ADS 468x60

07 December 2020

கொவிட்-19 உம் இணையவழி வியாபாரத்தின் தேவையும்

நாம் கொரோனாவுக்குள் வாழப்பழகவேண்டும என்ற வாதம் அதிகரித்துவருகின்றது. அந்தவகையில் இந்தக் கொவிட் காலகட்டம் பல தொழில்களை முடக்கியது எவ்வளவு உண்மையோ, அது போலவே பல தொழில்களை உருவாக்கவும் செய்திருக்கிறது. இதற்கு முன் தாங்கள் ஒரு தொழில் தொடங்குவோம் என்று நினைத்திராத பலர், தற்போது சுய தொழிலில் இறங்கி இருக்கிறார்கள். இணைய மூலமாக ஆடைகள், உணவுப் பண்டங்கள், கைவினைப் பொருட்கள் விற்பனை என சிறிய அளவிலான தொழில்கள் அதிகம் உருவாகி இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஊள்நாட்டில் பூட்சிட்டி, ஆர்பிகோ போன்றவற்றுடக் சர்வதேச அளவில் அமேசான், பிளிப்கார்ட், ஜியோமார்ட் என்று பெருநிறுவனங்கள் ஒட்டுமொத்த சில்லறை வியாபாரச் சந்தையை ஆக்கிரமித்து வருகிற நிலையில், இத்தகைய சுயாதீன தொழில்கள் வரவேற்கப்படக்கூடியது மட்டுமல்ல, ஆரோக்கியமான எடுத்துக்காட்டும்கூட.

ஏன் இணைய வழியில் தொழிலை மாற்றவேண்டும்.

ஒரு வேலையை குறைந்த உழைப்பு, குறைந்த திறமை, குறைந்த நேரத்தில் கற்று செய்யும் திறனை பெறுவது. ஒரு காலத்தில் நாம் ஒரு தூர இடத்துக்கு பயணம் செய்ய வருவோர் போவோரிடம் நின்று வழி கேட்டுக்கொண்டு; மெதுவாய் சென்றது ஞாபகம் இருக்கலாம். ஆனால் இன்று கூகுள் மப் வடிவில் இணையம் நமக்கு; உதவுகிறது. செல்லவேண்டிய இடத்தை கூகுள் மப்பில் நுழைத்தால் அது நம் கையை பிடித்துக்கொண்டு அழைத்துச் சென்று சேர்க்கிறது.

போகவேண்டிய இடத்திற்கு அலுங்காமல் குலுங்காமல் விரைவில் இந்த இணையம் கொண்டு சேர்க்கிறது. குறைந்த உழைப்பு, குறைந்த திறமை, கூகுள் மப்பை ஈசியாய் கற்று பயன்படுத்தும் திறன் இருப்பதால் தானே இது சாத்தியப்படுகிறது. இது தான் டிஜிட்டல். இந்த டிஜிட்டலைப் பயன்படுத்தித் தானே 'பிக்மி', 'ஊபர்' போன்ற கம்பெனிகள் சக்கைப் போடு போடுகின்றன.

நாம் ஒரு கேள்வியினைக் கேட்கலாம், இத்தனை காலம் தெரியாத கம்ப்யூட்டரை புரியாத மென்பொருளைக் கட்டிக்கொண்டா அழுதோம்? இவை இல்லாமல் தானே தொழில் செய்தோம். எதற்கு தொழிலை டிஜிட்டல், கூட்டல், கழித்தல் செய்துகொண்டு என்று கேட்பவர்களைப் பார்த்து கம்ப்யூட்டரே பரிதாபப்படும்.

ஆகவேதான் நாம் 'இன்றைய அவசர தொழில் யுகத்தில் ஒரே இடத்தில் நின்றிருந்தால் உலகம் உங்கள் மீது ஏறி நசுக்கிவிட்டுப் போய்கொண்டிருக்கும்' என்றார் 'பில் கேட்ஸ்'. தொழிலை டிஜிட்டலாக்குவது காலத்தின் கட்டாயம். கொஞ்சம் திறமையற்று தொழில் செய்தால் அங்கு வில்லங்கம் வரவேற்கப்படும்.

இன்னுமொரு பெரிய வர்த்தகர் 'உங்கள் லாப அளவு தான் என் வாய்ப்பு' என்றார் 'அமேசான்' உரிமையாளர் 'ஜெஃப் போஸோஸ்'. உங்கள் தொழிலை டிஜிட்டலாக்காமல் திறமையற்று நடத்தும்போது அமேசான் தன் பொருட்களை தள்ளுபடி விலையில் விற்று உங்கள் லாபத்தை கபளீகரம் செய்கிறது. இதற்கு அதன் டிஜிட்டல் சக்தி பெருந்துணையாக இருக்கிறது.

