பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் எதிரொலியாக இந்திய எல்லைப் பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஆறு நாட்களில் அட்டாரி-வாகா எல்லை வழியாக 786 பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.
சமீபத்தில் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான்தான் காரணம் என இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்திற்கு மத்திய அரசு முழு சுதந்திரம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும் என பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஏப்ரல் 24 முதல் ஆறு நாட்களில் 786 பாகிஸ்தானியர்கள் அட்டாரி-வாகா எல்லை வழியாக வெளியேறியுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயத்தில், 1376 இந்தியர்கள் பாகிஸ்தானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளனர். இந்த சூழ்நிலை இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்தியாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
#India
0 comments:
Post a Comment