ADS 468x60

23 February 2011

தேடுகிறேன்...












இறுக்கங்களுக்குள்
இடைவெளியை தேடுகிறேன்!
இளமை தொலைத்த
இன்பம் தேடுகிறேன்!

பலவீனத்தில்
பலம் தேடுகிறேன்!
பரோபகாரத்தில்
பாசத்தை தேடுகிறேன்!

உழைப்பிற்குள்
ஊக்கத்தை தேடுகிறேன்!
உலகத்தில்
நிம்மதி தேடுகிறேன்!

அராஜகத்தில்
அமைதி தேடுகிறேன்!
அரசியலில்
உரிமை தேடுகிறேன்!

கண்களில்
கருணை தேடுகிறேன்!
புன்னகைத்து
புண்ணியம் தேடுகிறேன்!

மதுவில்
மயக்கம் தேடுகிறேன்!
மாதில்
மனதை தேடுகிறேன்!

நாட்டிலே
வேலை தேடுகிறேன்!
நல்நெறியில்
பணம் தேடுகிறேன்!

காதலிற்குள்
நிஜத்தை தேடுகிறேன்!
கல்லிற்குள்
கடவுளைத் தேடுகிறேன்!

தேடுகிறேன்! தேடுகிறேன்!
உனக்குள்
உன்மை தேடுகிறேன்!
எனக்குள்
என்னைத் தேடுகிறேன்!

22 February 2011

அனர்த்தத்தின் பின்னரான மீள் உருவாக்கச் செயற்ப்பாடுகளின் தேவை..

பிவிருத்திப்பாதைக்குள் விரிபுபட்ட பரிமானங்கள்,  தோற்றங்கள் பல நாடுகளில் அனர்த்தங்களுக்கு பின்னால் பரீட்சித்துப் பார்க்கப்பட்டுள்ளன. அதன், பேரின பொருளாதார மாற்றங்கள், பொது நிதிச் சிதைவு, தகவல் பரிவர்தனம், சுற்றுச் சூழல் பாதிப்புகள் இன்னும் அதன் கலாசாரம், சமுகக் கட்டமைப்பு என அனர்த்தங்களால் மாற்றப்பட்ட வரலாற்றுப் பாடங்கள், அவர்களின் மீள் உருவாக்கத் தேடலில் முக்கிய பங்கு வகிக்க தூண்டியது எனல் பொருந்தும்.
க்கிய நாடுகள் மற்றும் உலக வங்கி என்பனவற்றின் அறிக்கைப்படி உலகலாவிய இயற்கை அனர்த்தத்தின் மொத்த இழப்பீட்டு மதிப்பு 185 பில்லியன் அமெரிக்க டொலர் என்றும், இது வருடா வருடம் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்றும் கூறுகின்றது. 

தில் அதிக பங்கு சிலி மற்றும் சீன பிரதேசத்தின் அனர்த்தங்களால் விளைந்தவைவே. குறிப்பாக சிலியில் 8.8 றிச்டரில் ஏற்ப்பட்ட பூமி அதிர்ச்சி 30 பில்லியன் அமெரிக்க டொலர்களெனவும், சீனாவில் ஏற்ப்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவின் காரணமாக 18 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்ப்பட்டதுமே அதிகமான இழப்பு எனக் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் இலங்கையில் அண்மையில் வடித்துச் சென்ற வெள்ளத்தின் செலவு அதற்க்கான 51 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என நமது நாட்டின் அவசர வேண்டுகோளில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இதன் விபரங்கள் அட்டவணையில் தரப்பட்டுள்ளது.

ந்த செலவுகளின் பன்மைத்தன்மை அதன் காலநிலை மாற்றத்தின் பிரதிபலனாக விளைந்து கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக அனர்த்த முன்னெச்செரிக்கை நிலையங்கள், அனர்த்தம் பற்றிய தகவல் களஞ்சியம், பாதுகாப்பான பாதைகள், பாதுகாப்பான தங்குமிடங்கள் இன்னோரன்ன அரசாங்கத்தின் முனைப்புகள் இன்னும் பல நாடுகளில் கரிசனை கெட்டு கிடக்கிறது என்றும் அதன் பலாபலன்கள் அவர்களின் பெறுமதி மிக்க உயிர் உடமை இழப்புகளை பன்மைப்படுத்தி விடுகின்றன.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இந்தப்பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை சரியான முறையில், யாருடன், எவ்வாறு, எதை மற்றும் யாருக்காக என்கின்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த பிரதேசங்களின் பொறுப்பு வாய்ந்த பிரதிநிதிகளது பங்கு அமையப்படவேண்டும்.

ங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணம் வழங்கப்பட்ட பின்னர், ஆரம்ப மீள் உருவாக்கம் செய்யப்பட தொடங்க வேண்டும். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் குறிப்புப்படி, ஆரம்ப மீள் உருவாக்கம் என்பது 'இயற்கையாகவோ, மனிதர்களாலோ ஏதாவது பாரிய அனர்த்தம் ஏற்ப்பட்ட பின்னர் உடனடியாக அந்த பிராந்திய அரச ஸ்த்தாபனங்கள் மற்றும் அந்தச்சமுகம் என்பனவற்றினை வலுவூட்டுதல்' எனக் கூறப்படுகிறது.

