நினைக்கின்ற நேரமெல்லாம் அருகிருப்பார் அப்பா
நினைவுகள் ஒருநாளும் மறைவதில்லை
அணைத்திடும் ஆருயிராய் அனைவருக்கும்- எம்மை
இணைத்திடும் ஓருயிராய் ஆகிவிட்டார்
காலையிலே நானும் போவதென்னறால் -அவர்
கண்மூடித் தூங்காமல் விழித்திருப்பார்
எமக்காக செய்தவைதான் கொஞ்சமில்லை
எமக்காக செய்தவைதான் கொஞ்சமில்லை- அங்கு
உருவான பாசத்துக்கோர் பஞ்சமில்லை
குழந்தைகளோடு அப்பா கொஞ்சிடுவார் -அவர்
கொண்டாட்டம் என்று சொன்னால் வந்துநிற்பார்
ரோடும் உழவோடும் வாழ்ந்துவிட்டார்- இன்று
மீழாத தூக்கமதில் ஆழ்ந்துவிட்டார்
நினைக்கின்ற நேரமெல்லாம் அருகிருப்பார் அப்பா
நினைவுகள் ஒருநாளும் மறைவதில்லை
அணைத்திடும் ஆருயிராய் அனைவருக்கும்- எம்மை
இணைத்திடும் ஓருயிராய்; ஆகிவிட்டார்
0 comments:
Post a Comment