ADS 468x60

11 May 2025

அம்ஷிகாவின் நீதி தாமத்தித்தால்!

 

என் நெஞ்சுக்கு நெருக்கமான மக்களே!

இன்று என் குரல் ஒரு தனிக்குரலல்ல. அது நீதிக்காக ஏங்கும் கோடிக்கணக்கான இதயங்களின் எதிரொலி. ஆம், அம்ஷிகா! அந்த இளம் மாணவியின் மரணம் நம் அனைவரின் மனதிலும் ஆறாத வடுவாக பதிந்துள்ளது. ஆனால் அதைவிட வேதனையானது, இந்த கொலையின் பின்னணியில் அரசின் நீதியின் மீது மக்கள் கொண்டுள்ள சந்தேகம். ஏன் இன்று ஆயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கி போராடுகிறார்கள் தெரியுமா? தாமதமான நீதி, மறுக்கப்பட்ட நீதியைப் போன்றது என்ற கசப்பான உண்மையை அவர்கள் உணர்ந்ததால்தான்!

"நீதியின் பாதையில் ஏற்படும் தாமதம், அநீதிக்கு வழிவகுக்கும்" என்றார் தேசப்பிதா மகாத்மா காந்தி. அம்ஸிகாவின் மரணம் நிகழ்ந்து இத்தனை நாட்களாகியும், குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்படவில்லை என்றபோது, மக்களின் பொறுமை எல்லை மீறிவிட்டது. அவர்கள் வீதியில் இறங்கி தங்கள் நியாயமான கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். இது வெறும் போராட்டமல்ல, ஆட்சியாளர்களின் நீதியின் மீதான நம்பிக்கையின்மையின் வெளிப்பாடு!

ஆட்சியாளர்களே! நீங்கள் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கலாம், ஆனால் மக்கள் தான் இந்த தேசத்தின் உண்மையான எஜமானர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். "அதிகாரம் ஊழல் செய்யும், முழுமையான அதிகாரம் முழுமையாக ஊழல் செய்யும்" என்றார் லோர்ட் ஆக்டன். உங்கள் அதிகார மமதையில் நீதியின் குரலை நசுக்க நினைக்காதீர்கள். சிறிய அநீதிகூட ஒரு பேரலையாக உருவெடுத்து உங்களை வீழ்த்தும் வல்லமை படைத்தது என்பது அண்மைய வரலாறு கற்றுத்தந்த பாடம்.

அம்ஸிகா ஒரு தனிப்பெண் அல்ல. அவள் ஒவ்வொரு தாய் தந்தையின் கனவு, ஒவ்வொரு இளைஞனின் நம்பிக்கை. அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதி, இந்த தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இழைக்கப்பட்ட அநீதி. நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். நீதிக்காக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம். "ஒருவர் அநீதிக்கு எதிராகத் தன் குரலை உயர்த்தாவிட்டால், அந்த அநீதி அவரது மௌனத்தின் மூலம் அங்கீகரிக்கப்படுகிறது" என்பதை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது.

ஆகவே, ஆட்சியாளர்களே! இனியும் காலம் தாழ்த்தாதீர்கள். அம்ஷிகாவின்கொலைக்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்துங்கள். நீதியின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை மீட்டெடுங்கள். இல்லையேல், இந்த சிறிய அநீதி ஒருநாள் பேரரசுகளையே புரட்டிப் போட்ட மக்கள் புரட்சியாக வெடிக்கும் என்பது உங்களுக்குத் தெரியாததா என்ன?

நீதிக்காக ஒன்று கூடுவோம்! அம்ஸிகாவிற்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம்! நன்றி!

 

0 comments:

Post a Comment