ADS 468x60

13 August 2021

நாங்கள் மீண்டும் மீண்டு திரும்ப முடியாத நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்,

அரசாங்கம் கடைசி முயற்சியாக மட்டுமே நாட்டில் முடக்குதலை விதிப்பதாக கூறியது. அதன் பொருள் என்னவென்றால், நாடு இதுவரை முடியாத இறுதி நிலைக்கு வரவில்லை என்பதுதானே. இருப்பினும், கோவிட் தொடர்பான இறப்புகள் இப்போது தினசரி சராசரியாக 150 ஐத் தாண்டிவிட்டன, மேலும் குறிப்பாக டெல்டா வைரஸ் திரிபுகளின் எண்ணிக்கைப் பதிவு மோசமாக இருக்கின்றது மறுபுறும். 

அரசாங்கத்தின் நம்பிக்கை மற்றும் சில நிபுணர்களின் ஆலோசனை என்னவெனில், இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சிறந்த வழி பொதுமக்களுக்கான தடுப்பூசியினை துரிதப்படுத்துவதாகும். இது நாட்டினை முடக்குவதற்கான எந்த தேவையினையும் ஏற்படுத்தாது என கருத்திடுகின்றனர், அதனால் அதனை துரிதப்படுத்தி வருகின்றனர் அது வரவேற்கத்தக்கதுதான்.

11 July 2021

நல்ல சிந்தனைகளே வெற்றிக்குக் காரணம்

நாம் இன்று புதிய மாற்றமடைந்த உலகில் காலடி எடுத்து வைத்திருக்கின்றோம். அதற்கு தகுந்தாற்போல் நாம் மாறாவிட்டால் இந்த உலகின் கடைசி இருக்கையிலே தான் இருக்கநேரும். நாம்  புதிய புதிய வழிமுறைகளை பரீட்சித்து முன்னேற வேண்டும். அது காலத்தின்தேவை. அதனால் இன்றைய உலகம் வர்த்தகத்தினை அதுவும் இன்னோவேற்ரிவ் விசினஸினை முன்னிலைப்படுத்தி அதற்கான கல்வியை திறனை வழங்கி வருகின்றது.

சரி இதற்காக, விரிவான சிந்தனை, தெளிவான சிந்தனை, தொலைநோக்கு சிந்தனை என நிறைய முறை படித்திருப்பீர்கள். அது என்ன தெளிவான சிந்தனை? திட்டமிட்ட சிந்தனை?

13 June 2021

கொரோணாவின் கொடூரம் மாதவிடாய்க்குத் தெரியுமா?

இன்று பலர் பல 'சொல்லொண்ணாக்' கொடுமைகளை இந்த மூடிய காலத்தில் அனுபவித்த வருகின்றனர். அதை நீங்கள் அறியாமல் இல்லை. ஆனால் இந்த நெருக்கடி ஏழை பணக்காரர் எனப் பார்க்காமல் அதிகாரமுள்ளவர் அற்றவர் என நோக்காமல் சுழட்டிச் சுழட்டி அடிக்கின்றது.

இருந்தாலும் எதிலும் துவண்டுபோகக்கூடிய நலிவுற்று நசிந்து போகக்கூடிய மிக பின்தங்கிய சமுகம், மக்கள் கூட்டம் இலங்கையில் இருக்கின்றார்கள். அவர்களால் நீங்கள் ஒன்லைன் மூலம் வழங்குகின்ற கல்வியைப் பெறமுடியாது, அன்றாடத் தொழில் இன்றி அரைவயிரைக்கூட நிரப்பமுடியாது, வக்சினையும் வசதிவாய்பையும் பெற்று கொரோணாவுக்கு தப்பவும் முடியாது. 

05 June 2021

இணையவழிக் கல்வி மாணவர்களுக்கு சாத்தியமா சங்கடமா!

S.Thanigaseelan;
அறிமுகம்: இன்று கொவிட் -19 வைரஸின் தாக்கம் உலகெங்கும் பரவலாகி அச்சுறுத்தி வரும் வேளையில், இலங்கையிலும் தாக்கத்தை வலுவாகக் காட்டிவருகிறது. கடந்த மே மாதத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை இன்று வரை நீடித்து பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்விக் கல்லூரிகளை வழக்கமான முறையில் செயல்படாத சூழலுக்குத் தள்ளிவிட்டது. இதனால் ஏனைய துறைகளினை விடவும் கல்வித்துறை பாரிய இடர்களை எதிர்கொண்டு வருகின்றதை நாம் அனைவரும் அறிவோம். 

சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தில் நாம் நினைவில் கொள்ளவேண்டியவை.

