05 September 2025
சர்வதேச இராஜதந்திரமும்: பொருளாதாரத் தற்சார்புக்கான தேடலும்
04 September 2025
அந்த நாயகன் தான் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம்.
"தன்னுடைய தொழில்நுட்பத்தை தானே உருவாக்கும் திறன் இல்லாத ஒரு தேசம், மற்றவர்களின் கருணையில் வாழும் நிலைக்கே தள்ளப்படும்"
இந்த
உலகத்தின் அன்றாட வாழ்வை உற்று நோக்கினால், ஒவ்வொரு கணமும் நிம்மதியற்று
நாம் வாழும் ஒரு யுகத்தில் இருக்கிறோம் என்பது நிதர்சனம். ஆழமானதும், நீண்டகாலமானதுமான யுத்தங்கள், குறுகிய காலத்தில்
நடக்கும் திடீர் சண்டைகள் என, மனித குலம் பல சவால்களைச்
சந்தித்துக்கொண்டிருக்கிறது. நாம் வாழும் இந்தப் பூமி, அமைதியைத்
தொலைத்து, பதற்றத்தின் விளிம்பில் நிற்கிறது.
நான் தேடிச் செல்லும் ஒரு சந்தை...
03 September 2025
வெல்லாவெளி கிராமத்துக்கும், திக்கோடை கிராமத்துக்கும் இடைப்பட்ட வயல்வெளிப் பிரதேசத்தில்...
நான் என் வேலை
விஷயமாக மக்களைப் பார்க்க கிராமங்களுக்கு அடிக்கடி போறது உண்டு. அப்படிப் போகும்
போதெல்லாம், அவசரம் காட்டாம, வழியில் இருக்குற மனிதர்களோட பேசி,
பசு மாடுகளையும், ஆடுகளையும் பார்த்து,
வயல்வெளிகளின் அழகை ரசித்து போவது வழக்கம்.
02 September 2025
ஒரு தலைவர், ஒரு நம்பிக்கை: உறவுகளைப் பேணும் தலைமைத்துவத்தின் வலிமை
நாம் ஒவ்வொருவர் உள்ளத்திலும், உணர்வுகளிலும் ஒரு கதை
இருக்கிறது. சில கதைகள் சிரிப்பை விதைக்கின்றன, சில கதைகள்
கண்ணீரை வரவழைக்கின்றன. நான் இன்று ஒரு படத்தைக் கதை போல உங்களுக்கு விளக்கப்
போகின்றேன். ஒரு சின்னப் புகைப்படம், ஆனால் அதற்குள் ஆயிரம்
அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன.
இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள். ஒரு காலத்தில் சாதாரணமானவர்களாக, எந்தப் பதவியுமில்லாதவர்களாகத் தோள்களைப் பிணைத்துக்கொண்டு, சிரித்துக்கொண்டிருந்த சில நண்பர்கள். அதே நண்பர்கள், அதே பிணைப்பு, ஆனால் காலமும், அவர்களின் வாழ்வும் இன்று எவ்வளவு மாறிப்போயிருக்கின்றது! இந்த மாற்றத்தின் பின்னணியில்தான், நமது சமூகத்தின் மிகப் பெரிய சவாலும், அதற்கான தீர்வும் மறைந்திருக்கின்றன.
01 September 2025
விலைவாசி உயர்வு நல்லதா, கெட்டதா?
இங்கே ஒவ்வொருவரின் முகத்திலும், ஒரு கடந்தகாலப் பதிவும், ஒரு நிகழ்காலப் போராட்டமும், ஒரு எதிர்காலக் கனவும் என்னால் தெளிவாக தெரிகிறது. குறிப்பாக கடந்த சில வருடங்களாக நாம் சந்தித்த பொருளாதாரப் பேரழிவுகளும், விலைவாசி உயர்வு எனும் சுனாமி எமது வாழ்வைக் கவிழ்த்துப் போட்டதையும், யாராலும் அவ்வளவு இலகுவில் மறந்துவிடமுடியாது.
உறவுகளே! நாம் கடந்து வந்த பாதை மிகவும் துயரமானது. நாட்டின் பொருளாதார நிலை, ஒரு பச்சிளங் குழந்தையின் இதயத்துடிப்பு போல மிகவேகமாகக் குறைந்து, ஒரு கட்டத்தில் நின்றுபோனது. உணவுப் பொருட்கள் வாங்கவே நடுங்கினோம். ஒருவேளைச் சாப்பாட்டுக்கே தள்ளாடிய காலம் அது. ஆனால், இன்று நிலைமை சற்று மாறிவருகின்றது. கடந்த 11 மாதங்களாக வீழ்ச்சியிலிருந்த விலைவாசி, இந்த மாதம் 1.2% அளவுக்கு உயர்ந்துள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் சொல்கின்றன.