ந்த ஆரம்ப மீள் உருவாக்கச் செயற்ப்பாடுகள் உடநடியாக கொண்டிருக்க வேண்டியவை குறிப்பாக தற்க்காலிக வீடமைத்தல், பெண்களை வலுவூட்டல், சுற்றுச் சூழல் பராமரிப்பு, பாதுகாப்பு வழங்குதல், வாழ்வாதார உதவிகள், சட்டமும் ஓழுங்கும் வழங்கல், உட்கட்டுமான வசதியளித்தல், முரண்பாடுகளுக்கு தீர்வகாணல் போன்ற இன்னோரன்ன செயற்பாடுகளை இங்கு வழங்கப்பட வேண்டும்.

வை சரியான முகாமைத்துவம் இல்லாமல் நடைபெற மாட்டாது. இவை அரச ஸ்த்தாபனங்களினால் தான் அதிக நாடுகளில் இந்த செயற்ப்பாடுகள் மேற்கொள்ளப் படுகின்றது. இருப்பினும் சில இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் அவற்றை செய்வதற்க்கான இயலுமை இழந்து காணப்படுவதனால், ஐக்கிய நாடுகளின் அமையத்தின் வழித்துணையுடன் இந்த தந்திரோபாயங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

வை பல்வேறு துறையினரையும் ஒன்று சேர்த்து அவர்களுக்கிடையே ஒரு தொடர்பாடல், ஒருங்கிணைப்பு என்பனவற்றை ஏற்ப்படுத்தி பாதிக்கப்பட்ட சரியான மக்களை தெரிவு செய்வதில் இருந்து அவர்களுக்கான அபிவிருத்திப் பாதையினை காட்டிவிடுவது வரைக்கும் இச் செயற்ப்பாடுகள் நீண்டு செல்கின்றன. இந்த ஒருங்கிணைப்பு செயற்ப்பாட்டின் மூலம் இரட்டைப் பதிவுகள் நீக்கப் படுகின்றன, நிறுவனங்களின் இயலுமை, வளங்கள் அடையாளங் காணப்படுகின்றன, அத்துடன் சரியான திட்டமிடல் செய்யப்படுகின்றது. ஆகவே அனர்த்தங்களின் பின்னான ஆரம்ப மீள் உருவாக்கச் செயற்ப்பாடுகளில் துறை ரீதியான, நிறுவன ரீதியான ஒருங்கிணைப்புச் செயற்ப்பாடுகள் இன்றியமையாதவையே.

மிக அவசரமாக அனர்த்தங்களின் பின்னான ஆரம்ப மீள் உருவாக்கச் செயற்ப்பாடுகளினூடாக சொந்த காலில் நிற்கக்கூடிய தன்னம்பிக்கை, சுயாட்சி, மீழ் உருவாக்கம் அத்துடன் நலிவுறும் தன்மை, அனர்த்த ஆபத்து என்பனவற்றினை குறைத்தல் இவற்றை உடனடியாக அமுல்படுத்துவதற்க்காக தேசிய மற்றும் சர்வதேச அளவிலான செயற்ப்பாட்டாளர்களினை அழைத்து ஒருங்கிணைத்துக் கொள்வதற்க்காக கலந்துரையாடல்களை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கான பாதுகாப்பினை முதலில் உறுதி செய்வது இவ் ஒருங்கிணைப்புச் செயற்ப்பாட்டில் முதல் படியாக இருக்கும். ஏனெனில் அவர்களின் வாழ்க்கை அனர்த்த ஆபத்தில் இருப்பதனால் அவர்களது ஆபத்தைக் குறைத்து அவர்களை அங்கிருந்து மீண்டெடுத்தல் அவசியமாகின்றது.

னால் அனர்த்தங்களின் பின்னரான ஆரம்ப கட்ட மீள் உருவாக்கச் செயற்ப்பாடுகளிற்கு அப்பால் நீண்ட கால அபிவிருத்தி, மற்றும் பேண்தகு விருத்தி நோக்கிய திட்டமிடலை இந்த அவசரகால செயற்ப்பாடுகள், நிவாரண ஒழுங்கமைப்புக்கு வெளியில் நின்று தொடங்குவதற்க்கான அத்திவாரத்தினை இட்டுக் கொள்ளுதல் வேண்டும். இவற்றினூடாக நாட்டின் அரசாங்கத்தினுடைய இயலுமையை கட்டியெழுப்புதல், அதன் சுற்றுச்சூழலை பாதுகாத்தல், வாழ்வாதாரங்களை மீழ் உருவாக்குதல், சேவைகளை வளங்குதல், அதனூடான அதன் எதிர்கால அபிவிருத்தியை செம்மையாக்குவதனையும் இந்த அனர்த்தங்களின் பின்னான ஆரம்ப மீள் உருவாக்கச் செயற்ப்பாடுகளினூடாக செயற்ப்படுத்தலாம்.

