ADS 468x60

21 May 2025

வழிகாட்டல் இல்லாத படித்த இளைஞர்களுக்கு ஏன் இதை செய்ய முடியாது?

இன்று கிராமமாகிக் கொண்டிருக்கும் உலகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். அதனால் சவால்களை விட சந்தர்பங்கள் எம்மத்தியில் கொட்டிக்கிடப்பதனைக் காணுகின்றோம். நாம் ஒருவருடன் அல்லது ஒரு குழுவுடன் தொடர்பைப் பேணுவதற்கான மார்க்கங்கள் இன்று பட்டி தொட்டி எங்கும் பரவிக் கிடக்கின்றது.

”பட்டப்படிப்பு முடிக்காத எவரும், நாம் காணும்படியாக தொழிலுக்காக பாதைகளை நாடி பதாதைகளை தூக்கிய சரித்திரம் எனக்கு தெரிந்த வகையில் இருந்தது கிடையாது”. அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தொழிலில் தாமாகவே தேடி ஈடுபட, பட்டதாரிகள் இவ்வளவு கற்றுக்கொண்ட பின்னரும் தாமாகத் தொழிலில் ஈடுபட முடியாத நிலையை பலர் வன்மையாக விமர்சித்து வருகின்றார்கள். மறுபக்கம் எமது மனப்பாங்கில் 'கோழி மேய்ப்பதென்றாலும் கோர்ணமெண்டில் செய்யணும்' என்ற என்ற அகற்ற முடியாத எண்ணத்துடன் நமது சமுகம் இருந்து விட்டதனால் மிகவும் கஸ்ட்டப்பட்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் முடிப்பவர்களுக்கு அரச வேலை எடுத்து அரசாங்க ஊழியர்களாக இருப்பதற்கே விரும்புகின்றனர்.

டந்த வருடங்களில் ஆயிரக்கணக்கான வேலையில்லாப் பட்டதாரிகள் பாதையில் இறங்கி அரசை அழுத்தியதால் அவர்கள் தண்ணீர் மற்றும் கண்ணீர் புகைகொண்டு விழுத்தியதையும் பார்கின்றோம். பொதுவாக தேர்தல் காலங்கள் வருகின்ற வேளையிலேயே இவ்வாறான வேலைவாய்ப்புக்களை அள்ளி வழங்கி, அவர்கள் வேலைபெறுகின்ற ஸ்த்தலங்களில் இருப்பதற்கும் இடமில்லாத நிலையை உருவாக்கி அரசை வீங்கவைத்து விடுதனைக் காணலாம். இது ஒரு பாரிய குளப்ப நிலையாக இலங்கை தொழிற் சந்தையில் பார்க்கப்படுகின்றது.

இது இவ்வாறு இருக்க குறிப்பாக தொழில் நுட்பத்துறை, கட்டுமானத்துறை மற்றும் சுற்றுலாத்துறைகளில் தேவையான வேலைவாய்ப்புக்கள் குவிந்து கிடப்பதாகவும், அங்கு அதிகமான வேலையாட்கள் தேவைப்படுவதாகவும் இதற்க்காக வெளிநாடுகளில் இராப்பகலாக சுறுசுறுப்புடன் வேலைசெய்யும் ஊழியர்கள் இந்தியா, சைனா, நேபாள் மற்றும் எமது அண்மைய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது.

ஆனால் இன்னொரு புறம் உற்பத்திக்குறைவான துறையான விவசாயத்துறையில் இருந்து ஊழியர்களை வெளியேற்றி அதிக வருவாயை ஈட்டித்தரும் துறைகளான இன்டஸ்ரியில் இணைத்து நாட்டின் உற்பத்தியை அதிகரிக்க முடியும் ஆனால் விவசாயத்துறையில் கொடுக்கும் மானியங்களுக்காகவும், சலுகைகளுக்காகவும் அதுபோல் பொதுத்துறையில் அல்லது அரச துறையில் கொடுக்கும் ஓய்வூதியத்துக்காகவும் தொழிலாளர்கள் உற்பத்தித்திறன் அற்ற துறைகளில் தேங்கிக்கிடப்பது நாட்டுக்கும் வீட்டுக்கும் நஸ்ட்டத்தினையே தருகின்றது என துறைசார்ந்தவர்கள் குறைகூறுகின்றமை ஏனோ உண்மைதான் எனப்படுகின்றதல்லவா.

