க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று (25ஆம் திகதி) முதல் அடுத்த மாதம் 20ஆம் திகதி வரை 2312 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. பதட்டமில்லாமல் அனைவரும் சித்திபெற முதலில் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.
விழிப்பாக இருங்கள்: பரீட்சை நிலையங்களுக்கு கையடக்கத் தொலைபேசிகள், கைக்கடிகாரங்கள் மற்றும் இலத்திரனியல் சாதனங்களை எடுத்துச் செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதை மீறினால் 5 வருடங்களுக்கு பரீட்சைகளுக்கு தடை விதிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.