குறிப்பாக அனர்த்தங்களின் பின்னான ஆரம்ப மீள் உருவாக்கச் செயற்ப்பாடுகளின் மூன்று முக்கிய நோக்கங்களைப் பார்க்கலாம்.
1. அவசரகாலங்களின் போதான உதவிகளை வழங்குதல்.
2. தொடர்ச்சியான மீழ் உருவாக்கச் செயற்பாடுகளை பாதிக்கப்பட்ட சமுகத்துக்கு செய்தல்.
3. நீண்டு நிலைத்திருக்கும் அபிவிருத்திக்கான அத்திவாரத்தினை இட்டுக் கொள்ளல்.
லங்கையின் இந்த இலக்குகளை அடைவதற்க்கான தேவை 2004 சுனாமி அனர்த்தங்களின் பின்னரே உணரப்பட்டிருந்தது. இதன் பின் ஐக்கிய நாடுகளுக்கான அபிவிருத்தி திட்டத்தினரின் உதவியுடன் பல விடயங்கள் அரச நிறுவன மற்றும் கொள்கை ரீதியான செயற்ப்பாடுகளில் வலுவூட்டப்பட்டது நினைவுகூர வேண்டியுள்ளது.

னர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சு, தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய அவசரகால அவதான நிலையம் என்பன ஐக்கிய நாடுகளுக்கான அபிவிருத்தி திட்டத்தினரின் அனர்த்தங்களின் பின்னரான ஆரம்ப கட்ட மீள் உருவாக்கச் செயற்ப்பாடுகளின் கீழ் உருவாக்கப்பட்டு வலுவூட்டப்பட்ட விடயங்களாகும். அத்துடன் இலங்கையின் முக்கியமான மயிற் கல்லாக 2005 இல் தயாரித்து வெளியிடப்பட்ட 'பாதுகாப்பான இலங்கையை நோக்கி' என்கின்ற கொள்கை ரீதியான பேருதவியும் இந்த அனர்த்தங்களின் பின்னரான ஆரம்ப கட்ட மீள் உருவாக்கச் செயற்ப்பாடுகளிற்கு அரச இயந்திரத்தினை வலுவூட்டும் செயற்ப்பாடுகளில் அடங்கும் ஒன்றாகும். இதற்கு பிறகுதான் அரசின் பாராளுமன்றத்தில் இந்த அனர்த்த முகாமைத்துவத்துக்கான சட்டமும் இயற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

21 February 2011

நேசிக்கிறேன்..

celtic graphics

றுபடியும்
செட்டை முளைக்கத்
தொடங்கி விட்டதே!
என் பாலை வனத்தில்
மொட்டுகள்
மலருகின்றதே!...
என் இதயம்
களவு போகத்
காத்துக் கிடக்குதே!
உறவுகள் வரவு
வைக்கப் படுகின்றதே!
என் விழிச் சாரல்
கனாக் கூடை சுமக்கின்றதே!

ன்ன விந்தை!!!
இந்த வேடனின்..
பாதையில் புள்ளி மான்!!
இந்த சூரிய குழம்புக்குள்
கிளிமாஞ்சாரோ பனிப் பாறை!
ஓ அதுவா??
உன்னை- நான்
நேசிக்கிறேன்......

.

20 February 2011

வேரறுந்து கிடக்கும் வெல்லாவெளிப் பிரதேசம்....

உலகலாவிய ரீதியில் புவி வெப்பமடைதல் காரணமாக காலநிலை மாற்றம் ஏற்ப்பட்டு வெள்ள அனர்த்தம், புயல், காட்டுத் தீ என்றும் எல் நிலா மற்றும் லா நிலா என்றெல்லாம் வானிலை புதுசு புதுசாக கலியுகத்தில் என்னென்ன வெல்லாம் நடக்கிறது.

இது இலங்கையின் பட்டி தொட்டிகளில் மட்டுமல்ல உலகிலேயே அவுஸ்திரேலியாவின் அனைத்து நகரங்களிலும் அதன் பொருளாதாரம், சுற்றுச் சூழல் மற்றும் அந்நாட்டு சமுகம் எல்லாத்தினையும் ஆட்டங்காண வைத்துக் கொண்டிருக்கிறது. 'ஸ்ரேன்' அறிக்கையின் படி உலகிலேயே தற்போது அதிகமாக நலிவுறும் தன்மைக்குள் அகப்பட்டிருக்கும் இந்நிலை சுமார் 50 தொடக்கம் 100 வருடங்கள் வரை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு கரையோரம் வாழ் மக்கள் மற்றும் சுற்றுலாப்பிரயாணத் துறையினர் எச்சரிக்கப் பட்டுள்ளனர்.