குறைந்தளவான உற்பத்தியை தந்துகொண்டிருக்கின்ற, புரட்சியில்லாத ஒரு துறையாக இலங்கையில் விவசாயத்துறை காணப்படுகின்றது. இதன் மொத்த உற்பத்திக்கான பங்களிப்பு வெறும் 7 விகிதம் மாத்திரமே. ஆனால் இந்த ஏழு விகித பங்களிப்புக்குமாக இதில் ஈடுபடும் ஊழியர்கள் தொகை இலங்கை ஊழியத்தில் 28 விகிதமாகும் இது அதிகத்திலும் அதிகம். இந்த விவசாயத்தில் வரட்சி, வெள்ளம் காரணமாக நஷ்டம் ஏற்படின் இவர்கள் அருகில் உள்ள நகர்ப்புறங்களுக்கு கட்டிட வேலைகளுக்கு சென்று ஓரளவு குடும்ப வருமானம் தேறியதும் மீண்டும் வீடு திரும்புகின்றனர்.

உண்மையில் வெளிப்படையாக நோக்கினால் இலங்கையில் வாழுகின்ற மக்கள் தொழில் புரிவதனூடாக அதிக சம்பளம் கிடைக்கிற, சமுகத்தினால் ஏற்றுக்கொள்ள மற்றும் மதிப்பளிக்கக்கூடிய வேலையினையே அநேகமானோர்; எதிர்பார்க்கின்றனர். இன்னும் சிலர் பணத்தினைவிட வேலையின் மூலம் மரியாதையினையும், நிரந்தர தொழில் பாதுகாப்பினையுமே விரும்புகின்றனர் இதனால்தான் அரச தொழிலுக்கு இத்தனை கிராக்கி நிலவுகின்றது. எமது கிராமப்புறங்களில் அரச தொழழலில் இல்லாதவர்களை எந்த பொது நிகழ்வுக்கும் அதிதிகளாக எடுக்காமல் இருப்பது, ஒரு உறுதிப்படுத்துதலுக்கு (பரீட்சை விண்ணப்பம்வங்கிக்கடன், சிபார்சு) இவர்களையே சமுகத்தில் நாடவேண்டிய நிலமையெல்லாம் அரச தொழிலுக்கான பலமடங்கு கிராக்கி நிலையினைக் காட்டிநிற்கின்றது.

இது போக தனியார் துறையில் இந்த அரச துறையில் வேலை செய்வதனை விட அதிக சம்பளத்தில் வேலைசெய்தாலும் இந்த மாலை மரியாதை அவர்களுக்கு சமுகத்தால் வழங்கப்படுவதில்லை. 

இந்த ஒரு மோசமான நிலமை உண்மையான திறனாளிகளின் தேவையை வேலை தேடுகின்றவர்களுடன் இணைக்க முடியவில்லை அத்துடன் இவர்கள் போட்டித்தன்மைவாய்ந்த தனியார் துறையில் இணைந்து வேலை செய்வதற்கான ஏனைய சொப்ற் ஸ்கில் (ஆங்கில அறிவு, தொடர்பாடல், பிறஷன்டேஸஷன் திறன்) இவர்கில் அநேகரிடம் இல்லாமை பாரிய சவாலாகப் பார்க்கப்படுகின்றது.

மறுபுறத்தில் இந்த மோசமான மனப்பாங்குக்குள் ஜீவிக்க முடியாத திறன் உள்ள ஊழியர்கள் 'வுளுக் கலர்' தொழில் தேடி வருஷா வருஷம் வெளியேறி வருகின்றமை எமக்கு ஒரு இழப்பாகவே சொல்லப்படுகின்றது.

