லை. வித்தியாசமான ஒரு மனிதன். பிறந்த ஒவ்வொருவரும் இறக்கவேண்டும் என்கின்ற சித்தாந்தத்தினை நன்குணர்ந்த இவர், தற்பெருமை இல்லாமல் பிறருடன் சகஜமாகப் பழகும் பாங்குதான் பலரை கவர்ந்த ஒரு முக்கிய விடயம்.

03 July 2022

உணவு நெருக்கடிக்கு உகந்த தீர்பபு

பொதுவாக ஒரு நாட்டில் உணவு கிடைப்பது பற்றிய பிரச்சினை பரந்த அளவில்; பேசப்பட்டால், உணவுப் பாதுகாப்பை அடைவதை நாம் இரண்டு முக்கிய வழிகளின் மூலம் நோக்க முடியும். ஒன்று, நாட்டின் விவசாயத்திற்கான பங்களிப்பை அதிகபட்ச நிலைக்கு கொண்டு வந்து நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிப்பது. அடுத்தது போதிய விளைச்சல்; இல்லை என்றால் வெளிநாட்டில் இருந்து மக்களுக்கு உணவு கொண்டு வருதல் அதாவது உணவை இறக்குமதி செய்வது.

ஆகவே நாட்டிற்குத் தேவையான உணவை விவசாயத்தின் மூலம் வழங்கக்கூடிய நிலையில் இருக்கின்றோமா என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். 1948 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் நாட்டின் அரிசி உற்பத்தியை அதிகரித்து அரிசியில் நாட்டை தன்னிறைவு நிலைக்கு கொண்டு வருவதற்கு அதிக கவனத்தினைச் செலுத்தியது.

பொருட்களின் விலைகள் எவ்வளவோ உயர்ந்தாலும் மக்களின் சம்பளம் ஒரு சதம் கூட உயரவில்லை.

தேசிய நுகர்வோர் விலைச்; சுட்டெண் வெளியிட்ட மே மாதக் அறிக்கையில், உணவுப் பொருட்கள் மீதான பணவீக்கம் மாதத்தில் 57.4% வீதத்தில் இலிருந்து 80.1% வீதமாக உயர்ந்துள்ளது. போக்குவரத்துக்கான பணவீக்கம் 128% வீதமாக உள்ளது. இது கடந்த மாதத்திற்கான இலங்கை மக்களின் நிலைமையையே மேற்கூறியவை குறிப்பிடுகின்றன.

இந்த மாதம் நிலைமை மிகவும் வித்தியாசமானது. ஆனால் தற்போது எதற்கும் விலைக் கட்டுப்பாடு இல்லை. பேருந்தின் முதல் பிரிவில் குறைந்தபட்ச பேருந்தின் கட்டணம் 40.00/= நாற்பது ரூபாய். ஒரு வருடத்திற்கு முன்பு இந்த எண்ணிக்கை 9.00/= ஒன்பது ரூபாயாக இருந்தது. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இதன் விலை ரூபாய் 1.50/= ஒன்று ஐம்பது. 

அப்போது ஒரு கிலோ அரிசி இருபது ரூபாய். ஆதன் பின் 2001ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ரணில் அரசாங்கம் இரண்டு வருடங்களின் பின்னர் வீழ்த்தப்பட்டு சந்திரிகா மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். சிறிது காலம் கழித்து, அரிசி குறைந்தபட்சம் கிலோ அறுபது ரூபாய்க்கு விற்கப்பட்டது. மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அந்தத் தருணத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தால் சந்திரிகாவின் அரசாங்கம் கவிழ்ந்திருக்கும். 

02 July 2022

பொதுப்போக்குவரத்தின் முக்கியம் இன்று உணரத்தொடங்கியுள்ளனர்.

 ஒரு கலகம் பிறக்கும்போதுதான் நியாயம் கிடைக்கும் என்பது பொதுவான ஒரு கருத்து. அந்தவகையில், நீண்ட வரிசைகள், காத்திருப்புக்கள், குழுக்கலவரங்கள், இறப்புக்கள் இன்னும் பல பாதிப்புக்கள் நாளாந்தம் நொடிக்கு நொடி நாட்டில் தலைதூக்கிவருகின்றன. இந்தப் பின்னணியில், இலங்கை தற்போது எதிர்நோக்கும் நெருக்கடியின் முக்கிய புள்ளி எரிசக்தி அல்லது எரிபொருள் தட்டுப்பாட்டினால்தான் என்பதை நாம் கடைசி வரை அறிந்திருக்கவில்லை. இன்று எரிபொருள் நெருக்கடியால் வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகள் அனைத்தையும் பெறமுடியாத நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு நாள் எரிபொருள் தீர்ந்து விட்டால் இப்படி ஒரு விபரீதம் ஏற்படும் என்று நாங்கள் கனவில்கூட நினைத்துப் பார்க்கவில்லை அன்று.