ஆளானப்பட்ட அவுஸ்த்திரேலியாவுக்கே இத்தனை அச்சுறுத்தல் என்றால் அல்ப்ப இலங்கை என்னவாகும் என்று கடந்த வெள்ளம் பாடம் சொல்லி இருக்கிறது. இலங்கையின் அண்மைய வெள்ளத்தினில் பாதிக்கப்பட்ட பதின்மூன்று மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டமே பட்டுத் தவித்திருக்கிறது. அதில் உள்ள பதின்நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளும் முற்றாகச் சேதமைந்த போதும், தற்போது அனைத்து பணியாளர்களது கண்ணும் கோலம் கெட்டுக்கிடக்கும் போரதீவுப்பற்று பிரதேசத்தின் பால் திரும்பி இருக்கிறது. இங்கு பொங்கிய வெள்ளத்தினில் 46,360 பேர் அதாவது 12,760 குடும்பங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அனேகமான கிராமங்கள் ஒருதொடர்பும் இல்லாமல் இருந்தமை இந்த பிரதேசத்தின் வெள்ள அனர்த்தத்துக்கான நலிவுறுந்தன்மையை புட்டுக் காட்டுகின்றது அல்லவா?????? குறிப்பாக ஆனைகட்டியவெளி, மலையுர்கட்டு, சின்னவத்தை, மண்டூர், கணேசபுரம், சங்கரபுரம், ராணமடு, வேத்துச்சேனை, பாலையடிவட்டை, கண்ணபுரம், நெல்லிக்காடு, காக்காச்சிவட்டை, விளாந்தோட்டம், நவகிரிநர் போன்ற 21 கிராமங்கள் நீரில் மூழ்கிக் கிடந்தது.

குறிப்பாக இங்கு வாழ்கின்ற மக்கள் சேனைப்பயிர் செய்கை, வேளான்மைச் செய்கை, மேட்டு நிலப்பயிர்ச் செய்கை மற்றும் ஆடு மாடு, கோழி வளர்த்தல் அத்துடன் வீட்டுத்தோட்டம் என்பனவற்றினையே கிடைத்த வளங்களைக் கொண்டு சிறப்பான பயன்களைப் பெற்றுக்கொண்டு வந்தனர். கணக்கீட்டின்படி 10,214 குடும்பங்கள் அதாவது 36,197 மக்கள் தங்களது ஜீவனோபாயத்தினை இழந்துள்ளனர். 22467 ஏக்கர் விவசாயம் அடிக்கடி அடித்து நாசமாக்கிய வெள்ளத்தில் களுவுண்டு போயுள்ளது, கழுவுண்டு போனது அவர்களின் வயல் நிலங்கள் மட்டுமல்ல அவர்களது அன்றாட வாழ்க்கையும் சேர்த்துத்தான். அவர்கள் வானம் பொழியும் மழை மாரியினையும், குளங்களில் கிடைக்கும் நீர் வளத்தினையும் நம்பியே விவசாயத்தினில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அவையெல்லாம் வெள்ளத்தின் வீறாப்பில் பள்ளத்தில் இழுத்தெறியப்பட்டுள்ளன. இந்த உடைக்கப்பட்ட குளங்களின் விபரங்கள் கீழ் உள்ள அட்டவணையில் தரப்பட்டடுள்ளது.
(தகவல் பிரதேச செயலகம் போ.பற்று)
இம்மக்கள் வயற் செய்கைக்கு அப்பால் மேட்டுநிலப் பயிர் செய்கைபண்ணி வேறு பிரதேச செயலகப்பகுதிகளுக்கு சந்தைப்படுத்தும் ஏற்றுமதி வியாhபரத்திலும் ஈடுபட்டு வந்தனர். அதில் அதிக லாபம் ஈட்டி வந்தனர். பழுகாமம், மண்டுர் கத்தரிக்காய் மற்றும் மிளகாய் போன்றவற்றுக்க தனி மவுசே இருந்தது. இதற்க்கு மேலாக பயறு, குரக்கன், இறுங்கு, சோளம், எள்ளு என்பன போன்ற இன்னோரன்ன தானியப் பயிர்செய்கையில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கே தன்னிறைவு ஏற்ப்படுத்திய பெருமை இவர்களுக்கே சாரும். இவ்வாறு இப்பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட 1665 விவசாயிகள் முற்றாக இப்பிரதேசங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆத்துடன் 178 பழச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களது 41 ஏக்கர் பழச்செய்கை மண்ணோடு மண்ணாகி விட்டதை பிரதேச செயலக அறிக்கை பறை சாற்றுகின்றது. அதே போன்று 3310 வீட்டுத்தோட்டச் செய்கையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அறிக்கையில் காணக்கூடியதாக இருக்கிறது.
(உடைந்து கிடக்கும் மண்டுர் பாலம்)
அபிவிருத்தி திட்டமிடலாளர்கள் அனர்த்தம் பற்றிய கரிசனையினை அபிவிருத்தி நடவடிக்கையில் கொள்ளத்  தவறிவிடுகின்றனர் என்பதற்கு வெல்லாவெளிப் பிரதேசம் சிறந்த உதாரணமாகும். இங்கு நான்கு பாலங்கள் (மண்டுர் பாலம், காக்காச்சிவட்டை மருதங்கடவைப் பாலம், ஆணைகட்டியவெளி கோஸ்வே, திக்கோடை கோஸ்வே) முற்றாக வெள்ளத்தில் தகர்த்தெறியப்பட்டுள்ளது. அதுபோன்று 124 சிறிய பெரிய அளவிலான வீதிகள் முற்றாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன இவை வீதி அபிவிருத்தி அதிகார சபை, பிரதேச சபை, மற்றும் நீர்ப்பாசன சபையினரின் திட்டங்களின் கீழ் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல்கள் அளவிட முடியாத இளப்பினை இந்த இரண்டு தசாப்த கால யுத்த காயம் ஆறமுன் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இந்த வெள்ளம் அடிமேல் அடித்து அந்த மக்களை மண்ணுக்குள் புகுத்தியுள்ளது. அவர்களை கட்டிக்காப்பதில் அல்லும் பகலும் சிரமம் பாராமல் தோழோடு தோழ்கொடுத்து உதவிய பெருமை அப்பிரதேச செயலாளர் உதயசிறி அவர்களையே சாரவேணும். இருப்பினும் இவர்களது சக்கிக்குமேல் இந்த இழப்பை உடன் நிவர்த்தி செய்ய முடியாது. இது நீண்ட காலத்தில் மீழ் கட்டமைக்கவேண்டிய தேவை இருக்கிறது. இதற்க்கு ஏனைய துறைசார்ந்த திணைக்களங்களுடன் சிறந்த ஒருங்கிணைப்பு உருவாக்கப்பட வேண்டியுள்ளது. மாத்திரமல்லாமல் நீண்டு நிலைத்திருக்கும் அபிவிருத்தி சார்ந்து, சமுகம், சுற்றுச்சூழல் மற்றும் பொருளியல் நலன் கருதிய முன்னெடுப்புகள் தான் ஆரோக்கியமான பாதுகாப்பினை வரும் சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் என்பது எனது கருத்தாகும். ஆகவே இம்மக்களின் அவல நிலை தொடரவிடாமல் உதவிபுரிய இயன்ற உதவிகளை செய்யவேண்டும் என்பது எனது அவாவாகும்.
தகவலுக்கு நன்றி பிரதேச செயலர் போரதீவுப் பற்று...

