ADS 468x60

23 July 2022

பாசிசப்போக்குள்ள மக்களோ அரசோ எந்த நாட்டையும் முன்னேற்றிவிடமுடியாது.

நாட்டில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக, அன்றாட இலங்கையர்களின் பொருளாதார நிலைமைகள் மிகவும் கடினமாக மாறியுள்ளது. எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு போன்ற பொருட்கள் அதிகரித்த முறையில் விலை உயர்ந்தது மற்றும் அவற்றைப் பெற்றுக்கொள்வதும் கடினமானது, அத்துடன் மேலும் பணவீக்கம் உயர்ந்தது. புதிய அரசாங்கத்தின் இறக்குமதி தடைகள் பல தேவையான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து கிடைக்காமற் போயுள்ளன.

இந்தநிலையில் ஜூலை 9 அன்று ஜனாதிபதியின் மாளிகையை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்துச் செல்வதில் இருந்து பிரச்சினை தொடங்கியது. அரசாங்க பாதுகாப்புப்படையினர் அவர்களை கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி அவர்களைச் சுற்றி விரட்டியடிக்க துப்பாக்கிச் சூடு நடத்தினர். இது மக்களை கொதிப்படையச் செய்தது. இதனைத்தொடர்ந்து பின்னர் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று கூடி எpர்ப்பை தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து ஜனாதிபதி வெளியேறினார்;. இதனைத்தொடர்ந்நு பிரதமர் மாளிகையும் கைப்பற்றப்பட்டது. இவ்வாறான சம்பவங்கள் நாட்டு மக்கள் ம்தியில் மாத்திரமல்ல உலகத்திலேயே ஒரு கலக்கத்தினை தோற்றுவித்தது.

இவ்வாறானதொரு பின்னணியில், ஒரு புதிய அரசாங்கத்தின் முதன்மையான பணி அந்த நாட்டின் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதாக இருக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சி சிதைந்தால் அல்லது பேணப்படவில்லையானால் மனித உரிமைகள், ஜனநாயகம், நாடாளுமன்ற அமைப்பு போன்றவை பாதுகாக்கப்படவில்லை எனக்கொள்ளலாம். அமைதி இல்லாத நாட்டில் பொருளாதார வளர்ச்சியும் வளமும் இடம்பெற முடியாது. அது மட்டுமின்றி சட்டம் ஒழுங்கை பாதுகாக்காமல் சீர்குலைத்த ஒரு அரசுக்கு சர்வதேச ஆதரவு கிடைக்காதுபோய்விடும். இந்த யதார்த்தத்தின் படி, ஆட்சியாளர்களும், ஆளப்படுபவர்களும் சட்டத்தை மதிக்க வேண்டும். அங்கே திட்டவட்டமான சமாதானத்திற்கான உறுதிமொழிகள் செய்யப்பட வேண்டும். இன்னும் தெளிவாகச் சொல்வதானால், ஒரு நாட்டில் உள்ள ஒவ்வொரு சமூகக் குழுவும் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து அமைதிக்கு தலைவணங்க வேண்டும். அப்போதுதான் வளர்சி, அபிவிருத்தி மற்றும் முன்னேற்றம்பற்றியெல்லாம் பேச முடியம்.

சட்டம்-ஒழுங்கைப் பேணுவதில் சம்பந்தப்பட்ட இரண்டு முக்கிய நிறுவனங்கள் காணப்படுகின்றன அவை முறையே: காவல் துறை மற்றும் நீதித்துறை இவை இரண்டுமாகும்;. இந்த நிறுவனங்களுக்கு சவால் விடுவதும், அவற்றின் செயல்பாடுகளில் தலையிடுவதும் ஏற்புடையதல்ல. இது போன்ற செயல்கள் சட்டத்தை மதிக்காத நிலையை உருவாக்கும். சட்டத்தை புறக்கணிப்பது குற்றம். எக்காரணம் கொண்டும் சட்டத்தை மீறிச்செயற்பட இடமில்லை. ஒருவர் அறியாமையால் சட்டத்தை மீறுவது சாத்தியமில்லை. அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஒருவர் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினார். உடனே போலீசார் வாகனத்தை நிறுத்தி அபராதம் விதித்தனர். ஆகவே சட்டம் நாட்டில் அனைவருக்கும் சமம்.

