ADS 468x60

31 December 2025

2025இல் எனது 500வது படைப்பு: ஒரு புத்தக உருவாக்கத்துடன்.

நாம் படிக்க படிக்கத் தான் நம்மிடமுள்ள அறியாமையை கண்டு கொள்கிறோம். -ஷெல்லி. 

ஆம், இது எனது 500 ஆவது ஆக்கம். நன்றி சொல்ல வேண்டிய நேரம். இத்தனை சிரமங்கள் மத்தியிலும் இந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாசகர்களுக்கு இலட்சக்கணக்கயான தகவல்களைக் கடத்தி அவர்களை விழிப்படைய வைத்திருக்கின்றேன் என்ற ஒரு மகிழ்ச்சி ஒரு பக்கம். இன்னொரு பக்கம் நாம் கற்றதற்கான கடமையை முடியுமானவரை செய்து வருகின்றேன் என்ற பெருமை மறுபக்கம். இந்த நாளில் இன்னுமொரு நல்ல விடயத்தினை நான் பகிர விரும்புகின்றேன் அது எனது 32000 சொற்களுக்கு மேலடங்கிய 'சிறப்பான குடும்பம் செழிப்பான மட்டக்களப்பு' எனும் புத்தகம், அதில் பல நல்ல விடயங்கள் ஆராயப்பட்டு எழுதி இருக்கின்றேன். நிச்சயம் அதனை 2026 இல் வெளியிடலாம் என திட்டமிட்டுள்ளேன். இது நல்ல விதையாக ஒரு குடிசை நிலத்திலிருந்து கொள்கைத் தளம் வரை எனது அனுபவ ஆய்வுத் திறனில் உருவாக்கி இருக்கின்றேன்.

28 December 2025

செயற்கை நுண்ணறிவுப் புரட்சியும் இலங்கையின் சிறு தொழில் முயற்சியாளர்களும்

இலங்கையின் தற்போதைய பொருளாதாரப் போக்கில் நான் அவதானிக்கும் மிக முக்கியமான மற்றும் ஆபத்தான இடைவெளி யாதெனில், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தொழில்நுட்பத்தை எமது சிறு மற்றும் நடுத்தர முயற்சியாண்மைகள் (SMEs) அணுகுவதில் காட்டும் தயக்கமும், அதற்குத் தேவையான ஆதரவுச் சூழல் இன்மையுமே ஆகும். என்னுடைய ஆணித்தரமான கருத்து என்னவென்றால், AI என்பது இனிமேல் அறிவியல் புனைகதை அல்ல; அது வணிகத்தின் உயிர்நாடி. இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் இந்தத் துறையானது, டிஜிட்டல் யுகத்தின் விளிம்பில் நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது, எதிர்காலப் பொருளாதாரத் தற்கொலைக்கு ஒப்பானதாகும். எமது கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் வர்த்தகச் சங்கங்கள் வெறும் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்துவதைத் தாண்டி, நடைமுறைச் சாத்தியமான, துறைசார்ந்த மற்றும் மொழிரீதியாக அணுகக்கூடிய ஒரு டிஜிட்டல் சூழலமைப்பை (Digital Ecosystem) உருவாக்கத் தவறிவிட்டனர் என்பதே எனது நேரடி விமர்சனமாகும்.

26 December 2025

டிட்வா சூறாவளியும் இலங்கையின் பொருளாதார மந்தநிலை அபாயமும் -நடுத்தர வருமானப் பொறிக்குள் சிக்குண்டிருக்கும் ஒரு தேசத்தின் மீட்புப் பாதை

  • டிட்வா சூறாவளியினால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி (GDP) 2026 ஆம் ஆண்டில் 2.9 சதவிகிதம் (Percentage) வரை வீழ்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • நாட்டின்
    25 சதவிகிதம் (Percentage) மக்கள் நாளாந்தம் 1100 ரூபாவுக்கும் குறைவான வருமானத்துடன் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதுடன், 33 சதவிகிதம் (Percentage) குடும்பங்கள் தமது அடிப்படைத் தேவைகளுக்காக கடன்படும் நிலையில் உள்ளன.
  • டிட்வா சூறாவளி ஏற்படுத்திய நேரடிப் பௌதிகச் சேதம் 4.1 பில்லியன் அமெரிக்க டொடாலர்கள் (இலங்கையின் GDP இல் 4 சதவிகிதம்) என உலக வங்கி (World Bank) கணிப்பிட்டுள்ளது.
  • இறக்குமதி இடைவெளியை (Import Gap) நிரப்ப சர்வதேச நாணய நிதியம் (IMF) வழங்கிய 206 மில்லியன் அமெரிக்க டொடாலர் ஆர்.எஃப்.ஐ (RFI) கடன் என்பது ஒரு தற்காலிகத் தீர்வே தவிர, நீண்டகாலக் கடன் சுமையை இது தீர்க்காது.

