நாம் படிக்க படிக்கத் தான் நம்மிடமுள்ள அறியாமையை கண்டு கொள்கிறோம். -ஷெல்லி.
ஆம், இது எனது 500 ஆவது ஆக்கம். நன்றி சொல்ல வேண்டிய நேரம். இத்தனை சிரமங்கள் மத்தியிலும் இந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாசகர்களுக்கு இலட்சக்கணக்கயான தகவல்களைக் கடத்தி அவர்களை விழிப்படைய வைத்திருக்கின்றேன் என்ற ஒரு மகிழ்ச்சி ஒரு பக்கம். இன்னொரு பக்கம் நாம் கற்றதற்கான கடமையை முடியுமானவரை செய்து வருகின்றேன் என்ற பெருமை மறுபக்கம். இந்த நாளில் இன்னுமொரு நல்ல விடயத்தினை நான் பகிர விரும்புகின்றேன் அது எனது 32000 சொற்களுக்கு மேலடங்கிய 'சிறப்பான குடும்பம் செழிப்பான மட்டக்களப்பு' எனும் புத்தகம், அதில் பல நல்ல விடயங்கள் ஆராயப்பட்டு எழுதி இருக்கின்றேன். நிச்சயம் அதனை 2026 இல் வெளியிடலாம் என திட்டமிட்டுள்ளேன். இது நல்ல விதையாக ஒரு குடிசை நிலத்திலிருந்து கொள்கைத் தளம் வரை எனது அனுபவ ஆய்வுத் திறனில் உருவாக்கி இருக்கின்றேன்.