ஆக, அமேசான் போன்ற நிறுவனங்கள் விலை குறைத்து உங்கள் வயிற்றில் அடிக்கவில்லை. டிஜிட்டல் தொழிற்நுட்பத்தை பயன்படுத்தாத தொழிலின் திறமையின்மையை தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறது அதுமாத்திரமே. நீங்கள் உங்கள் தொழிலை டிஜிட்டலாக்கி திறமையாக செயல்படும் போது இந்த வில்லன்கள் உங்கள் சங்காத்தமே வேண்டாம் என்று உங்கள் தொழிலோடு போட்டி போட தயங்குவார்கள். டிஜிட்டல் உங்கள் தொழிலை காக்கும் அகழியாகிறது. சுருங்கச் சொன்னால், நமது தொழில்கள் டிஜிட்டலாகவேண்டும். 

ஏப்படி இணையத்தில் தொழில் துவங்குவது.

இந்த நிலையில் நாம் இணைய காலகட்டத்தில் தொழில் தொடங்குவது சிரமமான காரியமும் அல்ல. கடை வாடகை, விற்பனை செய்வதற்கு ஆட்கள் என்று பெரிய அளவில் முதலீடு தேவையில்லை. எனவே, பலரும் நினைத்த நேரத்தில் தொழில் தொடங்கிவிடுகிறார்கள். அதேசமயம் அவர்களால் குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு நீடிக்க முடியாமல் திண்டாடுவதனையும் பார்க்கிறோம். இங்குதான் நாம் சில படிப்பினைகளைப் பெற வேண்டியதாக இருக்கிறது.

நாம் எடுத்த உடனேயே அலிபாவா, அமேசான், பிளிப்கார்ட் போன்று பெருநிறுவனங்களாக மாறுவது நமது இலக்காக இல்லாமல் இருக்கலாம். ஆனால், நாம் விற்கும் தயாரிப்புகள் தனித்துவமிக்கதாகவும், தரத்தில் உயர்ந்ததாகவும் இருப்பது மிக மிக அவசியம். இந்தத் தன்மையை ஒரு நிறுவனம் கொண்டிருக்கும் பட்சத்தில் மட்டுமே அந்நிறுவனம் மீது நம்பிக்கை ஏற்படும். தொழிலும் வளர்ச்சி காணும். எனவே நம் குறைகளைக் களைந்து, நம் தரத்தை உயர்த்திக்கொள்ள சில அறிவியல் பூர்வமான வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் முக்கியமானது வென்ச்மார்க்கிங். ஆதைப் புரிந்துகொண்டால் வியாபாரத்தில் பாதி வெற்றி நமதே.

வென்ச்மார்க் என்பதால் எதை விளங்குகின்றோம்.

நாம் ஒன்றை விளங்கிக்கொள்ள வேண்டும் அதாவது பிற நிறுவனங்களின் வெற்றிக்குக் காரணங்களை ஆராய்ந்து, அந்த வழிமுறைகளை நம் தொழிலிலும் நடைமுறைப்படுத்துவதை வென்ச்மார்க்கிங் என்று அழைக்கின்றோமல்லவா. இந்தக் கொள்கையை கண்டுபிடித்தது நாம் 'போட்டோ கொப்பி' எடுக்கும் மெஷினைக் கண்டுபிடித்த ஜெராக்ஸ் நிறுவனம் தான். 1961-ல் ஜெராக்ஸ் கம்பெனி ஆரம்பிக்கப்பட்டததைத் தொடர்ந்து பல அமெரிக்க, ஜப்பான் நிறுவனங்களும் 'போட்டோ கொப்பி' மெஷின் தயாரிப்பில் இறங்கின.