25 December 2025

தேசியப் பாதுகாப்பு தினத்தின் சமூகப் பொருளாதார மீட்சி: அழிவின் பாடமும் மீண்டு எழும் இலட்சியமும்

 முக்கிய அம்சங்கள் 

  • பேரிடர் அதிர்ச்சி: 2004 சுனாமி மற்றும் சமீபத்திய திட்வா சூறாவளியால் ஏற்பட்ட இழப்புகள், இலங்கையின் சமூக-பொருளாதார அடித்தளத்தில் நிரந்தர அதிர்வை ஏற்படுத்தியுள்ளன.

  • மீட்சி மற்றும் பாதிப்பு: பேரழிவுகளின் நிதி மற்றும் மனிதச் செலவுகள், நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியின் (GDP) சதவீதத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, குறிப்பாக ஏழைகள் மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் மத்தியில்.

  • கட்டமைப்புச் சவால்கள்: பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீடுகளில் உள்ள இடைவெளிகள், மோசமான நகர்ப்புற திட்டமிடல், மற்றும் ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகளின் (EWS) பலவீனமே சவால்களாக நீடிக்கின்றன.

  • உள்ளூர் மைக்ரோ இன்சூரன்ஸ்: உள்ளூர் பொருளாதாரங்களை மீட்டெடுக்க, மீட்சியை விரைவுபடுத்தும் நுண்ணியக் காப்பீட்டுத் திட்டங்கள் (Micro-Insurance) மற்றும் காலநிலை-தாங்குதிறன் கொண்ட கட்டமைப்பு முதலீடுகள் அவசியம்.

  • பொறுப்புணர்ச்சி: வளர்ச்சி என்பது வெறும் பொருளாதாரக் குறியீடுகளால் அளவிடப்படுவதல்ல; அது ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பையும், கண்ணியத்தையும் உறுதி செய்வதில் உள்ளது.

திக்கோடை கணேஷா மகா வித்தியாலய மாணவர்களுடன் ஒரு மறக்க முடியாத தருணம்

இந்தக் கிறிஸ்துமஸ் தினத்தில் அன்பைப் பகிர்ந்து கொள்வது என்பது வெறுமனே ஒரு கொண்டாட்டம் மட்டுமல்ல, அது ஒரு மகத்தான கடமையாகும். நாம் நமக்காக வாழும் வாழ்க்கையை விட, பிறருக்காக வாழும் வாழ்க்கையே அதிகம் அர்த்தமுள்ளது என்பதை இந்த நாட்களில் நான் மீண்டும் உணர்ந்தேன். இலங்கையை அண்மையில் உலுக்கிய சூறாவளி மற்றும் பாரிய வெள்ள அனர்த்தம் பலரது வாழ்வாதாரத்தைப் புரட்டிப் போட்டது. குறிப்பாக, நாட்டின் பல பின்தங்கிய கிராமங்களில் ஒன்றான திக்கோடை எனும் குக்கிராமத்தில் அமைந்துள்ள திக்கோடை கணேஷா மகா வித்தியாலயத்தின் பிஞ்சுக் குழந்தைகளும், அவர்களது குடும்பத்தினரும் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருந்தனர்.

டிட்வா சூறாவளியின் வடுக்களும் நத்தார் காலத்தின் தார்மீக அழைப்பு

டிட்வா (Ditwah) சூறாவளி என்பது வெறுமனே ஒரு இயற்கைச் சீற்றம் மாத்திரமல்ல; அது இலங்கையின் நீண்டகால சமூக-பொருளாதாரக் கட்டமைப்பில் நிலவும் பலவீனங்களை மீளவும் உரசிப்பார்த்துள்ள ஒரு பாரிய சவாலாகும். 2004 ஆம் ஆண்டு சுனாமிப் பேரலையின் 21 ஆவது ஆண்டு நினைவு தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது இன்றைய நத்தார் தினத்தில் நாம் இத்தகையதொரு அழிவை எதிர்கொண்டிருப்பது தற்செயலானதல்ல. சுமார் 650 உயிர்களைப் பலிகொண்டு, ஒன்பது மாகாணங்களிலும் ஆயிரக்கணக்கானோரை வீதிக்குக் கொண்டு வந்துள்ள இச்சூறாவளி, எமது பேரிடர் முகாமைத்துவம் (Management) மற்றும் சமூகப் பாதுகாப்பு வலையமைப்புகள் (Social Safety Nets) குறித்த ஆழமான மீளாய்வை வேண்டி நிற்கின்றது. 

