ADS 468x60

10 July 2022

இத்துடன் முடியவில்லை, இது அரசியலின் அடுத்தபடி!

எமது நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய மக்கள் எழுச்சியாக அறியப்படும் ஜூலை 09 போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவி விலகும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், அன்றிரவே ஜனாதிபதி எதிர்வரும் புதன்கிழமை ஜூலை 13 பதவி விலகுவதாக சபாநாயகருக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தார். சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவாக பதவியை இராஜினாமா செய்ய தயாராக இருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கிய கோட்டா கோ ஹோம் போராட்டம் கடந்த வாரம் வரை இடைவிடாத போராட்டமாகவே அறியப்பட்டது. நாட்டின் நான்கு திசைகளிலிருந்தும் பெருந்தொகையான மக்கள் கொழும்பில் படையெடுத்து வருவதையும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் அவர்களின் மிகப்பெரிய கோரிக்கையாக இருப்பதையும் உளவுத்துறை மூலம் ஜனாதிபதி அறியவில்லை என்றால் ஆச்சரியமே. 

கடந்த சில மாதங்களாக மக்கள் தமது வாழ்க்கையில் தாங்க முடியாத அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்ததால், இந்தக் கோரிக்கையை முன்வைக்கத் தூண்டப்பட்டனர். அந்தக் காலம் முழுவதும் பல்வேறு வழிகளில் முன்வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கையில் ஜனாதிபதிக்கு இரண்டு தெரிவுகளே இருந்தன. அதில் முதலாவதாக, மக்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகளுக்கு ஓரளவு நிவாரணம் வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை திட்டமிட்டு செயற்படுத்துவது இரண்டாவது பதவியில் இருந்து ராஜினாமா.

இந்த நிலையில் ஜனாதிபதி பல்வேறு வழிகளில் முயற்சித்த போதும் மக்களின் அழுத்தம் அதிகரித்ததே தவிர குறையவில்லை. எரிபொருள் இல்லாமல் வரிசையில் நிற்பது மட்டுமின்றி, பெரும் வாழ்க்கைச் சுமைகளாலும், வருமான இழப்புகளாலும் மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகினர், அந்த நெருக்கடிகள் மத்தியில் வரிசையில் நிற்பதால் ஏற்பட்ட மன அழுத்தமும் பிற்காலத்தில் சக்திவாய்ந்த மக்கள் உந்துதலாக மாறியது. 

மே 09ஆம் திகதி நாட்டையே தீக்கிரையாக்கிய சம்பவத்தின் பின்னரும், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகி, ஆட்சி மாறிய போதும், நாட்டின் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியிடம் தீர்வு இல்லை என்பது தெளிவாகியுள்ளது. மக்களின் சகிப்புத்தன்மை எல்லையை எட்டியதும், நெருக்கடி மேலும் மோசமடைந்ததும், மக்களை கொழும்புக்கு அழைத்து வரும் இடையறாத அலை ஜூலை 09 அன்று தொடங்கியது.

இந்த பின்னணியில் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதே ஜனாதிபதிக்கு எஞ்சியிருக்கும் ஒரே தெரிவு. ஆனால், நாட்டின் ஆட்சி அராஜகமாக இல்லாத வகையில் அதுவும் நடக்க வேண்டும். மக்கள் வீதியில் இறங்கி தமது அழுத்தங்கள் அதிகமாக இருந்ததால் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக மக்கள் போராட்டத்தின் விளைவாக உருவாகும் சர்வகட்சி அல்லது இடைக்கால அரசானது மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் அரசாக இருக்கக் கூடாது. புதிய அரசாங்கம் மக்கள் அவதியுறும் சில பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் திட்டம் இருக்க வேண்டும்.

அத்தகைய அரசாங்கத்தை அமைப்பதற்கு, உணர்ச்சி அரசியலையும் தாண்டி புத்திசாலித்தனத்திற்கு இடம் கொடுக்கும் மக்கள் குழு ஒன்று திரட்டப்பட வேண்டும். அதீத, உறுதியான கருத்துக்களைக் கொண்ட மக்கள் குழுவை விட சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வென்று நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய புத்திசாலித்தனமான குழுவின் பங்களிப்பைப் பெறுவதும் அவசியம். இந்தப் போராட்டத்தை முன்னெடுத்த இளம் புத்திஜீவிகளின் கருத்துக்கள் உயர்வாக மதிக்கப்படக்கூடிய நடைமுறை வேலைத்திட்டத்தை தயாரிப்பதும் முக்கியமானதாக இருக்கும்.

அரசியல் நெருக்கடி மற்றும் பொருளாதார சரிவில் இருந்து நாடு மீள்வது இப்போதுதான் தொடங்கியுள்ளது. செயல்முறை மிகவும் நீண்ட மற்றும் கடினமானது. சர்வதேச சமூகத்திற்கு சவால் விடுப்பதனை நிறுத்தி அவர்களுடன் புரிந்துணர்வுடன் செயற்படுவதன் மூலமே சாதிக்க முடியும். நாட்டின் அரசியல் ஸ்திரமின்மையே மிகப்பெரிய தடையாக உள்ளது அந்த ஸ்த்திரத்தை கொண்டுவருவதனை அனைவரும் உறுதிப்படுத்தவேண்டும்.


0 comments:

Post a Comment