19 February 2011

பாக்கு நீரிணையில் மீன் சண்டை...


இலங்கை மற்றும் இந்தியாவின் தமிழ் நாட்டுப்பகுதியில் கிரிக்கட் செய்திகளை விட பாக்கு நீரிணையை படகுகள் கடக்கும் செய்திகள் தான் கெட்லைன். இவற்றைப் பார்க்கும்போது நாடகம் ஒன்றை பார்ப்பது போன்றுதான் இருக்கிறது. எதுக்காகவோ, யாராலயோ யாரோ நடத்துகின்ற நாடகக் காட்சியில் அப்பாவிப் பொது மீனவர்கள் பந்தாடப்படுவதும், அன்றாடம் உயிரைப் பணயம் வைத்து உலை மூட்டும் இந்த மீனவர்களுக்கு கடல்தான் ஆபத்து என்றால் மனிதனாலுமா என்று ஆத்திரமாய் இருக்கிறது. 

இன்று இரு நாடுகளில் இருந்தும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். அதில் விநோதம் என்ன என்றால் இரு நாட்டவரும் தமிழர்கள். செத்தாலும் பொளச்சாலும் தமிழன்தானே! ம்ம் 21 இலங்கை மீனவர்கள் இந்திய கரையோர காவல் துறையினரால் விடுதலை செய்யப்பட அதே போன்று 136 இந்திய மீனவர்கள் இலங்கை காவல் துறையினரால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மக்களிடையே அரசியல்வாதிகள் தனவந்தர்களின் சூழ்சியால்தான் இவை இடம்பெறுவதாக பரவலாக குசுகுசுக்கப்படுகிறது. ஆகவே இந்த அபாயகரமான அரசியல் வியாபாரிகளை பகுத்தறிந்துகொள்வதும் அவர்களின் உள் நோக்கத்தைப் புரிந்துகொள்வதும் இன்று அவசியமானது.

மீன்பிடி வர்த்தகத்தின் உலகச் சந்தை வியாபாரிகள் இலங்கை இந்திய மீனவர்களை தமது பொருளாதாய ஆதிக்கத்திற்கு உட்படுத்தும் நோக்கத்தைக் கொண்டவர்கள். கூலிக்கு வேலை செய்யும் மற்றும் வறிய மீனவர்களின் நாளாந்தத் உழைப்பு மூலதனத்தை சுரண்டும் இவர்கள் கடற்பரப்பை சந்தைக்கு உவந்த பிரதேசமாக மாற்ற முனையும் நடவடிக்கைக்கு இந்திய இலங்கை அரசுகள் துணை போகின்றன. தமிழக மீனவர்களின் கொலைகள் ஊடாகப் பய உணர்வை ஏற்படுத்தி அவர்களை அரச பின்பலம் கொண்ட பெரு முதலாளிகளிடம் சரணடையச் செய்கின்றது. ஏன ஒரு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது(http://inioru.com/).

