வண்ண வண்ண யுவசிறீ
சின்னக் கண்ணன் யுவசிறீ
இங்கும் அங்கும் மானைப் போல துள்ளது- அது
இனிக்க இனிக்க தேனைப்போல அள்ளுது
மட்டு நகரில் வாவிபோல்
வளைந்து நெழிந்து போகிறாள்
பாடும் மீனை பாட்டில் வெல்கிறாள் - அவள்
பாட்டை கேட்டு ஆட்டம் போடுறாள்
அன்னம் போல நடக்கிறாள்
கன்னம் ரெண்டும் கொடுக்கிறாள்
மின்ன மின்ன புன்னகைக்கிறாள்- அவள்
வண்ண மகள் சின்னக் கண்மணி
சின்னக் கண்ணன் யுவசிறீ
இங்கும் அங்கும் மானைப் போல துள்ளது- அது
இனிக்க இனிக்க தேனைப்போல அள்ளுது
எங்கள் தங்கம் யுவசிறீ
என்றும் சொல்லும் யுவசிறீ
மன்றம் ஆளும் நாட்டின் அரசியாம்- அவள்
மாசத்திலே குளிரும் மார்களி
சிணுங்கி சிணுங்கி வருகிறாள்
செல்லம் காட்டி மறைகிறாள்
உள்ளமெல்லாம் உறவு கொள்கிறாள்- அவள்
வெல்லம் போல நாவில் இனிக்கிறாள்
0 comments:
Post a Comment