அரசாங்கத்தின் நம்பிக்கை மற்றும் சில நிபுணர்களின் ஆலோசனை என்னவெனில், இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சிறந்த வழி பொதுமக்களுக்கான தடுப்பூசியினை துரிதப்படுத்துவதாகும். இது நாட்டினை முடக்குவதற்கான எந்த தேவையினையும் ஏற்படுத்தாது என கருத்திடுகின்றனர், அதனால் அதனை துரிதப்படுத்தி வருகின்றனர் அது வரவேற்கத்தக்கதுதான்.
13 August 2021
நாங்கள் மீண்டும் மீண்டு திரும்ப முடியாத நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்,
11 July 2021
நல்ல சிந்தனைகளே வெற்றிக்குக் காரணம்
சரி இதற்காக, விரிவான சிந்தனை, தெளிவான சிந்தனை, தொலைநோக்கு சிந்தனை என நிறைய முறை படித்திருப்பீர்கள். அது என்ன தெளிவான சிந்தனை? திட்டமிட்ட சிந்தனை?
13 June 2021
கொரோணாவின் கொடூரம் மாதவிடாய்க்குத் தெரியுமா?
இருந்தாலும் எதிலும் துவண்டுபோகக்கூடிய நலிவுற்று நசிந்து போகக்கூடிய மிக பின்தங்கிய சமுகம், மக்கள் கூட்டம் இலங்கையில் இருக்கின்றார்கள். அவர்களால் நீங்கள் ஒன்லைன் மூலம் வழங்குகின்ற கல்வியைப் பெறமுடியாது, அன்றாடத் தொழில் இன்றி அரைவயிரைக்கூட நிரப்பமுடியாது, வக்சினையும் வசதிவாய்பையும் பெற்று கொரோணாவுக்கு தப்பவும் முடியாது.
05 June 2021
இணையவழிக் கல்வி மாணவர்களுக்கு சாத்தியமா சங்கடமா!
சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தில் நாம் நினைவில் கொள்ளவேண்டியவை.
03 June 2021
இலங்கை பங்களாதேசிடமே 200 மில்லியன் கடன் வாங்கிச் சாதனை.
02 June 2021
இலங்கையில் நாம் பணக்காரர்களாகமுன் வயதாகிவிடுகின்றோம்.
நமது வாழ்க்கை பெரும்பாலும் நேரம், பணம் மற்றும் ஆற்றலுக்கும் இடையிலான தொடர்ச்சியான போர் என்று கூறப்படுகிறது. நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது, எங்களுக்கு நேரமும் சக்தியும் அல்லது ஆற்றலும் இருந்தன, ஆனால் எங்களுக்கு பணம் கிடைக்காததால் மட்டுப்படுத்தப்பட்டோம். நாங்கள் வேலை செய்து பணம் சம்பாதிக்கத் தொடங்கியபோது, நேரத்தைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. நாம் வாழ்க்கைப் பயணத்தை துவங்கும்போது, நமக்கு நேரமும் பணமும் இருக்கக் கூடிய ஒரு காலத்திற்கு வருவோம், ஆனால் ஆற்றல் குறைந்து காணப்படும்.
29 May 2021
உரவகைகளை இறக்குமதித் தடைசெய்வது ஆரோக்கியமான திட்டமா?
அறிமுகம்.
சிறிது நாட்களுக்கு முன்னர் எமது நாட்டில் பெரிதாகப் பேசப்பட்ட ஒரு பிரச்சினை. நாட்டில் இரசாயன உரவகைகளுக்கு (பசளை) மற்றும் கிருமிநாசினிகளுக்கு அல்லது பூச்சிநாசினிகளுக்குப் பதிலாக சேதன அல்லது கரிம அல்லது இரசாயனமற்ற உர மற்றும் கிருமிநாசினிகளையே இனி வரும் காலங்களில் விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார். அவர் வெளிப்படையாக தனது பொருளாதார ஆலோசகர்களின் ஆலோசனையின் பேரில், நாட்டிற்கு இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை இறக்குமதி செய்வதை இலங்கை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டமை ஒரு பாரிய பேசுபொருளாக இருந்தது. அது மக்களிடையே சாதகமாகவும் மறுபுறம் பாதகமாகவும் பரிந்துரைத்துப் பட்டி தொட்டியெல்லாம் பரவி ஒரு குழப்பத்தையே ஏற்படுத்தியது. அதைத்தான் நான் தலைப்பில் நச்சுத்தன்மையான உரங்களையும் கிருமிநாசினிகளையும் பாவிப்பது உண்மையில் ஆரோக்கியம் கிடையாது. இருப்பினும் அவற்றை உடன் நிறுத்துவது விவசாயத்துறைக்கு ஆரோக்கியம் இல்லை என்பதனையே இக்கட்டுரை ஆராய்கின்றது.