நிற்க நமது ஆசிய நாடுகளை கைப்பொம்மையாக வைத்து நமது வளங்கள் மறைமுகமாகச் சுரண்டப்படுகின்றது, என்பது தெரியாமல் இல்லை. ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் அதன் வளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒரு நாட்டின் உற்ப்பத்தியை நிர்ணயிக்கும் காரணிகளாக நிலம், ஊழியம், மூலதனம் மற்றும் முயற்சியாண்மை நான்கும் முக்கியமானது. இதில் நிலம் இயற்கை வளமாகும் ஏனையவை மனித வளமெனக் கொள்ளப்படுகின்றது. ஆனால் அதிகரித்து வருகின்ற சனத்தொகைப் பெருக்கம், அருகிவரும் இயற்கை வளம் என்பனவற்றுக்கேற்ப்ப ஆசியாவின் மக்கள் இசற்றை கையாளவில்லை. அவற்றை அதிகளவாக நுகரவும் பயன்படுத்தவும் தொடங்கி விட்டனர். 

குறிப்பாக இயற்கை வளங்களுள் கடல் மீன்பிடி வளம் ஒரு பொதுவான எல்லோரதும் சொத்து ஆனால் இப்போது அது சில அதிகார வர்க்கத்தினரால் வெளிநாட்டு வல்லாதிக்கத்தின் தொழில் நுட்பத்தோடு அடியோடு அழித்தொழிக்கும் திட்டத்தின் பின்னணியில்தான் இந்த மீன்பிடிச் சண்டை நாடகம் நடக்கிறது.

கடலில் அந்தந்த நாட்டு எல்லைக்குள் யாரும் மீன்பிடிக்கலாம், எவளவும் பிடிக்கலாம், எப்படியும் பிடிக்கலாம் என்பதனால்தான் டைனமோ மற்றும் றோளர் போன்ற சாதனங்களின் துணையுடன் அவற்றை அள்ளிச் செல்லுகின்றனர், ஆனால் அப்பாவி ஏழை மீனவர்களின் நிலமையை இந்த பெரிய முதலைகள் நினைத்துப் பார்க்கத்தவறிவிடுகின்றனர்.

நலப் பொருளியலாளர்கள் இந்த அரசியலுக்கு அப்பால் இவ்வாறான சச்சரவுகள் இல்லாமல் பண்ணுவதற்க்கும், இயற்கை வளத்தின் சம நிலையைப் பேணுவதனூடாக ஒரு பேண்தகு அபிவிருத்தியை அந்த நாட்டு மக்களுக்கு அடையப் பெற மூன்று வகையான அணுகு முறையினைச் சொல்லுகின்றனர்.

1. மீன் பிடிப்பதற்க்கான இடங்களை வரையறை செய்தல்.
குறிப்பாக அரசாங்கங்கம் மீனவர்கள் தாங்கள் ஒவ்வொருவரும் மீன்பிடிக்கும் எல்லைகளை நிர்ணயித்துக் கொடுப்பது.
குறித்த காலப்பகுதியில் மட்டும் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள அனுமதியளித்தல்.
ஏவ்வளவு மீன்பிடிப்பதற்க்கான வலை ஒருவர் வைத்திருக்க வேண்டும் என்பதை வரையறை செய்யதல்.
போன்றவற்றின் ஊடாக இந்த இயற்கை வளத்தை பராமரிப்பதோடு இந்த எல்லைச் சண்டையையும் தவிர்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர்.

2. வரிகளை விதித்தல்
இந்த மீன்பிடித் தொழிலினால் வருகின்ற வெளிவாரி விளைவுகளையும் எல்லை மாறாட்டங்களையும் களைவதற்கு இந்த மீனவர் வரி விதிப்பு அவசியமானது. இது அவர்கள் கடல் வளத்தின் எதிர்காலத்துக்கு செய்யும் சிதைவுகளுக்கான சன்மானமாகப் பயன்படுத்தப்படவேண்டும். இது அவர்களின் நியாயமான மீன்பிடித்தலை ஊக்குவிக்கும் காரணியாகும்.

