ADS 468x60

24 July 2017

வக்கியெல்லை கிராமத்து மக்களுக்கு அமெரிக்க பேராசிரியர்களின் விழிப்பூட்டல்.

பச்சை பச்சையாய் வயல், பால் சொரியும் பசுக்கூட்டம், கொச்சை கொச்சையாய் கனிகள் கொஞ்சி விளையாடும் மயில்கள், அச்சம் இல்லாத மக்கள் அண்ணாந்து நிற்கும் மலைகள், இவைகளை கண்டு இரசித்து கடந்து போய்க்கொண்டிருந்தோம் பல மயில்களைக் கடந்து. எமது எல்லை தெய்வங்கள் அங்குதான் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடாமல் இம்முறையும் அவர்களை பலப்படுத்தும், ஊக்கப்படுத்தும் தொடர்புபடுத்தும் ஒரு பயணமாக அமைத்துக்கொண்டேன்.

இந்தக் கிராமத்தினைப் பொறுத்தமட்டில், கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயத்தினை முன்னிறுத்தி இங்கு இருந்த மக்களுடன் இன்னும் சில குடும்பங்கள்  குடியேற்றப்பட்டிருந்தனா். அதனால் தற்போது  இக்தகிராமம் தமிழ்மக்களின் பூர்வீகக் கிராமமாக இருந்து வருகின்றது. இங்குள்ள மக்கள் பலர் விவசாயத்தினை மேற்கொண்டு வருவதுடன், யுத்தகாலத்திற்கு முன்னர் கிட்டத்தட்ட 550 குடும்பங்கள் இங்கு குடியிருந்ததாகவும் அவர்களில் வெறும் 150 குடும்பங்கள்தான் இந்த இடத்தில் தற்போது இருப்பதாகவும், அதிலும் யானைகளின் அட்காசம் காரணமாக இன்னும் பலா் இடம்பெயர்ந்த வண்ணமுள்ளனர் என்றும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த இந்த ஊர் இளைஞர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.

எமது திட்டமிடலாளர்களின் கிராமியப் பொருளாதார அக்கறை!

எமது மாவட்டத்தினைப் பொறுத்தளவில் கிராமிய அபிவிருத்தி சார்ந்த அணுகுமுறைகள் ஒரு தெழிவு இல்லாமல் இருப்பதனை அவதானிக்கலாம். வளர்ந்து விட்ட நாடுகளைப்போல் கைத்தொழில் அபிவிருத்திக்கு மாறாக எமது கிராமப்புறங்களின் பொருளாதாரம் விவசாயம் சார்ந்து காணப்படுகின்றது. அதற்கேற்ப வளமார்ந்து காணப்படுவதுடன் அவற்றில் பரம்பரை ரீதியான பரீட்சயமும் அவர்களுக்கு இருப்பது முக்கியமானது.

எமது நாட்டின் அபிவிருத்தி வரலாற்றுப்பாதையில் கிராமிய பொருளாதார முன்னேற்றத்திற்கு தேசிய மற்றும் சர்வதேச நிதியியலாளர்கள் பல முதலீடுகளை செய்துள்ளனர், ஆனால் மாவட்ட, கிராம மட்ட செயற்பாட்டாளர்களின் வினைத்திறனற்ற அமுலாக்கல் செயற்பாட்டினால் கொண்ட குறிக்கோளினை அடைந்துகொள்ளாத வரலாறுகள்தான் அதிகம். அவர்கள் அதிகமாக இந்த கிராமப் புற மக்களிடையே நிவாரணம், நஸ்ட்டஈடு கொடுப்பதில் பாதீட்டில் அதிகம் செலவிடப்படுவதனால் மக்கள் தங்கிவாழும் ஒரு மனநிலையில் தள்ளப்படும் ஒரு நோய்க்கு அளாக்கப்படுகின்றனர். இதன் பலனால், பல வறியவர்கள் தன்னம்பிக்கையினை அதுபோல் முன்வருவருகின்ற எண்ணத்தினை மற்றும் முயற்சியாண்மையை இழந்துள்ளனர். அபிவிருத்திக்காக ஒதுக்கப்படுகின்ற பல ரூபாய்க்கள், உள்ளீடுகள்; என்பவை வீட்டுரிமையாளர்களின் நுகர்வு தேவையை நோக்கி திசைதிரும்புவதனையும் காணலாம்.

23 July 2017

மட்டக்களப்பில் டெங்கு இடர் அதிகரிப்பதில்; செல்வாக்குச் செலுத்தும் சமுககாரணிகள் மீதான ஆய்வு.

 2017 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தி வரை ஒரு இலட்­சத்து 2,809 டெங்கு நோயா­ளர்கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­தோடு இந்­நோ­யினால் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்ட 268 பேர் இது­வ­ரையில் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.
இவ்­வ­ரு­டத்தின் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் கண்­ட­றி­யப்­பட்­டுள்ள நோயா­ளர்­களின் தொகை­யா­னது கடந்த வருடம் முழு­வ­திலும் இனங்­காணப்­பட்ட டெங்கு நோயா­ளர்­களின் தொகையை காட்­டிலும் இரு மடங்­காக அதி­க­ரித்­துள்­ள­தா­கவும் அமைச்சு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

19 July 2017

மட்டக்களப்பு எல்லைக் கிராமங்களின் கல்வி நிலைதான் என்ன??


