தேர்தலுக்காக நீங்க எந்த கட்சிக்கு வேணும்னாலும் வோட்டு போடுங்க. அது உங்க உரிமை. ஆனா அதுக்காக நம்மளோட சொந்த பந்தங்களோட சண்டை போடாதீங்க. அவங்கள வெறுக்காதீங்க. கட்சிகள் வரும் போகும். ஆனா நம்மளோட உறவுகள் எப்பவும் நம்ம கூட இருக்கணும்.
ரெண்டு நாளுக்கு முன் எங்க பக்கத்து ஊர்ல ஒரு சின்ன பிரச்சனை. உள்ளூராட்சி சபை தேர்தல் நெருங்கிட்டு இருக்குல்ல? அது சம்பந்தமா ரெண்டு சொந்தக்காரங்க பயங்கரமா சண்டை போட்டுக்கிட்டாங்க. ஒருத்தன் அந்த கட்சி, இன்னொருத்தன் இந்த கட்சின்னு மாறி மாறி பேசி ஒருத்தரை ஒருத்தர் மரியாதை இல்லாம திட்டிக்கிட்டாங்க. அதைப் பார்க்கும்போது என் மனசு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. உடனே எனக்கு சில வருஷங்களுக்கு முன்னாடி நடந்த ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வந்துச்சு.
அந்த
சமயத்துல எங்க அண்டை ஊர்லயும் உள்ளூராட்சி சபை தேர்தல்
வந்துச்சு. நானும் ஓரளவான
ஆள். பக்கத்து ஊரில
ரெண்டு அண்ணன் தம்பிங்க போட்டியிட்டாங்க. அவங்க ரெண்டு பேரும் எனக்கு ரொம்ப தெரிஞ்சவங்க. ஒருத்தர் நல்லா படிப்பார், இன்னொருத்தர் விவசாயம் பார்ப்பார். ரெண்டு பேரும் நல்லவங்க
தான். ஆனா தேர்தல் வந்ததும் அவங்க ரெண்டு பேருக்குள்ளயும் ஒரு பெரிய விரிசல்
வந்துடுச்சு.
ஒருத்தருக்காக
ஒருத்தர் பேசிக்கூட மாட்டாங்க. பார்த்தா முகத்தைத் திருப்பிக்கிட்டு போவாங்க.
அவங்க குடும்பத்துலயும் ஒரே சண்டை சச்சரவு. அவங்க அம்மா அப்பா ரெண்டு பேரையும்
சமாதானப்படுத்த முடியாம ரொம்ப கஷ்டப்பட்டாங்க. அந்த தேர்தல் சமயத்துல அந்த ஊரே ரெண்டா பிரிஞ்சு கிடந்த மாதிரி
இருந்துச்சு.
எனக்கு
ரொம்ப வருத்தமா இருக்கும். ஏன்னா அந்த அண்ணன் தம்பிங்க சின்ன வயசுல இருந்து ஒண்ணா
விளையாண்டவங்க. ஒரே தட்டுல போட்டு சாப்பிட்டவங்க. அவங்க ரெண்டு பேருக்குள்ளயும்
அந்த தேர்தல் வந்து இப்படி ஒரு பகையை உண்டாக்கிடுச்சேன்னு நினைக்கும்போது எனக்கு
ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.
அந்த
தேர்தல் முடிஞ்சது. ஒருத்தர் ஜெயிச்சிட்டாரு, இன்னொருத்தர் தோத்துட்டாரு. ஆனா
அதுக்கப்புறமும் அவங்க ரெண்டு பேருக்குள்ள இருந்த அந்த கசப்பு அப்படியே
இருந்துச்சு. ரொம்ப நாள் அவங்க பேசிக்கவே இல்ல. அவங்க குடும்பத்துலயும் அந்த
பிரச்சனை அப்படியே நீடிச்சுக்கிட்டே இருந்துச்சு.