3. சொத்து மீதான உரிமையை உருவாக்குதல்.
இது சொல்லப்பட்டாலும் நடைமுறையில் கொண்டுவருவது கடினமானதே. குறிப்பாக ஆறுகள் வாவிகளில் மீன்பிடிப்பவர்களுக்கு அந்த அந்த குடும்பங்கள் அவர்களுக்கு வகுக்கப்பட்ட எல்லைகளுக்குள்ளயே மீன்பிடிக்க வேணும் என்கின்ற ஒரு உரிமையை உருவாக்கலாம். அதுபோல் கடல்களிலும் நாட்டுக்கு நாடு வரை செய்யப்பட்டிருக்கும் எல்லைகள் சம்மந்தமான வரையறை மீனவர்களிடையேயும் தெழிவுபடுத்தப்பட்டிருக்க வேண்டும்.

இம்மூன்று அணுகு முறையூடாகவும், எதிர்காலத்தில் வளங்கள் நிலைத்து நின்று அது அடுத்த சந்ததிக்கும், இன்றய மீனவ சந்ததிக்கும் பயனுறுதி வாய்ந்த ஆரோக்கியமான ஒரு சூழலை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை என்றே கூறலாம்.

18 February 2011

உலகில் உயர உயரப் போகும் வேலையின்மை விரக்தி


கூறுவார்கள் காய்ச்சலும் தலையிடியும் வந்தால்தான் தெரியும் என்று ஆமாம் அனுபவித்த இளம் பட்டதாரிகளிடம் காணப்படும் மன விரக்தி எங்கே போய் முடியும் என்று என்னால் கூறமுடியாமல் இருக்கிறது. இன்னும் ஒன்னு கூறுவார்கள் ' ஒரு மனிதனுக்கு அவன் வாழ்க்கையில் முன்னேற்றமடைய ஒன்று முயற்சி மற்றது அதிஸ்ட்டம்' இரண்டும் தேவை என்று. ஆனால் இரண்டுமே சரிவரமல் எத்தனையோ உள்ளங்கள் உடைந்து கொண்டிருக்கின்றன. சரி இப்போ விதிக்கு சலுட் அடிக்கும் நேரம் வந்திருக்கு அவர்களுக்கு...

நம்ம மட்டுமில்லை உலகிலயே 2009இல் 212 மில்லியன் மக்கள் வேலை இல்லாமல் இருப்பது 2007 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 34 மில்லியன் தொகையினால் அதிகரித்துள்ளது. இது அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் பொருளாதார நெருக்கடி காரணமாகத்தான் நேர்ந்துள்ளது என சர்வதோச ஊழியர்களுக்கான நிறுவகம் (ILO) அறிக்கை வெளியிட்டுள்ளது.

தவிரவும் சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் சர்வதோச ஊழியர்களுக்கான நிறுவகம் என்பன 2010 இற்கு பின் அதிகரிக்கலாம் என எதிர்வு கூறியிருந்தமை பலித்துவிட்டது. 2010 இல் மட்டும் 3 மில்லியன் வேலையற்ற மக்கள் தொகை அதிகரித்துள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் இந்த மாற்றம் பிராந்தியங்கள், நாடுகளை பொறுத்து வேறுபட்டு நிற்கிறது என்றும் அவை குறிப்பிடுகின்றன. இந்த வேலையற்ற சமுகத்தின் சமுகப்பாதுகாப்பு, வேலையற்றோருக்கான நன்மைகள், என்பன கோடிக்கணக்கான மக்களுக்கு கிடைக்கப் பெறாமலேயே இருக்கின்றமை துரதிஸ்ட்டமானதே.

இங்கே ஒப்பீட்டளவிலான வேலையற்றோரின் சில தரவுகளை தருகிறேன். ஆசியாவில் குறிப்பிடத்தக்க நாடுகளின் தரவுகள் இங்கே...


ஐரோப்பிய நாடுகளில் வேலையற்றோரின் விகிதங்களை இங்கே காணலாம்.
சர்வதோச ஊழியர்களுக்கான நிறுவகத்தின் பணிப்பாளர் சோமாவியா குறிப்பிடுகையில் அரசியல்வாதிகள் வேலைவாய்ப்பை வளங்குவதில் தயக்கம் காட்டுவதாகம், இதற்கு பதிலாக வங்கித்துறைகள், தனியார் கம்பனிகள் அவர்களுக்கான தொழில் வாய்ப்பினை உருவாக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டமை அரசின் தொழில் உருவாக்கத்தில் அண்மைக்காலமாக நிலவி வருகின்ற தொய்வினை படம் பிடித்துக் காட்டுகின்றதல்லவா?

இவரின் அறிக்கைப்படி இந்வேலையற்ற இளைஞ்ஞர் யுவதிகளிடையே இலகுவில் பாதிக்கக்கூடிய நலிவுற்றவர்களின் தொகை 2008 காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 2009 இல் இது 1.5 பில்லியனாக அதிகரிததுள்ளது. இது மொத்த உலகலாவிய வேலையற்றோரில் அரைப்பங்காகும் என அதிர்சி தகவலை அந்நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளனர். 

