காய்ச்சல்
ஏற்பட்ட
முதல்
இரண்டு
அல்லது
மூன்று
நாட்களில்,
தலைவலி, உடல்
வலி
மற்றும்
சோர்வு
ஆகிய
அறிகுறிகள்
டெங்கு
மற்றும்
இன்புளுவன்சா
ஆகிய
இரு
நோய்களுக்கும்
பொதுவானவையாகவே
காணப்படுகின்றன.
இதனால், வெறும்
புறவெளித்
தோற்றத்தை
வைத்து
நோயை
வேறுபடுத்திப்
பார்ப்பது
மருத்துவ
ரீதியாகவும்
நம்பகத்தன்மையற்றது.
எனவே, காய்ச்சல்
இரண்டு
நாட்களுக்கு
மேல்
நீடித்தால்,
தாமதிக்காமல்
மருத்துவரை
அணுகி
இரத்த
அணுக்கள்
பரிசோதனை
(Full Blood Count) மேற்கொள்வது
இன்றியமையாததாகும்.
குருதிச்
சிறுதட்டுகளின்
(Platelets) எண்ணிக்கையை
அடிப்படையாகக்
கொண்டே, நோயின்
தன்மையையும்
தீவிரத்தையும்
மருத்துவர்களால்
துல்லியமாக
மதிப்பிட
முடியும். இப்பரிசோதனை
செலவு
அதிகமான
ஒன்றுமன்று;
எனினும்
இதனை
மேற்கொள்வதில்
இன்னும்
பலரும்
தயக்கம்
காட்டுவது
கவலைக்குரிய
விடயமாகும்.
டெங்கு
நோயில்
மிகவும்
அபாயகரமான
கட்டம்
காய்ச்சல்
தணியும்
தருணமே
என்பது
பலருக்கும்
தெரியாத
உண்மையாகும்.
காய்ச்சல்
குறைந்த 24 முதல் 48 மணி
நேரத்திற்குள்
உடலின்
பாய்பொருள்
கசிவு (Plasma Leakage) மற்றும்
உட்புற
இரத்தப்போக்கு
போன்ற
கடுமையான
சிக்கல்கள்
ஏற்படக்கூடும்.
கடுமையான
வயிற்று
வலி, தொடர்ச்சியான
வாந்தி, மூக்கு
அல்லது
பல்
ஈறுகளில்
இரத்தப்போக்கு,
வாந்தி
அல்லது
மலத்தில்
இரத்தம்
கலந்திருத்தல்,
அளவுக்கதிகமான
சோர்வு, மயக்கம்
அல்லது
தூக்கக்
கலக்கம், சிறுநீர்
வெளியேற்றம்
குறைதல்
மற்றும்
உடல்
குளிர்ச்சியடைதல்
ஆகியவை
உடனடி
மருத்துவக்
கவனிப்பை
வேண்டிநிற்கும்
அபாய
அறிகுறிகளாகும்.
காய்ச்சல்
குறைந்த
மாத்திரத்தில்
நோய்
குணமாகிவிட்டது
என்று
கருதி
அலட்சியப்படுவது,
பல
சந்தர்ப்பங்களில்
உயிருக்கே
அச்சுறுத்தலாக
அமைந்துவிடுகிறது.
இக்காலப்
பகுதியிலேயே
நோயாளியை
நெருக்கமாகக்
கண்காணிப்பது,
குடும்ப
அங்கத்தவர்களுக்கும்
ஒரு
முதன்மைப்
பொறுப்பாக
மாறவேண்டியுள்ளது.
நாடு
முழுவதும்
இதுவரை
82,838
பேர்
டெங்கு
தொற்றாளர்களாக
அடையாளம்
காணப்பட்டுள்ளனர்
என்பதோடு, இத்தொற்றினால்
61
பேர்
உயிரிழந்துள்ளனர்.
இந்த
ஆண்டின்
அதிகபட்ச
பதிவு
ஜூலை
மாதத்திலேயே
ஏற்பட்டுள்ளது;
இம்மாதம்
ஒன்றிலேயே
26,136க்கும்
அதிகமான
தொற்றுகள்
அறிக்கையிடப்பட்டுள்ளன.