அதை
பார்க்கும்போது நான் ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கிட்டேன். இந்த உள்ளூராட்சி சபை
தேர்தல்ங்கிறது நம்ம வட்டார தேர்தல். இங்க போட்டியிடுறவங்க யாருன்னு பார்த்தா நம்ம
சொந்தக்காரங்க, அண்ணன்
தம்பி, மாமன் மச்சான்,
சித்தப்பன் மகன்
இப்படி நம்மளோட ரத்த சம்பந்தப்பட்டவங்க தான் இருப்பாங்க. ஒரு ஊருக்குள்ள இருக்கிற
இவங்களுக்கிடையில என்ன போட்டி வேண்டிக்கிடக்கு?
இது
பல குடும்ப உறவுகளை பிரிச்சு வச்சிருப்பத நான் நேரடியா பார்த்திருக்கேன். சண்டை
போடுறதை பார்த்திருக்கேன். சிலர் முகநூல் வாயிலாக அவதூறு பரப்ப பார்க்குறாங்க. ஆனா
இதற்கெல்லாமா போய் நாம சண்டை போடுறது! பிரிஞ்சு நிக்கிறது! கோள் மூட்டுறது!
இடையில
கிடக்குற சில பேர் கூட்டங்கூடி இந்த சகுனி வேலையை செஞ்சு எங்கோ இருந்து ரசிப்பதில் ஒரு இன்பம்
காணுறாங்க. இன்னும் சிலர்
அவன்கொடுக்கிற சாராயத்துக்கும் காசிக்கும் இவனை முருங்க மரத்தில ஏத்தி விடுற
கதையெல்லாம் காலா காலமாகப் பாத்திட்டம். இதில இலாபம் யாருக்கு நஸ்டம் யாருக்கு
என்று இப்ப விளங்காது போகப் போகத் தெரியும்.
ஆக இப்படிப்பட்டவங்கதான் இந்த
உறவுகளுக்குள்ள நெருப்பை வைக்கிறாங்க. அவங்க பேச்சை கேட்டுட்டு நம்ம சொந்த
பந்தங்களோட சண்டை போடுறது எவ்வளவு முட்டாள்தனம்னு யோசிச்சுப் பார்க்கணும்.
சிலர்
பெருஞ் செலவு செய்து கௌரவம் போய்டும்னு ராப்பகலா காசு, மப்பு, உப்பு, அரிசி என குறுக்குவழியில் வாக்கு
சேகரிப்பதையும் கேள்விப்பட்டோம். இதெல்லாம் எதுக்கு? ஒரு வோட்டுக்காக
நம்மளோட நல்ல உறவுகளை பணயம் வைக்கிறது சரியா?
இதெல்லாம்
மறந்துட்டு நாம அண்ணன் தம்பிகள், உறவுக்காரங்கன்னு
நினைக்க வேண்டாமா? இங்க
கட்சிக்காக எந்த ஊரிலும் நூத்துக்கு நூறு வாக்கு விழுந்ததில்லை. அது ஒரு 20
அல்லது 10 வீதம் தான் வேலை செய்யும். அதுதான் நான்
மேலே சொல்லிட்டேனே! மீதி வோட்டுக்கள் எல்லாம்
சொந்தக்காரங்களுக்காகவும், பழக்கவழக்கத்துக்காகவும்
போடுறது தான்.
அதனால
தான் சொல்றேன், நாம
திரும்பவும் கோயில் கொளம், வாழ்வீடு,
சாவீடுன்னு எல்லா
இடத்துலயும் சந்திப்போம். ஒண்ணா இருப்போம். வெளிய இருக்கிற கட்சிக்காரனோட கதையை
கேட்டுட்டு ஊருக்குள்ள இருக்கிற நம்மளோட உறவுகளை வெறுக்கலாமா?
எனக்கு
நல்லா ஞாபகம் இருக்கு, எங்க
ஊர் கோயில் திருவிழால எல்லாரும் ஒண்ணா கூடி சாமி கும்பிடுவோம். யார் எந்த கட்சியா
இருந்தாலும் அங்க எல்லாரும் பக்தர்களா தான் இருப்பாங்க. அந்த சமயத்துல எந்த
சண்டையும் சச்சரவும் இருக்காது. அந்த ஒற்றுமை தான் நம்ம ஊரோட பலம்.