ஆக இவற்றுக்கு என்ன செய்யலாம் எனப் பார்ப்போமானால், தனியார் துறையிலும் ஓய்வூதியத்தினை ஏற்படுத்தி தொழில் பாதுகாப்பினை உறுதிப்படுத்தலாம், அதுபோல் ஏனைய நன்மைகளையும் அரச துறையில் வழங்குவதுபோல் இவர்களுக்கும் சமமாக வழங்கவேண்டும். அப்போது பாரிய மாற்றங்களை ஏற்படுத்திவிடலாம்.

ஆக இவ்வாறான ஒரு குழப்பநிலையில் இருந்து மீண்டு கொள்கை ரீதியில் மாற்றங்களை நாம் ஏற்படுத்த வேண்டுமெனில் கொள்கை வகுப்பாளர்கள் இந்த உலகமயமாக்கலின் பிரதிபலிப்பை நன்கு புரிந்துகொள்ளவேண்டும். நாளுக்கு நாள் தொழில் நுட்பம் மாறுகின்றது, இதனால் இன்று இருக்கின்ற தொழில் நாளை காணாமற் போய்விடுகின்றது. அதுபோல் தொழிலாழிகளின் பெறுமானமும் மாறுபட்டுக்கொண்டிருக்கின்றது, அதுபோல் இன்னும் பல காரணிகள் தொழில் சந்தையில் மாற்றத்தினை பிரதிபலித்த வண்ணம் உள்ளதனால் இவற்றை நிச்சயம் விளங்கிக்கொள்வதனூடாக மாத்திரம் ஒரு நீண்ட கால தந்திரோபாயத்தினை உருவாக்க முடியும்.

இன்னொரு பக்கம் மேல் மாகாணத்தை மையப்படுத்தியே பல பொதுச்சேவை வேலை வாய்ப்புகள் அதிகம் குவிந்துகிடக்கின்றன. இன்னும் ஒரு சில நகர்ப்புறங்களிலும் இந்த வாய்ப்புக்கள் உள்ளன. இங்கும் அரச துறைக்கு சமானமான வசதி வாய்ப்புக்கள் வழங்கப்பட்டாலும் அங்கு பெண்களுக்கான கவனிப்பு மிகக் குறைவாகவும் உள்ளமை சுட்டிக்காட்டப்படவேண்டியதொன்றே. இதற்கு அப்பால் சமுக விஞ்ஞானத்துறையில் வெளியாகும் பட்டதாரிகளே அதிகம் இவ்வாறான வேலையை அதிகம் விரும்புகின்றார்கள் ஏனெனில் அவர்கள் தொழில் நுட்பம் மற்றும் ஏனைய தேவையான போட்டித்திறனை அதிகமானவர்கள் கொண்டிருப்பதில்லை என்ற பொதுவான குற்றச்சாட்டில் பார்க்கப்படுகின்றனர்.

ஆக அரச நிதியில் பாரிய இழப்பை இந்த நிலை ஏற்படுத்திவிடும் அச்சுறுத்தல் அரசாங்கம் எதிர்நோக்கி வருகின்ற அதே நேரம் இந்த அரச துறைக்கு வெளியே நல்ல கவர்ச்சியான கேள்வியினை ஏற்படுத்துவதன் மூலமும் இந்த பிரச்சினைக்கான தீர்வை காணலாம். இவற்றுக்கு அப்பால் சுயதொழில் வாய்ப்புக்களை பாடசாலை பல்கலைக்கழக மட்டத்தில் இருந்தே ஊட்டிவளர்க்கவேண்டும். அதுவே முழு உற்பத்தியினையும் எமது மனித வளங்களைப்பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்பதே எனது கருதுகோளாகும்.

இன்று எந்தச் செய்தித் தலைப்பினை எடுத்தாலும் வேலையில்லாப் பட்டதாரிகள் பற்றியே பேசப்படுகின்றன. இவ்வாறான ஒரு சூழலில், ஊழியச் சந்தையில் (Labour Market) என்ன வகையான வேலைவாய்ப்புக்கள் மற்றும் திறன்கள் தேவைப்படுகின்றன? எவ்வாறு கைநிறைய சம்பளம் கிடைக்கின்றன, அத்துடன் எவ்வாறு தொழில்வாய்ப்புக்கு இன்றய இளைஞர் யுவதிகளை நெறிப்படுத்துவது என்பன போன்றவற்றினை சிந்திக்கவேண்டிய நேரமிது.