பல காலமாக நமது நாட்டில் சட்டம் மெதுவாகக் சிலரால் கடைப்பிடிக்கப்படாமல் இருந்து வருகிறது. அதற்கு ஆட்சியாளர்கள், அதிகாரிகள், சமூக அமைப்புகள், பொதுமக்களும் பொறுப்பாவார்கள். சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்தும் வகையில் அவ்வப்போது சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவை முழு வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை. இது ஒரு துரதிரஷ;டவசமான நிலை என்று கருதலாம். சட்டத்தின் ஆட்சியின் சரிவு அராஜகத்திற்கு வழிவகுக்கும் மற்றும் சமூகம் காட்டுமிராண்டித்தனத்தின் சகாப்தத்திற்கு பின்வாங்கலாம். இது நம் அனைவருக்கும் மிகுந்த கவலை அளிக்க வேண்டிய விடயம்.

கடந்த சில மாதங்களாக நடக்கும் சம்பவங்களை அவதானித்தால், சட்டத்தை மீறுவதும், பொது அமைதியை சீர்குலைப்பதும் அதிகம் காணப்படுகின்றது. இது நாட்டிற்கு ஒரு நல்ல போக்கு அல்ல. காவல்துறை குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது மற்றும் காவல்துறையின் கடமைகள் பல்வேறு தரப்பிலிருந்தும் பாதிக்கப்படுகின்றன. காவல்துறையின் உத்தரவை மீறி செயல்பட பொதுமக்கள் முனைகின்றனர். குறிப்பிட்ட கடமைகளை நிறைவேற்றுவதற்காக பல்வேறு இடங்களுக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இது மிகவும் மோசமான நிலை என அரசாங்கத் தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது. பொலிசார் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை உரிய முறையில் பயன்படுத்தாததையும் காணமுடிகிறது. சில சமூகக் குழுக்கள் நீதிமன்ற உத்தரவையும் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளன. சட்டத்தை மீறும் மற்றொரு படியாக இதை பார்க்கலாம்;.

இதற்கிடையில், இலங்கையின் நிலைமை குறித்து சர்வதேச அமைப்புகளும், பலம் வாய்ந்த நாடுகளும் தங்களது கருத்துக்களை வெளியிடத் தொடங்கியுள்ளன. அவர்கள் எமது ஒவ்வொரு அசைவிலும் செல்வாக்கு செலுத்த முடியும். நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் சர்வதேச ஆதரவு அவசியம். சட்டம், ஒழுங்கு, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றுக்கான முதன்மைப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும்.

எனவே நீதிக்காகப் போராட மக்களுக்கு உரிமை இருந்தாலும்; நீதிக்காக பொது வளங்களை அழிக்க மக்களுக்கு உரிமை இல்லை எனப் பலர் வாதிடவும் தவறவில்லை. மக்கள் வாக்கு மூலம் ஆட்சியை கவிழ்க்க முடியும் என்றாலும், பலவந்தமாக ஆட்சியை மாற்ற யாருக்கும் உரிமை இல்லை. சுருங்கச் சொன்னால், ஜனநாயகத்தை தவிர, பாசிசத்தை அனுமதிக்க எந்த நீதியுள்ள தலைவரும் முன்வரமாட்டார். அதேநேரம் பாசிசப் போக்குள்ள, மக்களுக்கு பயனற்ற அரசை வைத்துக்கொண்டு அழகுபார்க்க எந்த மக்கள் சக்தியும் இடங்கொடுப்பதும் இல்லை.


0 comments:

Post a Comment