ஒருத்தர்
வீட்டுல சாவீடு நடந்தா போதும், ஊரே
திரண்டு வந்து எல்லா உதவிகளையும் செய்வாங்க. யார் எந்த கட்சின்னு யாரும் பார்க்க
மாட்டாங்க. அந்த துக்கத்துல எல்லாரும் ஒண்ணா சேர்ந்து துக்கம் விசாரிப்பாங்க. அது
தான் நம்மளோட பண்பாடு.
கல்யாணம்,
காதுகுத்துன்னு எந்த
விசேஷமா இருந்தாலும் ஊரே வந்து வாழ்த்தும். சந்தோஷத்தை பகிர்ந்துக்கும். அந்த
நேரத்துல கட்சிக்கொடியை தூக்கிட்டு யாரும் சண்டை போட மாட்டாங்க. அந்த ஒற்றுமை தான்
நம்மளோட அடையாளம்.
ஆனா
இந்த தேர்தல் நேரத்துல மட்டும் ஏன் இப்படி எல்லாரும் மாறிப் போறாங்கன்னு எனக்கு
புரியல. ஒரு சின்ன பதவிக்காக நம்மளோட பல வருஷ கால உறவுகளை ஏன் உடைச்சிக்கணும்?
நான்
என் சொந்தக்காரங்ககிட்டயும், நண்பர்கள்கிட்டயும்
இதையே தான் சொல்றேன். தேர்தலுக்காக நீங்க எந்த கட்சிக்கு வேணும்னாலும் வோட்டு
போடுங்க. அது உங்க உரிமை. ஆனா அதுக்காக நம்மளோட சொந்த பந்தங்களோட சண்டை போடாதீங்க.
அவங்கள வெறுக்காதீங்க. கட்சிகள் வரும் போகும். ஆனா நம்மளோட உறவுகள் எப்பவும் நம்ம
கூட இருக்கணும்.
நம்ம
ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க, "உறவுக்கு ஒரு கை கொடு, பகையை தூர விடு"ன்னு. இந்த தேர்தல் நேரத்துல நாம
எல்லாரும் இந்த பழமொழியை ஞாபகம் வச்சுக்கணும். நம்மளோட உறவுகளுக்கு ஒரு கை
கொடுப்போம். அந்த தேர்தல் பகையை தூர விடுவோம்.
வெளியில
இருந்து வர்றவங்க நம்மளோட ஒற்றுமையை உடைக்க பார்க்குறாங்க. அவங்க பேச்சை கேட்டுட்டு
நாம நம்மளோட சொந்த பந்தங்களோட சண்டை போட்டா அவங்க தான் ஜெயிப்பாங்க. நாம
தோத்துடுவோம்.
அதனால
தான் சொல்றேன், நாம
எல்லாரும் சேர்ந்து நம்மளோட ஒற்றுமையை காப்பாத்துவோம். இந்த தேர்தல் நேரத்துலயும்
நம்மளோட அன்பையும், பாசத்தையும்
விட்டுக்கொடுக்காம இருப்போம். கட்சிகள் வேற, உறவுகள் வேறன்னு புரிஞ்சுப்போம்.
திரும்பி
பழைய மாதிரி கோயில் குளத்துலயும், சாவீட்டுலயும்
எல்லாரும் ஒண்ணா சந்திப்போம். சந்தோஷத்தையும், துக்கத்தையும் பகிர்ந்துப்போம். வெளிய
இருக்கிற கட்சிக்காரனோட கதையை கேட்டுட்டு ஊருக்குள்ள இருக்கிற நம்மளோட உறவுகளை
வெறுக்காம இருப்போம். ஏன்னா உறவுகள் தான் நம்மளோட உண்மையான பலம். அதை நாம எப்பவும்
காப்பாத்தணும். இது தான் நான் இந்த தேர்தல் நேரத்துல நம்ம ஊர் மக்களுக்கு சொல்ல
விரும்புறது. யோசிச்சுப் பாருங்க, இது
சரியா இல்லையான்னு?
0 comments:
Post a Comment