ADS 468x60

25 November 2015

அந்த நாட்களை தேடிப்பார்கின்றேன்

அந்த நாட்களை தேடிப்பார்கின்றேன்- நான்
அந்த நாட்களை தேடிப்பார்கின்றேன்...
ஆசையோடே அசைகள் போட்டு
கண்கள் ரெண்டும் மூடிப்பார்க்கிறேன்

16 November 2015

ஏற்றத்தாழ்வு

இன்று வடகிழக்கில் போரினால் மற்றும் சுனாமியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஓரளவுக்கு மீண்டிருந்தாலும் அவர்களுடைய ஒட்டுமொத்த குடும்ப நிலை அதிகமாக கிராமப்புறங்களை அண்டிவாழுகின்ற மக்களிடையே மிக மோசமாக காணப்படுகின்றது. இவர்களது குடும்பம் பொதுவாக பெற்றோர், அவர்களுடைய தாய் தந்தை, சில சகோதரர்னகள் மற்றும் பிள்ளைகள் அடங்கலாக 10 பேரினை கொண்ட பொிய ஒரு குடும்பமாகும். இவர்களுடைய சராசாி ஒட்டுமொத்த வருட வருமானம் சுமாா் ரூபாய் 30000/= -50000/= வரையானதாகவும், சிலர் தானிய உற்பத்தியினை தாங்களே செய்து உண்ணுகின்றவர்களாகவும் காணப்படுகின்றனா்.

07 November 2015

இயற்கையை அரனாக்குவோம்


இன்று ஒரு வருடத்துக்கு மேலாக பாதுகாத்து வளர்தெடுத்த எமது மரக்கன்றுகளை பார்வையிடக்கிடைத்தது. மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை அது இயற்கை மூடிய இன்ப அரன். கிட்டத்தட்ட 1400 சிறிய நடுத்தர பெரிய குளங்கள் பதியப்பட்டு இருந்துள்ளதாகவும் அதில் இன்று வெறும் நானூறு குளங்களை மாத்திரம் கண்டுபிடித்துள்ளதாகவும் ஏனைய குளங்கள் இருந்த இடமும் தெரியாமல் அழித்து விட்டார்கள் என பேச வல்ல அதிகாரி என்னிடம் தெரிவித்தார்.

இயற்கையை அரணாக்குவோம்!

இன்று ஒரு வருடத்துக்கு மேலாக பாதுகாத்து வளர்தெடுத்த எமது மரக்கன்றுகளை பார்வையிடக்கிடைத்தது. மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை அது இயற்கை மூடிய இன்ப அரன். கிட்டத்தட்ட 1400 சிறிய நடுத்தர பெரிய குளங்கள் பதியப்பட்டு இருந்துள்ளதாகவும் அதில் இன்று வெறும் நானூறு குளங்களை மாத்திரம் கண்டுபிடித்துள்ளதாகவும் ஏனைய குளங்கள் இருந்த இடமும் தெரியாமல் அழித்து விட்டார்கள் என பேச வல்ல அதிகாரி என்னிடம் தெரிவித்தார்.

01 November 2015

மகன் தந்தைக்காற்றும் உதவி!

அவையத்துள் முந்தி நிற்கும் இமையம்
உபயங்கள் செய்து வாழும் கண்ணன்
சேய்மையில் இருந்தாலும்
தாய் மண்ணை மறக்கவில்லை..

28 October 2015

வீட்டை தவிர வோட்டை எதற்ம் போடாதே!

வீட்டை தவிர வோட்டை எதற்ம் போடாதே -நமைக் 
காட்டிக் கொடுப்போர் காலடி என்றும் நாடாதே- வெறும்
பேச்சைக் கேட்டு பொம்மைகள் போல ஆடாதே- பொழுது
புலரும் கிழக்கில் வெற்றியின் முழக்கம் வாடாதே - நீ
வீட்டை தவிர வோட்டை எதற்ம் போடாதே!

27 October 2015

நல்லாட்சியில் கிடைத்த மழையோ!

மடை உடைக்கும் வெள்ளம்
நிரம்பியது பள்ளம்
நாட்டிலேதோ பிழை
நாளெல்லாம் மழை
கூழுக்கும் இல்லை வழி
கூறுவது யாரைப் பழி
மறுகாமறுகா பெய்யிது காட்டில்
மக்களெல்லாம் முடங்கினர் வீட்டில்
ஒரே இதுதான் வேலையாப் போச்சி
ஒழிப்பது எப்படி வறுமையை ஆச்சி
தோட்டமும் தொரவும் எங்களுக்கு ஆதாரம்
கிடைக்குமா வெள்ளத்தில் போன சேதாரம்
நாங்களும் நினைத்தோம் இது
நல்லாட்சியில் கிடைத்த மழையோ என்று
முள்ளிவாய்க்கால் முற்றுகைபோல்
அள்ளி வருகிறது ஆத்துவெள்ளம்
தவிர்க்க முடியாத ஒன்று
தவிக்கும் மக்களை நாம்தான் பார்க்கனும்
நேர்த்தியான தகவல் தேவை- அது
நேர்மையாய் உதவி அளிக்கும்

சும்மா எங்களை பார்ப்பவர் தமக்கு சுமைகள் தெரிவது இல்லை!

தமிழாய் பிறக்கவைத்தான்- தெருவில்
தனிமையில் நடக்கவைத்தான்
உறவை மறக்கவைத்து- எங்களை
ஊர் ஊராய் திரியவைத்தான்

அணைக்கும் அம்மா ஆருயிர் அப்பா
அனைத்தும் இழந்தே போனோம்!
உணவிடக் கூட உறவுகள் இழந்து
ஊனமாய் வாழ்க்கையில் ஆனோம்!!

வீடுகளெல்லாம் காடுகளாச்சி
வெளியே வாழ்க்கை போச்சி
சும்மா எங்களை பார்ப்பவர் தமக்கு
சுமைகள் தெரிவது இல்லை

பள்ளிக்கு செல்ல பார்ப்பவர் இல்ல
படிக்கிற நெலமையும் இல்ல
பசியில வாடிடும் நேரத்தில் கூட
பக்கத்தில் உறவுகள் இல்ல!!