கீரைக்கடைக்கும் எதிர்கடையுண்டு என்பதை எங்கும் பார்க்கலாம். அதேபோலதான் இங்கு கனன், ரிக்கோ போன்ற ஜப்பானிய கம்பெனிகள், போட்டோ கொப்பி மெஷின் விற்பனையில் ஜெராக்ஸ் நிறுவனம் கொண்டிருந்த சந்தையை கைப்பற்றத் திட்டமிடத் தொடங்கின. 1974-ம் ஆண்டில் 'போட்டா கொப்பி' மெஷின் விற்பனையில் ஜெராக்ஸ் நிறுவனத்தின் பங்கு 86 சதவீதமாக இருந்ததது. அந்தப் பங்கு 1984-ம் ஆண்டில் 17 சதவீதமாக கீழே வீழ்ந்தது. இந்தச் சூழலில், கம்பெனித் தலைவராகப் பொறுப்பேற்ற டேவிட் கீர்ன்ஸ், நிறுவனத்தை மீண்டும் வெற்றிப் பாதைக்கு கொண்டுவர வேண்டும் என்று முடிவெடுத்து ரொபர்ட் காம்ப் என்பவரை அதற்கான திட்டப்பணிக்கான தலைவராக கொண்டுவருகின்றார்.

இந்த நேரத்தில் நிறுவனத்தின் தோல்விக்கான காரணங்களை ரொபர்ட் காம்ப், ஜெராக்ஸ் என்பவர் ரிக்கோ, கனன் நிறுவனங்களின் வெற்றிக்கான காரணங்களோடு ஒப்பீடு செய்து ஆய்வில் இறங்கினார். அப்போது அவர் சில முடிவுக்கு வந்தார். ரிக்கோ, கனன் நிறுவனங்களின் மெஷினிங்களின் விலை ஜெராக்ஸ் நிறுவனத்தின் மிஷின்களின் விலையை விட அரைவாசியாகவே காணப்பட்டது. காரணம், அந்நிறுவனங்களின் உற்பத்தி செலவு ஜெராக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி செலவில் 40 சதவீதம்தான். எப்படி இது சாத்தியமானது? ஏன்று ஆய்ந்தபோது அதன்பின் அவருக்கு சில பதில்கள் கிடைத்தன.

இன்னும் இன்னும் ஆழமாக ஆராய்ந்து பார்க்கின்றார். அதில் ஜெராக்ஸ் நிறுவனத்தில், ஆயிரம் மெஷின்கள் உற்பத்தி செய்யப்பட்டால், அதில் வெறும் முப்பது மெஷின்கள் குறைபாடு உடையவையாக இருந்தன. ரிக்கோ, கனன் நிறுவனங்களில் ஆயிரம் மெஷின்கள் உற்பத்தி செய்யப்பட்டால், அதில் மூன்றே முன்று மெஷின்கள் மட்டுமே குறைபாடு உடையதாக இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டன. அத்துடன் உற்பத்தி தொழில்நுட்பத்தில் அந்நிறுவனங்கள் கூடுதல் கவனம் செலுத்திவந்ததை அவர் கண்டு கொண்டார்.

இவ்வாறாக அந்நிறுவனங்களின் சிறந்த வழிமுறைகளை காம்ப் அடையாளம் கண்டார். ஆனால், அதை அப்படியே தங்கள் நிறுவனத்தில் நடைமுறைப்படுத்தவில்லை. பதிலாக, ஜெராக்ஸ் நிறுவனம் எந்தெந்த அம்சங்களில் பலவீனமாக இருக்கிறதோ, அந்த அம்சங்களில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை பட்டியலிட்டார். ஆதை பின்பற்றவும் துவங்கினார்.

ஆகவே காலப்போக்கில் படிப்படியாக அந்நிறுவனங்களின் வழிமுறைகளை ஆய்வுசெய்து அவற்றைப் பின்பற்றத் தொடங்கினார். புலபிரபல்ய தயாரிப்பு நிறுவனங்களின் அபரிமித வெற்றிக்கு என்ன காரணங்கள் என்று விசாரித்தார். அவர்களும் அதற்கான விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். அடுத்த ஐந்தே வருடங்களில் ஜெராக்ஸ் நிறுவனம், தன் அத்தனை பலவீனங்களையும் வென்று மீண்டும் முதல்இடத்தைப் பிடித்தது. ஜெராக்ஸ் கடைப்பிடித்த இந்தக் கொள்கைக்கு வென்ச்மார்க்கிங் என்று காம்ப் பெயர் வைத்தார். வென்ச் மார்க்கிங் ஒரு கோட்பாடாக அறிமுகம் செய்யப்பட்டப்பிறகு, வென்ச்மார்க்கிங் கொள்கையைக் கடைப்பிடிக்காத வெற்றிகரமான நிறுவனங்களே உலகில் இல்லை என்கிற நிலை உருவாகிவிட்டது. 

தொழிலில் தொடர்சியான விழிப்பு

தற்போது தொழில் தொடங்கும் பலரும், ஆரம்பத்தில் கிடைக்கும் லாபத்தைக் கண்டு, மெத்தனமாக இருந்துவிடுகிறார்கள், தொழில் என்பது எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டிய ஒரு செயல்பாடு. தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் ஒருகட்டத்தில் தேக்கம் கண்டுவிடும். 