சுp வருடங்களுக்கு முன் இலங்கை ICT ஏஜென்சி ஒன்றினால் நடாத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவாக 12,000 ஊழியர்கள் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மேலதிகமாக தேவையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இத்துறையினர் நல்ல தேர்ந்த பட்டதாரிகளே இவற்றுக்கு எதிர்பார்க்கப்படுகின்றனர். ஆகவேதான் இன்று உள்ள இளைஞர் யுவதிகளை இத்துறைக்கு ஈர்த்தெடுக்க என்ன வழி உள்ளது என சிந்திக்க வேண்டும்.

2018 ஆம் ஆண்டின் ICT கம்பனிகளின் ஆய்வறிக்கை கூறுகின்ற விடயம் இலங்கையில் தகவல் தொழில் நுட்பத்துறை தொழில் வழங்குவதில் முன்னணியில் நிற்கின்ற துறைகளுள் ஒன்றாகும். 2013 ஆம் ஆண்டளவில் வெறும் 500 இத்துறை சார்ந்த ஊழியர்கள் இருந்த துறை இன்று 15,000 தொழிலாளர்களுக்கும் மேல்  தேவைப்படும் அளவுக்கு மிக வேகமாக வளர்ந்துள்ளமையினையே இது காட்டி நிற்கின்றது.

ஆகவே குறுகிய காலத்தினுள் பாரிய மாற்றத்தினை, வளர்ச்சியினை இத்துறை கண்டு வந்துள்ளது. இருப்பினும் இத்துறைக்கு பட்டதாரிகளை உருவாக்குகின்ற உயர் கல்வி நிறுவனங்கள் வெறும் 9,076 பட்டதாரிகளையே இத்துறைக்கு வழங்கக்கூடிய ஒரு நிலை இங்குள்ளமை பாரிய பற்றாக்குறை இடைவெளியினைக் காட்டுகின்றது.

இங்கு இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டம் தான் மொத்த வறிய சிறுவர்களில் 63,000 பேரினைக் அதிகம் கொண்ட நலிவுற்ற மாவட்டமாக அறியப்பட்டுள்ளது அது 8.9 விகிதமாகும்.

இவற்றிலிருந்தான மீட்சிமைக்கான முன்மொழிவுகள் என்ன எனப் பார்க்கவேண்டும்.

•             குறிப்பாக விவசாயம் மீன்பிடி மற்றும் கூலித்தொழிலில், ஈடுபடும் தலைவர்கள் உள்ள குடும்பங்களில் அதுபோல் பலவேறு விடயங்களினால் நலிவுற்றவர்கள் தலைமைதாங்கும் குடும்பங்களில் இருந்து கல்வி கற்கும் வறிய சிறுவர்களை அவர்களது கல்விசார்ந்து அதிவிஷேட கவனம் செலுத்தப்படவேண்டும்.

•             மூன்று தசாப்தகாலமாக இலங்கை மக்களினுடைய வருமானப் பகிர்வில் ஏற்றத்தாழ்வு இருந்து வருவது ஒரு சிறிய அளவிலேனும் மாறவில்லை என்ற ஒரு முறைப்பாடு இலங்கையைப் பொறுத்தளவில் இருந்து வருகின்றது. பாரிய அளவில் சிறுவர்களிடையே இருந்துவருகின்ற வறுமை நிலையைக் குறைக்;கவும் மற்றும் ஒட்டுமொத்த நாட்டின் வறுமையைக் குறைக்கவும் முக்கியமான பரிந்துரை சமமான வருமானப் பகிர்வில் அதிக முக்கியத்தினை கொடுத்து கொள்கைரீதியான நிரந்தர மாற்றத்தினை ஏற்படுத்துதலாகும்.

•             கல்விக்காக மேலதிக 10 விகிதம் நிதி ஒதுக்கீட்டினை பாதீட்டில் இடம்பெறச் செய்தல் வேண்டும். இதில் குறிப்பாக நலிவுற்ற மாணவர்களுக்காக அதாவது நாளாந்த காலை உணவை பெற முடியாத பிள்ளைகளுக்கு பாடசாலை நாட்களில் சத்துணவினைப் பெற கூப்பன் நடைமுறைப்படுத்தப்படனும்.

