கொரோனா ஊரடங்கு மார்ச் இல் ஆரம்பித்து பின்னர் சுமூக நிலை தோன்றி பின்னர் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தில் வளர்ந்த பெரிய நாடுகள்கூட கட்டுப்படுத்த முடியாத இந்த கொரோனா வைரஸ் பாதிப்பை (கோவிட்-19), நமது அரசாங்கங்கள் ஊரடங்கை அமுல்படுத்தி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதை பல நாடுகளும், உலக சுகாதார அமைப்பும் பாராட்டியுள்ளன. ஆனால், இதன் மறுபக்கம், மோசமான பொருளாதார வாழ்வாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதைக் கண்கூடாக உணர முடிகிறது.
சென்ற மாதத்திலிருந்து கொவிட்-19 இன் புதிய அலை வாழ்வாதாரங்களுக்கும் பொருளாதாரத்திற்கும் கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளது. வறுமை, பட்டினி மற்றும் உயிர் இழப்பிற்கு வழிவகுப்பதுடன், அண்மைக்காலமாக மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை மேலும் இழக்க நேரிடும் என்பதால் பசியும் பட்டினியும் தாண்டவமாடத்துவங்கியுள்ளது.