மொத்தப்
பாதிப்பில்
43,000க்கும்
மேற்பட்ட
வழக்குகள்
(சுமார்
52 வீதம்)
மேல்
மாகாணத்திலேயே
பதிவாகியுள்ளன.
மாவட்ட
ரீதியில்
கம்பஹா (17,280+) மற்றும்
கொழும்பு (16,213+) மாவட்டங்கள்
மிக
அதிகமாகப்
பாதிக்கப்பட்டுள்ளன.
நாடு
முழுவதும்
175 சுகாதாரப்
பிரிவுகள்
அபாயகர
மண்டலங்களாக
அடையாளம்
காணப்பட்டுள்ளன.
இத்தரவுகள்,
தொற்றுநிலைமையின்
தீவிரத்தையும்,
உடனடி
முகாமைத்துவம்
அவசியம்
என்பதையும்
தெளிவாகக்
காட்டுகின்றன.
நகர்ப்புற
அடர்த்தி
அதிகமான
பிரதேசங்களில்
தொற்று
விகிதம்
கூடுதலாகக்
காணப்படுவது,
நகர்மயமாக்கலுடன்
தொடர்புடைய
சூழலியல்
மாற்றங்களையும்
சிந்திக்கத்
தூண்டுகிறது.
சில
வட்டாரங்களில்,
நுளம்பு
தடுப்புப்
புகையடித்தல்
(Fogging) ஒன்றே
டெங்கு
பரவலைக்
கட்டுப்படுத்த
போதுமானது
என்ற
எண்ணம்
நிலவுகிறது.
எனினும், இது
ஒரு
பகுதி
உண்மையே
தவிர
முழுமையான
தீர்வன்று.
புகையடித்தல்
வெறுமனே
பறக்கும்
நுளம்புகளை
மட்டுமே
அழிக்க
வல்லது;
நீரில்
உள்ள
குடம்பிகளையோ
(Larvae) முட்டைகளையோ
இது
அழிக்காது.
எனவே, தொடர்ச்சியான
புகையடித்தல்
மட்டும்
மேற்கொள்ளப்பட்டு,
நுளம்பு
உற்பத்தி
இடங்கள்
அகற்றப்படாவிடின்,
தொற்று
மீண்டும்
மீண்டும்
தலைதூக்கும்
அபாயம்
உள்ளது. மற்றொரு
பொதுவான
கருத்து, காய்ச்சல்
குறைந்தவுடன்
நோய்
முழுமையாகக்
குணமாகிவிட்டது
என்பதாகும்.
மேற்கூறிய
மருத்துவத்
தரவுகளின்படி,
இது
தவறான
புரிதலாகும்;
காய்ச்சல்
தணிந்த
பின்னரே
உடல்
மிக
அதிக
அபாயத்திற்கு
உட்படுகிறது
என்பது
மருத்துவ
ஆய்வுகளால்
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், "எமது
வீட்டைச்
சுற்றி
நீர்
தேங்குவதில்லை"
என்ற
தனிமனித
நம்பிக்கையின்
அடிப்படையில்
பொறுப்பைப்
புறக்கணிப்பவர்களும்
உள்ளனர்; ஆனால்
ஈடீஸ்
நுளம்புகள்
சிறிய
அளவிலான
சுத்தமான
தேங்கிய
நீரில்
கூட
முட்டையிடக்கூடியவை
என்பதால், ஒரு
தனிக்குடும்பத்தின்
கவனக்குறைவு
முழுப்
பகுதிக்கும்
அபாயமாக
மாறக்கூடும்.
எனவே, தனிமனித
அனுமானங்களை
விட, தரவு
அடிப்படையிலான
விழிப்புணர்வும்
கூட்டுப்
பொறுப்புமே
பாதுகாப்பான
வழிமுறையாகும்.
டெங்கு
தொற்றுநிலைமையை
முகாமைத்துவம்
செய்வதில்
அரசாங்க
சுகாதாரத்
திணைக்களங்களின்
பங்களிப்பு
முக்கியமானது
எனினும், சமூக
மட்டத்திலான
பங்களிப்பின்றி
முழுமையான
வெற்றி
சாத்தியமற்றது.
வீட்டிற்கு
வாரத்திற்கு
30 நிமிடங்கள்
ஒதுக்கி, பயன்பாடற்ற
சிரட்டைகள்,
டயர்கள், தகரங்கள்
போன்ற
தேங்கிய
நீர்
தேங்கும்
பொருட்களை
அகற்றுதல்
ஒரு
எளிய, ஆனால்
மிக
வலிமையான
தடுப்பு
நடவடிக்கையாகும்.
நீர்த்
தொட்டிகள்
மற்றும்
பீப்பாய்களை
முறையாக
மூடி
வைத்தல், கூரை
பீலிகள்
மற்றும்
குளிர்சாதனப்
பெட்டியின்
நீர்த்தட்டுகளைத்
தவறாமல்
சுத்தம்
செய்தல்
ஆகியவை
நடைமுறையில்
உடனடியாக
அமுல்படுத்தத்தக்க
எளிய
தீர்வுகளாகும்.
பாடசாலைகள்,
அலுவலகங்கள்
மற்றும்
மத
ஸ்தாபனங்கள்
ஊடாக
வாராந்த
"நுளம்பு
உற்பத்தி
இட
ஆய்வு
தினம்"
ஒன்றை
அறிமுகப்படுத்துவது
சமூகப்
பங்களிப்பை
ஒரு
பழக்கமாக
மாற்றும்.
மேலும், கம்பஹா, கொழும்பு
உள்ளிட்ட
அதிகம்
பாதிக்கப்பட்ட
மாவட்டங்களில்,
மொபைல்
பயன்பாட்டு
தொழில்நுட்பம்
(Mobile Application) ஊடாக
நுளம்பு
உற்பத்தி
இடங்களை
மக்களே
அடையாளங்கண்டு
அறிக்கையிடக்கூடிய
டிஜிட்டல்
முறைமையொன்றை
அறிமுகப்படுத்துவது
பயனுள்ளதாக
அமையும். பொது
சுகாதார
நிலையங்களில்
இரத்த
அணுக்கள்
பரிசோதனையை
இலவசமாகவும்
விரைவாகவும்
வழங்கும்
ஏற்பாடுகளை
விஸ்தரிப்பதன்
ஊடாக, ஆரம்பகட்டத்திலேயே
நோயறிதலை
மேற்கொள்ளும்
பழக்கத்தை
மக்களிடையே
வலுப்படுத்த
முடியும். ஊடகங்களும்,
பொது
சுகாதார
அறிவூட்டல்
நிகழ்ச்சிகள்
ஊடாக, டெங்கு
அபாய
அறிகுறிகள்
தொடர்பான
தெளிவான, தொடர்ச்சியான
விழிப்புணர்வை
ஏற்படுத்தும்
பொறுப்பை
ஏற்கவேண்டியுள்ளது.
டெங்கு
எனும்
அபாயம், அறிகுறிகளின்
ஒற்றுமையால்
எளிதில்
அலட்சியப்படக்கூடிய
ஒரு
நோயாகும். ஆயினும், அதன்
விளைவுகள்
உயிரிழப்பு
வரையிலும்
நீளக்கூடியவை.
காய்ச்சல்
ஏற்படும்
ஒவ்வொரு
சந்தர்ப்பத்திலும்,
அதைச்
சாதாரணமாகக்
கருதாமல், உரிய
நேரத்தில்
மருத்துவப்
பரிசோதனை
மேற்கொள்வதே
உயிர்காக்கும்
நடவடிக்கையாகும்.
தனிமனித
விழிப்புணர்வும்,
சமூகப்
பங்களிப்பும்,
அரசாங்க
முகாமைத்துவமும்
ஒன்றிணையும்போதே,
இந்தத்
தொற்றுநிலைமையைத்
திறம்பட
கட்டுப்படுத்த
முடியும். காலம்
தாழ்த்தாத
விழிப்புணர்வே,
இன்று
தேவைப்படும்
மிக
முக்கியமான
பொது
சுகாதார
உத்தரவாதமாகும்.



0 comments:
Post a Comment