தற்போதுள்ள கொரோனா காலகட்டத்தில் இணைய வழியிலான வியாபாரம் மிகப் பெரிய அளவில் அதிகரித்து இருக்கிறது. கொரோனா பயம் காரணாமாக வாடிக்கையாளர்கள் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்கின்றனர். மட்டுமில்லாமல், இணையத்தில் வாங்குவது அவர்களுக்கு கூடுதல் சௌகரியமாகவும் இருக்கிறது. வாடிக்கையாளர்களின் இந்த மனமாற்றத்தால் இணைய வர்த்தகம் நல்ல வளர்ச்சி கண்டுவருகிறது. அதேசமயம், இணையத்தில்; வர்த்தகம் செய்யும் சிறு, நடுத்தர தொழில் முனைவோர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

நாம் நாளாந்தம் பார்ப்பதுதான் புதிதாக தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களின் தொழிற்செயல்பாடுகளை தொடர்ச்சியாக கவனியுங்கள். அதில் பெரும்பாலானோரின் பொருட்கள் தரமானவையாக இருக்கின்றன. விலைகளும் நியாயமாக இருக்கின்றன. ஆனால் தொழிலில் வளர, நீடித்து நிற்க இவை மட்டும் போதாது, அவர்களில் பலரிடமும் ஒரே விதமான குறையைப் பார்க்க முடிகிறது. கொரியர் செய்பவர்களிடம் பொருட்களை கொடுத்துவிட்டால் தங்கள் பொறுப்பு தீர்ந்துவிட்டது என்று பலர் நினைக்கிறார்கள். வாடிக்கையாளர்களின் கைகளில் பொருட்களை சேர்ப்பது வரை தங்கள் வேலை என்று அவர்கள் உணர்வதில்லை.

ஒரு பொருளைக் வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்பதில் ஏதாவது பிரச்சினை என்று வந்தால், கொரியர்களை கையைக் காட்டிவிட்டு ஒதுங்கிவிடுகிறார்கள். பொதியிடல் அத்தனை திருப்திகரமானதாக இல்லை. கொரியரில் பலநூறு கிலோமீட்டர்கள் பயணம் செய்து வாடிக்கையாளரிடம் வந்து சேரும்போது பொருட்கள் சேதமடையக்கூடும். இத்தகைய சேதங்கள், தவறான சப்ளை, தரக்குறைவு போன்ற காரணங்களால் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தால், சரியான திருத்த நடவடிக்கைகள் எடுப்பதில்லை. அமேசான் இந்த அம்சத்தில் மிக மிக முன்னேற்றத்தில் இருக்கின்றது. வாங்கிய எந்தப் பொருளையும் காரணமே சொல்லாமல் திருப்பிக் கொடுக்கலாம்; அவர்களின் ஆட்களே வீட்டுக்கு வந்து பெற்றுக்கொள்கிறார்கள். பொருட்களின் தரத்திலும், வாடிக்கையாளர்கள் சேவையில் சிறிய நிறுவனங்கள் பலவும் மிகச் சிறப்பாக செயல்பட்டுவருகின்றன.


நல்ல வர்த்தகர்கள் பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைத்தப் பிறகுதான் பில்லே அனுப்புகிறார்கள். அதன் வழியே வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றிருக்கிறார்கள். தற்போது சகலமும் இணையம் நோக்கி நகர்ந்துவந்து கொண்டிருக்கிற நிலையில், அத்துறையில் வெற்றிப் பாதையில் பயணிக்கும் சிலரின் வழிமுறைகளைப் ஆராய்ந்து, அதிலிருந்து நமக்கான வழிமுறைகளை உருவாக்கிக்கொள்வதன் மூலம் நாம் நமக்கான வெற்றிப் பாதையில் பயணிக்க முடியும். ஆகவே இன்றய வியாபாரம் வெற்றிகரமாக அமைய நாம் இணையவழி வியாபாரத்தை ஊக்குவிக்க வேண்டும். அத்துடன் வெற்றியாளர்களின் தந்திரோபாயங்களை அறிந்து அவற்றை நமது வெற்றிக்கு உரமாக்குவதன் மூலம் நிச்சயம் ஒரு புதிய வியாபாரப் போட்டிக்குள் நாமும் காலடி எடுத்து வைக்கலாம்.

ஆதாரம்: இந்துதமிழ்

0 comments:

Post a Comment