இதே சமயத்தில், Fitch Ratings நிறுவனமும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நிதி சீர்திருத்த நடவடிக்கைகள் உறுதியானதாகவும், பொருளாதாரத்தின் நிலைத்தன்மைக்கான சவால்களை சமாளிக்கக்கூடியதாகவும் உள்ளன என்று தெரிவித்துள்ளது. ஆனால், மக்கள் உண்மையில் இந்த முன்னேற்றத்தினை உணருகிறார்களா? அல்லது இது வெறும் அரசியல் பிம்பமா?
பொதுவாக, இலங்கையின் பொருளாதார நிலைமையை ஆராயும் போது, அதனை அதிகாரப்பூர்வ தரவுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் சாத்தியக்கூறுகள் முக்கியமானவை. கடந்த காலங்களில் அரிசி விலைக்கான மாற்றங்கள், உணவுப் பொருட்களின் விலை உயர்வு, மற்றும் வர்த்தகத்துறையில் ஏற்பட்ட சிக்கல்கள் போன்றவை பெரிதாக பேசப்பட்டன. இதனிடையே, சுற்றுலா, வணிகம், மற்றும் முதலீட்டு துறைகள் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றன.
இலங்கை மக்கள், குறிப்பாக நகர்ப்புறத்தில் வசிக்கும் பெரும்பாலானவர்களுக்கு அரிசி விலை மற்றும் அன்றாடச் செலவுகள் மட்டுமே முக்கியமல்ல. அவர்கள், வெளிநாடுகளில் கல்வி, தொழில் வாய்ப்புகள், முதலீடுகள், மற்றும் வணிக வளர்ச்சி போன்ற விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்துகின்றனர். இதனால், நவீன பொருளாதாரத்தில் மக்கள் விரும்பும் வாழ்க்கை தரம் உயர்வது முக்கியமானது.
சமூக ஊடகங்களில் பரவும் கருத்துக்கள் பலவகையான அரசியல் நோக்கங்களைக் கொண்டிருப்பதால், உண்மையான பொருளாதார முன்னேற்றத்தினை எவ்வாறு அடையாளம் காணலாம்? என்பது ஒரு முக்கியமான கேள்வியாக்கிறது. கடந்த ஒரு ஆண்டில், சுற்றுலா வருவாய் 3 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளது. இது, 2020 பிறகு முதன்முறையாக காணப்படும் மிகப்பெரிய வளர்ச்சி. மேலும், 2025 முதல் 6 மாதங்களில் மட்டும், 55,091 வெளிநாட்டு பயணிகள் MICE (Meetings, Incentives, Conferences, Exhibitions) சுற்றுலா வாயிலாக இலங்கைக்கு வந்துள்ளனர்.
இந்த தகவல்கள், மக்கள் உணர்ந்த பொருளாதார முன்னேற்றம் மற்றும் அதிகாரப்பூர்வ தரவுகளால் வெளிப்படும் வளர்ச்சி என்பவற்றிற்கிடையே உள்ள வேறுபாட்டை தெளிவுபடுத்துகின்றன.
இன்றைய சந்தை நிலைமை மிகுந்த ஆற்றல் கொண்டதாக காணப்படுகின்றது. புதிய தொழில் முனைவோர்கள் தங்கள் முதலீடுகளை அதிகரிக்கின்றனர், வா்த்தக சந்தைகளில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர், மற்றும் கடுமையான சவால்களை கடந்த தொழில்கள் மீண்டும் முன்னேற்ற பாதையில் பயணிக்கின்றன.
இதனால், பொதுமக்கள் அரசின் செயல்பாடுகளை பொதுவாக நேரடியாக உணருகின்றனர். அரசின் நிதி முகாமை மற்றும் பொருளாதாரத்தினை பலப்படுத்தும் நடவடிக்கைகள் பற்றிய முழுமையான பார்வை மக்கள் மத்தியில் இன்னும் பெரிதாக உருவாகாததால், எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஊடகங்கள் நெகட்டிவ் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
அரசியலமைப்பில் மக்கள் ஒப்புதல் அளிக்கும் முக்கிய காரணிகள் அன்றாட வாழ்க்கையில் நம்பகத்தன்மை, வளர்ச்சி, மற்றும் வசதிகள் என்பவை ஆகும். நமது நாட்டின் வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் மொத்த பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது, ஆனால் அது மக்கள் மனதில் எந்த அளவிற்கு பதிந்துள்ளது என்பது வெவ்வேறு காலகட்டங்களில் மாறுபட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் பொருளாதார முன்னேற்றத்திற்காக எடுத்த நடவடிக்கைகள் குறைந்தபட்சம் ஒரு சீரான பொருளாதார சூழலை உருவாக்குவதற்கான அடிப்படை அமைப்பாக உள்ளது. ஆனால், மக்களின் வாழ்க்கை தரத்திலும், வேலைவாய்ப்பிலும், வணிக சந்தைகளிலும் இதன் தாக்கம் எவ்வாறு இருக்கிறது? என்பது மிகவும் முக்கியமானது.
இதனால், புதிய முதலீடுகளை ஈர்க்கும் திட்டங்கள், வெளிநாடுகளுடன் வணிக உறவுகளை அதிகரிக்கும் நடவடிக்கைகள், மற்றும் மக்களுக்கு நேரடி நன்மைகள் ஏற்படும் வகையில் பொருளாதார வளர்ச்சி நடைமுறைப்படுத்தப்பட வேண்டியுள்ளது.
அதாவது, மக்களது வாழ்க்கை தரம் உயர்ந்தால்தான் பொருளாதார முன்னேற்றம் உண்மையாக மாறும். இத்துடன், எதிர்கால இலங்கையின் முடிவான வளர்ச்சி, அரசின் செயல்திறன், மற்றும் மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்க முடியும்.
இலங்கை உண்மையான பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கிறதா? அல்லது இது வெறும் அரசியல் பிம்பமா? இந்த கேள்விக்கு நேரடி பதில் வருவதற்கு இன்னும் சில காலங்கள் தேவை என்பதுதான் உண்மை.
0 comments:
Post a Comment