வானம் தொடும் எல்லை அது. நீண்ட இடைவெளிகளைத் தாண்டி சென்றுகொண்டு இருந்தோம். பாதங்களை பகலவன் பட்ட மலைச் தொடர்கள் சுட்டெரிக்க, வெய்யிலையும் வென்றுவிடும் குளிர்ந்த புன்னகையுடன் குழந்தைகள் நடந்து வந்தனர். இரு வர்க்கங்களாக பிரிந்து கிடக்கும் எமது மக்களுக்கிடையே உள்ள வேறுபாட்டை இந்த குழந்தைகளின் முகத்தில் இருந்து அடையாளம் காணக் கூடியதாக இருந்தது.

ஆசை கொள்ளவைக்கும் தேத்தாத்தீவு பாமுருகன் ஆலயம்.

நிலவினை விரித்த வெள்ளை மணல் அருகே நித்திரை கொள்ளவைக்கும் மதிரை நிழல்;  சுற்றி நெல் சொரியும் வயல்வட்டை எங்கும் நெஞ்சினை தாலாட்டும் குளங்குட்டை;  கூடி குரவைபோடும் நாரைகள் சுற்றி பாடி இரையைத் தேடும் பருந்துகள்; விரிந்து சிரித்திருக்கும் கார்த்திகைப்பூ எங்கும் விழுந்து கிடந்திருக்கும் நாவற்ப்பழம்; அலை கொண்டு தாலாட்டும் ஆற்றங்கரை அருகே உவர்ப்பள்ளிச் சொரியும் உப்புத்தரை; சில்லென்று அலைமோதும் வில்லுக்குளம் அதில் அதில் சிலுசிலென விளையாடும் மீன்கூட்டம்;  இது பழகியோர்க்கு மட்டும் பயத்தை நீக்கும் காடு  அதுதான் இன்று பாலமுருகன் உறையும் பால்மணல் மேடு.

கச்சக்கொடிஸ்வாமி மலை தமிழர்களின் பூர்வீக கிராமமா?

அடர்ந்த காடு. இளந்தென்றல். துள்ளிக் குதிக்கும் மான்கள். புதர் மறைவில் முயல்கள். கீச் கீச் பறவைகளின் இசை நாதம். பஞ்சு மெத்தை புற்கள். மலைக்குன்றில் வெண்பனி மேகங்கள். மலை முகட்டில் குதித்து எழும் வெள்ளை அருவி என்பன மகிழ்ந்து இருப்பதுபோல் அங்குள்ள எம் தமிழ் உறவகள் வாழவில்லையோ என்று எண்ணத்தோன்றுகின்றது. மட்டக்களப்பின் தென் மேல் பகுதியில் தமிழ் வரலாற்று முக்கியமான இடங்களை தன்னகத்தே கொண்டுள்ள பகுதிகளுக்குள் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவு முக்கியமானதாகும். இங்கு இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள அழகானதும் எல்லைக் கிராமமுமாக திகழ்வது கச்சகொடி சுவாமி மலையாகும்.

17 July 2017

இப்படியும் வாழும் ஒரு சமுகம் இன்னும் மட்டக்களப்பில் இருப்பதைக் கண்டு வியந்துபோனோம்.

இருட்டிக்கிடந்த மழை கால்களின் இடைவெளிகளுக்குள், காற்றின் கனத்த சத்தத்திற்க்கு மத்தியில் வேற்றுவாசிகளைப் போல் வியந்து பார்த்த அந்த மக்கள் கூட்டத்துக்குள் நானும் எனது நண்பனும் சிரித்துக்கொண்டு நுழைகிறோம்.

அவர்கள் இன்முகத்துடன் அந்த வந்தோரை வாழவைக்கும் குணம் மாறாமல் வரவேற்றனர். அந்த இடம்தான் 'கற்ப்பக்கேணி'. இந்த கிராமம் பல தடவைகள் யுத்தத்தினால் இடப்பெயர்ச்சிக்குள் சிக்கிய ஒரு தனி காட்டுப்பகுதியில் அமைந்துள்ள நலிவுற்ற பிரதேசமாகும். இது மட்டக்களப்பு நகருக்கு மேற்க்கே வவுணதீவுப் பிரதேச எல்லைக்குள் சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

யாருக்கு தெரியும் இன்னும் தமிழர்கள் இருட்டுக்குள் கிடப்பது

கால்கள் நகர மறுத்தன ஓங்கிக் குலை(ர)க்கும் நாய்களின் சத்தம், ஓரங்களில் நிற்க்கும் பற்றைக்காடுகள், தேங்கிக் கிடக்கும் மழை தண்ணீர்,  இவற்றுக்கு இடையே மின்னிக் ஒளிரும் குப்பி விளக்குகளின் அடியில் மண்டியிட்டுக் கிடக்கும் குழந்தைகளை போகும் இடம் எல்லாம் கண்டோம்.

எமது நாடு எங்கோ சென்று கொண்டிருக்கிறது, இருந்தும் இன்னும் இருளில் மண்டிக் கிடக்கும் எம் தமிழ் குழந்தைகளின் கல்வியும், இருள் மயமாய் போய்விட்டது. அது ஒரு கசப்பான அனுபவம். சென்ற பரம்பரை அந்த  கல்விச் செல்வத்துக்கு உரித்தற்றவர்களாக நடந்த கொடிய யுத்தம் அவர்களை நிர்க்கதியாக்கியுள்ளது.