நானிருக்கும் நிலை அறிவாய் முருகா முருகா
வெம்பி மனம் வாடுகின்றேன் முருகா முருகா
வேதனையை நீ அறிவாய் முருகா முருகா
கும்பிடவும் மனம் இல்லை முருகா முருகா
கூப்பிடவும் விருப்பம் இல்லை முருகா முருகா
சொல்ல ஒரு மனிதன் இல்லை முருகா முருகா
சோகம் நெஞ்சில் உறைகிறதே முருகா முருகா
நல்லவழி காட்டு வந்து முருகா முருகா
நாதி அற்றுப் போகாமல் முருகா முருகா
வெல்லவொரு திறமை உண்டு முருகா முருகா
வேலெடுத்து கையில் கொடு முருகா முருகா
0 comments:
Post a Comment