சுற்றுச்சூழல் அமைப்புகள் என்பது தாவரங்கள், விலங்குகள் மற்றும் மக்கள் மற்றும் அவற்றின் சுற்றுப்புறங்களான இயற்கை, நகரங்கள் மற்றும் தோட்டப்புறங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பினைக் குறிக்கும் (ஐ.நா., 2021). மிக நீண்ட காலமாக, மக்கள் நமது பூமியின் சுற்றுச்சூழல் அமைப்புகளை சுரண்டிக்கொண்டும் மற்றும் அழித்தும் வருகின்றனர், இதனால் இயற்கை வாழ்விடங்கள் மற்றும் அதனோடுயைந்த ஏனைய வளங்கள் என்பன இழக்கப்படுகின்றன, இது எம்மிடையே காலநிலை நெருக்கடியை மிகத்தீவிரப்படுத்துகிறது. நாம் அனைவரும் நம் உயிர்வாழ்வதற்கு ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளையே சார்ந்து இருக்கிறோம் என்பதனை மறந்துவிடலாகாது.

03 June 2021

இலங்கை பங்களாதேசிடமே 200 மில்லியன் கடன் வாங்கிச் சாதனை.

வங்கியில் நாம் கடன் வாங்கச் சென்றால், அங்கு நமது சொத்து மதிப்பு, வேறு கடன் ஏதும் பெற்று செலுத்திய வரலாறுகள், திருப்பிச்செலுத்தும் தன்மை என்பனவற்றை ஆராய்தே கடன் வழங்குவதுண்டு. ஆனால் அவ்வாறான ஒரு நிலைப்பாட்டில் எமது நாடு உள்ளதா என்பதே அனைவரதும் கேள்வி. குறிப்பாக இலங்கையின் வரலாறு பரந்த இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. மகாவன்சா, தீபவன்சா, மற்றும் சூலவன்ச போன்ற பாலி இலக்கியங்களின் அடிப்படையில் வரலாற்று காலம் சுமார் கி.மு 3 ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. அனுராதபுர இராச்சியத்தின் முதல் இலங்கை ஆட்சியாளர் பாண்டுகபயா கிமு 4 ஆம் நூற்றாண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளார்.

02 June 2021

இலங்கையில் நாம் பணக்காரர்களாகமுன் வயதாகிவிடுகின்றோம்.

நாம் ஏன் உலகின் முன்னேறிய நாடுகளுக்கு விரும்பி இடம்பெயர்கின்றோம்? நமது வாழ்க்கையில் இளமைப்பருவத்திலே மகிழ்சியாகவும் எமது அடுத்த சந்ததியினரின் வாழ்க்கைத் தரம் எம்மைவிட ஒரு படி நன்றாக இருக்கவும் வேண்டும் என்ற நோக்கிலேயே நாம் அந்த முடிவிற்கு வருகின்றோம். இலங்கையில் நாம் வயதாகுவதற்கு முன்னர் வசதி வாய்ப்புக்களுடன் வாழ முடியாது என்ற அடிப்படையிலே பலர் இந்த முடிவினை எடுக்கின்றனர். 

நமது வாழ்க்கை பெரும்பாலும் நேரம், பணம் மற்றும் ஆற்றலுக்கும் இடையிலான தொடர்ச்சியான போர் என்று கூறப்படுகிறது. நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது, எங்களுக்கு நேரமும் சக்தியும் அல்லது ஆற்றலும் இருந்தன, ஆனால் எங்களுக்கு பணம் கிடைக்காததால் மட்டுப்படுத்தப்பட்டோம். நாங்கள் வேலை செய்து பணம் சம்பாதிக்கத் தொடங்கியபோது, நேரத்தைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. நாம் வாழ்க்கைப் பயணத்தை துவங்கும்போது, நமக்கு நேரமும் பணமும் இருக்கக் கூடிய ஒரு காலத்திற்கு வருவோம், ஆனால் ஆற்றல் குறைந்து காணப்படும்.

29 May 2021

உரவகைகளை இறக்குமதித் தடைசெய்வது ஆரோக்கியமான திட்டமா?

அறிமுகம்.

சிறிது நாட்களுக்கு முன்னர் எமது நாட்டில் பெரிதாகப் பேசப்பட்ட ஒரு பிரச்சினை. நாட்டில் இரசாயன உரவகைகளுக்கு (பசளை) மற்றும் கிருமிநாசினிகளுக்கு அல்லது பூச்சிநாசினிகளுக்குப் பதிலாக சேதன அல்லது கரிம அல்லது இரசாயனமற்ற உர மற்றும் கிருமிநாசினிகளையே இனி வரும் காலங்களில் விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார். அவர் வெளிப்படையாக தனது பொருளாதார ஆலோசகர்களின் ஆலோசனையின் பேரில், நாட்டிற்கு இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை இறக்குமதி செய்வதை இலங்கை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டமை ஒரு பாரிய பேசுபொருளாக இருந்தது. அது மக்களிடையே சாதகமாகவும் மறுபுறம் பாதகமாகவும் பரிந்துரைத்துப் பட்டி தொட்டியெல்லாம் பரவி ஒரு குழப்பத்தையே ஏற்படுத்தியது. அதைத்தான் நான் தலைப்பில் நச்சுத்தன்மையான உரங்களையும் கிருமிநாசினிகளையும் பாவிப்பது உண்மையில் ஆரோக்கியம் கிடையாது. இருப்பினும் அவற்றை உடன் நிறுத்துவது விவசாயத்துறைக்கு ஆரோக்கியம் இல்லை என்பதனையே இக்கட்டுரை ஆராய்கின்றது.