•             மாகாண சபைக்கு கீழ்வரும் எல்லா வசதிகளும் கொண்ட பாடசாலைகள் மாகாண சபைக்கு கீழ்வரும் பிரதேச சபை மட்டத்தில் எடுத்தேத்துதல்வேண்டும்.

•             தொழில் வழிகாட்டல்களை ஆரம்பப் பாடசாலை தொடங்கி உயர்தரம் ஈறாக அறிமுகப்படுத்த வேண்டும். அத்துடன் இம்மாணவர்களை அதற்கு தகுந்தாற்போல் ஆற்றுப்படுத்தும் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

•             சமுக பொருளாதார முன்னேற்றங்களை கிராமிய பிராந்திய பகுதிநோக்கி நகர்த்துவதன் மூலம் இடைவிலகலை பூச்சியமாகக் கொண்டு செல்லுதல்.

•             குறைந்த ஆசிரியர், ஏனைய வளங்கள் உள்ள பாடசாலைகளை தொடர்சியாக கண்காணித்து அவற்றை நிவர்த்தி செய்ய அமைச்சு ரீதியில் முடிவினை எடுத்தல்.

•             சில ஆண்டுகளுக்கு முன் கிடைத்த தகவலின்படி, குறிப்பாக 50 மாணவர்களுக்கு குறைந்த தொகையினைக் கொண்டு 1486 பாடசாலைகள் இயங்கி வருகின்றன. அதுபோல் 50- 100 மாணவர்களை மாத்திரம் கொண்டு 1560 பாடசாலைகள் இயங்கி வருகின்றன. வெறும் 3,133 பாடசாலைகளில் வெறும் 9 ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கும் ஒரு துர்பாக்கிய நிலை காணப்படுகின்றது. இவை மிகக் கவனமாகக் கையாளப்படுமிடத்து வறிய மாணவர்களின் ஆர்வம் அதிகரித்து இடைவிலகும் வீதம் குறைவடையலாம் அதன்மூலம் கல்வியால் வறுமையடையாத ஒரு சமுகத்தினைச் சிருஷ்டிக்க முடியும். 

கொண்டுவர வேண்டிய கொள்கை மாற்றம்

ஆகவே இந்த நலிவுறும் நிலையிலிருந்தான மீளுகைக்கு கிராமியப் பொருளாதாரத்தினை வலுப்படுத்துவதுடன் அதன்மூலம் அனைத்தையும் இம்மக்களால் அடைந்துகொள்ளும் வழிசெய்தலும் வேண்டும். அத்துடன் பிராந்திய மட்டத்தில் வேறுபாடின்றி உற்பத்திச் செயற்பாடுகளை முன்னெடுத்து வேலைவாய்ப்பினை ஊக்குவித்து செயலாற்றுவது வறுமையைக் குறைக்கும் முக்கியமான மார்க்கமாகப் பார்க்கப்படுகின்றது.

ஆக கல்வியை நாம் தூண்டி ஊக்குவிப்பதனால் வறுமை நிலையை அது குறைவடைய வைக்கின்றது இந்த நிலை பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதனையும் நாம் காணலாம். இதனால் கல்வியானது சுபீட்சமான சிறுவர்களின் எதிர்காலத்தினை நிர்ணயிக்கும் ஒரு நல்ல முதலீடு எனக் கொள்ளலாம். துpறன் அறிவு ஆகியவை வலுவூட்டப்படும் வகையில் வழங்கப்படும் ஒரு தரமான கல்வி அந்த சிறுவர்களின் இயலுமையை தெரிந்துகொள்வதற்கான ஒரு கருவியாக உள்ளது. எல்லாரும் சமமான கல்வியைப் பெறும் வழி செய்து கொடுத்தல் என்பது ஒட்டுமொத்த வறுமையை குறைப்பதற்கான பாரிய செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது. அத்துடன் இவை சிறுவர்களின் வளம் நிறைந்த எதிர்காலத்துக்கான ஒரு திருப்புமுனையாகவும் நோக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment