இவ்வாறான ஒரு ஆபத்தான பின்னணியில், இந்த நோய்த்தொற்று எமது நாட்டிற்கு மாத்திரம் பரவுவவில்லை இது உலகின் பிற பகுதிகளிலும் ஒரே மாதிரியாக பரவி வருகின்றது. ஆனால் அவை நாட்டுக்கு நாடு மாறுபட்ட அளவுகளில் பரவி வருவதனால், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள் மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, மேலும் இதனால் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கானோர் வேலையில்லாமல் போயுள்ளனர்.
29 December 2020
புதிதாகப் பிறக்கும் 2021 ஆம் ஆண்டில் 'தொற்று புதிய வடிவில் எம்மை தாக்குமா!'
28 December 2020
மாரிகாலமும் மாணவக் குழந்தைகளும்... கவனம்!
இந்த மழைகாலத்தில் மிக மிக ஸ்தம்பிதமாகும் ஒன்று போக்குவரத்து. அது நகரமானாலும் கிராமமானாலும் அபிவிருத்தியை சரியாக செய்யாத நமக்கு ஏற்படும் ஒன்றுதான். ஆதனால் பல கிராமங்களுக்கான போக்குவரத்து இயந்திரப்படகுகள் மூலம் மிக ஆபத்தான சூழலில் நடைபெற்று வருவதை நாம் அவதானித்து வருகின்றோம்.
27 December 2020
கொரோணா நெருக்கடியை வென்றெடுக்க தொழிலுக்கு உதவும் தொழில்நுட்பங்கள்.
ஆனால் அவை ஏற்கனவே வளர்சியடைந்த தொழில்நுட்பத்தினை துணையாகக்கொண்டு மீண்டும் இந்த புதிய இயல்பு நிலையில் வளர்ந்து தொடர்ந்து வருவதை நாம் அவதானித்து வருகின்றோம். இவற்றுக்குள் மக்கள் தங்களை பழக்கிக்கொண்டு பாதுகாப்பாக தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு நடாத்த பொருட்களை வாங்கவும் விற்கவும் இந்த தொழில்நுட்பம் பலவகையிலும் உறுதணையாக இருந்து வருகின்றமையை இந்தக் கட்டுரையின் ஊடாக எடுத்து விளக்கப்பட்டுள்ளது. எனவே அதற்குள் நாமும் நம்மை கொண்டுவரும் பொழுதே நாம் இந்த கொடிய நெருக்கடியினை வெற்றிகொள்ள முடியும் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
நாம் அறிந்த வகையில், உலகில் 2019 டிசம்பரில்தான் சீனாவின் வுஹானில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கோவிட் 19 ஆனது, ஒரு சில மாதங்களுக்குள் உலகின் ஒவ்வொரு மூலையிலும் சென்று பாதித்துள்ளது. பாதுகாப்பு காரணம் கருதி ஏற்பட்ட பரபரப்பு மற்றும் அச்சநிலை காரணமாக நாடுகளை முடக்கும் ஒரு நிலைக்கு கொண்டு சென்றதனால் அந்தந்த நாடுகளின் பல வர்த்தக நடவடிக்கைகளையும் அதன் மூலமாகக் கிடைக்கக்கூடிய உற்பத்திகளையும் தற்காலிகமாக நிறுத்த நிர்பந்தித்தன.
20 December 2020
கோவிட்டிற்கு எதிரான போரில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள்.
அந்த வகையில், நாம் அறிந்தவைதான் கடந்த 12 மாதங்களில், முழு உலகமும் 100 ஆண்டுகளில் என்றுமில்லதவாறு எதிர்கொண்ட மிகப்பெரிய தொற்றுநோய்க்கு எதிராக போராடி வருவது. 2019 கொரோனா வைரஸ் நோய் (கொவிட்-19) சீனாவில் நவம்பர் 2019 இல் உருவானது என்று ஆய்வுகள் கருத்திடுகின்றன. 2019 டிசம்பரின் பிற்பகுதியில், இந்த புதிய வகையான கொரோனா வைரஸின் விஞ்ஞான ரீதியாக ஊர்ஜிதமானது.
19 December 2020
புதிய ஆண்டில் புதிய தொழிலுக்கு காத்திருக்கின்றீர்களா!
வடகிழக்கு மாகாணங்களிலும் இருக்கின்ற வளங்களைக் கொண்டு நவினமயமான விவசாயப் புரட்சிகளை மேற்கொண்டு எமது இளைஞர்களை ஏற்றுமதி சார் விவசாய உற்பத்தி நோக்கி தொழில் வழிகாட்டல்களை மேற்கொண்டால் நிச்சயமாக காணி அபகரிப்பு, மற்றும் வளச் சுரண்டல்களை முற்றாகப் பாதுகாக்கலாம். அத்துடன் இந்த நெருக்கடியான நிலைமை மாறி இளைஞர்கள் உளவலிமை பெறவும் உதவியாக இருக்கும். அதுவே பல புதிய கொள்கைப் பிரகடனம் மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் வந்திருக்கின்ற நிலையில், பிறக்க இருக்கும் 2021 இன் தொழில் மாற்றத்தினை அனுசரிப்பதாகவும் இருக்கும்.
14 December 2020
இடம்பெயர்தோரை திருப்பி அழைத்துவருவது 'நாட்டிற்கு உழைத்தவர்களை கௌரவிப்பதாகும்'
ஆனால் இப்பொழுது, கொவிட்-19 தொற்று மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட பின்னடைவுகளுக்குப் பிறகு, வெளிநாடுகளில் உள்ளவர்களில் கணிசமான பகுதியினர் பாதுகாப்பாக வீடு திரும்புவதை எதிர்பார்கின்னர். ஆகவே இந்த ஆய்வுக்கட்டுரை இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தவர்களை திருப்பி கொண்டுவரும் பணியில் உள்ள பாரிய அனுபவங்களையும் சவால்களையும் ஆராய்ந்து, அந்தச் சவால்களையெல்லாம் முறியடித்து செல்லும் பரிந்துரைகளை வழங்குகிறது.
13 December 2020
அரசதுறை ஊழியர்கள் வினைத்திறனுடன் செயற்படுகின்றனரா?
இது ஒரு நாட்டின் மக்கள்தொகையின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த போதுமானதாக இல்லை. இந்த விகிதத்தில், நாட்டில் ஒரு சராசரி நபர் உண்மையான வருமானத்தை இரட்டிப்பாக்க சுமார் 20 ஆண்டுகள் ஆகும் என பொருளியலாளர்கள் அஞ்சுகின்றனர். இது ஒரு நீண்டகாலமாகும், இருப்பினும், இலங்கை 7% சதவீதமாக வளர முடிந்தால், வருமானத்தை இரட்டிப்பாக்க எடுக்கும் காலம் 10 ஆண்டுகள்தான், அது 10% சதவீதமாக இருந்தால், அந்த காலம்7 ஆண்டுகளாகக் குறைக்கப்படும்.
12 December 2020
விவசாயத்துறையில் நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டிய மாற்றம்!