மேலும் கூறுகையில் உலகில் வேலை செய்தும் 633 மில்லியன்; குடும்பத்தினர் நாளாந்தம் 1.25 டொலர் வருமானத்தினைப் பெற்றுக்கொண்டிருக்கின்றனர் என்றும் இவர்கள் மேலதிகமாக உள்ள 215 மில்லியன் ஊழியர்கள் 2009  இல் வறுமைக்கோட்டில் கால் பதித்து வறியவர்களாக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றமை, எமது எதிர்காலத்தினை கேள்விக்குறியாக்கியுள்ளது.

எப்படியாவது வேலை கிடைத்து விட்டதென்றால், அவர்கள் தங்களது சம்பளத்தினைப் பெறுவதில், வேலை பார்க்கும் இடத்தில் பராபட்சமாக நடத்தப்படுகின்றனர். வேலை செய்யும் இடத்தில் 100 மில்லியனுக்கும் மோலான மக்கள் இன்று பராபட்சம் காரணமாக ஒதுக்கப்பட்டு வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.. இது வெறுமனே ஒரு வன்முறை மாத்திரமல்ல அதற்கும் மேல் அவர்களது உரிமை மீறலாகும் என்றும் இவ்வமையத்தினால் கூறப்படுகின்றது.

கிட்டத்தட்ட 12.3 மில்லியன் மக்கள் கட்டாயத்தின் பேரில் வேலை வாங்கப்படுகின்றனர். இவர்கள் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர். இவர்களுக்கான வேதனங்கள் வழங்கப்படுவதும் இல்லை வேறு சலுகைகளும் இல்லை. அப்பாடா தப்பிச்சோம் நாம என்பதற்க்கில்லை ஏனெனில் நம்ம ஆசியாவில் இது அதிகமாக காணப்படுகிறது.

ஆகவே வேலை தேடி தேடி கிடைத்து விட்டாலும் நிறையவே தடை தாண்ட வேண்டி இருக்கிறது. ஏதோ வேலை என்பது குதிரைக் கொம்புபோல் அரிதாகும் அளவுக்கு நாடுகளின் பொருளாதார நெருக்கடி, அரசியல் இறுக்கம், பாரபட்சம், இயற்கை அனர்த்தம், வளப்பற்றாக்குறை, சனத்தொகை அதிகரிப்பு மற்றும் இன்னோரன்ன காரணிகள் செல்வாக்கு செலுத்தினாலும் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் கொள்கை வகுப்பாளர்கள், தனியார் கம்பனிகள் மற்றும் வங்கித்துறையினர் கைதேர்ந்த அறிவாளிகளின் துணையுடன் தொழில் உருவாக்கங்களை செம்மையாக உன்மையாக செய்ய மனசி வைத்தால் முடியும் இதைத்தான் சர்வதேச ஊழியர்களுக்கான நிறுவகமும் சுட்டிக்காட்டியுள்ளது.

கண்கள் ரெண்டும் கனவுகள் கண்டு பூத்துப் போச்சுடா..


வேலை தேடி வேலை தேடி
வெறுத்துப் போச்சுடா
கண்கள் ரெண்டும் கனவுகள் கண்டு
பூத்துப் போச்சுடா
தம்பி பூத்துப் போச்சுடா...

ஓடி ஓடி படிச்சிப் படிச்சி
மூளையெல்லாம் தேஞ்சிபோச்சி
படிச்சிருந்தா மத்தவன் பாத்து
பகிடி பண்ணுறான் -நம்ம
வேல தேட அனுபவம் கேட்டு
மகிடி ஊதிறான்- தம்பி
பணத்தை கேட்கிறான்?

அரச தொழிலை நம்பி நம்பி
அரை வயது போனதிப்போ
புருசலட்சணம் இதுவா என்றும்
கேட்கிறானுங்கோ –நீ
றோட்டில் இருந்து வேலைகேட்பது
தொழிலுக்காகாது –தம்பி
தொழிலுக்காகாது...

வேலை தேடி வேலை தேடி
வெறுத்துப் போச்சுடா
கண்கள் ரெண்டும் கனவுகள் கண்டு
பூத்துப் போச்சுடா
தம்பி பூத்துப் போச்சுடா...

13 February 2011

காலம் மாறலாம் காதல் மாறுமா?..













வேதம்
கீதை
சித்தாந்தம்
காதல் சொன்னது....

..காதல்
இரண்டு உள்ளம்
இணையும்
வித்தை சொன்னது..
கண்களை
தானமிடும்
கருணை சொன்னது...
எதிரியை
பலம் உடைக்கும்
வீரம் சொன்னது..

உன்னில் என்னை
என்னில் உன்னை
தொலைக்க சொன்னது
உயிர் ஒன்றை அன்றி
உடமைகளை
துச்சமெனச் சொன்னது...

மௌன மொழி -உன்
நாமம் சொன்னது
மலர் விழியோ- உன்
வருகை சொன்னது

ஆயிரம் சொல்லும்
காதல்...
அனுபவித்தால் -தூசி
சாதல்....


அனைத்து காதலருக்கும் எனது உளம் பூத்த காதலர் தின வாழ்துகள்..