அரசாங்கம் 500 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியை ஒதுக்கியிருந்தாலும், சர்வதேச உதவிகள் குவிந்தாலும், கள யதார்த்தம் என்னவோ ஒரு பாரிய நிதி மற்றும் முகாமைத்துவ இடைவெளியையே காட்டுகின்றது. இந்த இக்கட்டான தருணத்தில், நத்தார் என்பது வெறும் கொண்டாட்டமல்ல; அது பாதிக்கப்பட்ட மக்களுக்கான தார்மீகப் பொறுப்புக்கூறலும், "கொடுத்தல்" (Giving) எனும் உன்னதப் பண்பின் ஊடாக தேசத்தைக் கட்டியெழுப்பும் ஒரு கூட்டுச் செயற்பாடுமாகும் என்பது எனது உறுதியான கருத்தாகும்.

டிட்வா சூறாவளியின் பின்னரான இலங்கையின் மீட்சி:

பொருளாதாரக் கொள்கைகளுக்கும் அரசியல் யதார்த்தங்களுக்கும் இடையிலான ஒரு தார்மீகப் போராட்டம்

  • டிட்வா சூறாவளி இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 4 சதவிகிதம் (Percentage) அதாவது 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் நேரடிப் பௌதிகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக உலக வங்கி (World Bank) மதிப்பிட்டுள்ளது.

  • அனர்த்த மீட்சிக்காக அரசாங்கம் 500 பில்லியன் ரூபா மேலதிக மதிப்பீட்டை நாடாளுமன்றத்தில் அங்கீகரித்துள்ளதுடன், இது சந்தையில் டொலர் தேவையையும் பணவீக்கத்தையும் (Inflation) அதிகரிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.

  • சர்வதேச நாணய நிதியம் (IMF) 206 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர நிதியாக வழங்கியுள்ள அதேவேளை, இலங்கையின் கடன் நிலைத்தன்மை தொடர்பான ஐந்தாவது மீளாய்வைத் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது.

  • அரசியல் களத்தில் பிரதான எதிர்க்கட்சிகளான SJB மற்றும் UNP ஆகியவற்றுக்கிடையிலான மீளிணைவுப் பேச்சுவார்த்தைகள் மற்றும் அரச தரப்பு அரசியல்வாதிகளின் நடத்தைகள் அனர்த்த முகாமைத்துவத்தில் (Management) தாக்கத்தைச் செலுத்துகின்றன.

இலங்கைக் கிறிஸ்துமஸ் கேக் பணவீக்கம்

எனது அனுபவத்தின் அடிப்படையில், இலங்கை எதிர்கொள்ளும் மிகப்பெரிய பொருளாதார அபாயம் என்பது பொருளாதார நெருக்கடி அல்ல; அது மத்திய வங்கியின் 'விருப்பப்படி'யான (Discretionary) நாணயக் கொள்கை (Monetary Policy) மற்றும் நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய (Flexible) பணவீக்க இலக்கு நிர்ணயம் ஆகும். உலகின் மிகவும் சுவையான எனக் கொண்டாடப்படும் இலங்கைக் கிறிஸ்துமஸ் கேக்கின் பணவீக்கத்தை அளவிடும் 'இலங்கைக் கிறிஸ்துமஸ் கேக் சுட்டெண்' (Sri Lanka Christmas Cake Index) மூலம் வெளிப்படும் தரவுகள், நாட்டின் நாணயக் கொள்கையில் இருக்கும் பாரிய கட்டமைப்புப் பிழையைத் தெளிவாக உணர்த்துகின்றன. 

ரூபாய் பெறுமதி வீழ்ச்சி (Rupee Depreciation) என்பது தவிர்க்க முடியாத ஒரு இயற்கைத் தாக்கம் அல்ல; அது மத்திய வங்கியின் விருப்பப்படி டொடாலரைத் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் வாங்குவதாலும், நாணய மாற்றுத்தன்மையை (Convertibility) கட்டுப்படுத்துவதாலும் ஏற்படும் நிர்வாக ரீதியான தோல்வியாகும். ஒரு கொள்கை வகுப்பாளராக, மக்களின் சேமிப்பையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க, பணவீக்கத்தை ஒரு 'தரைமட்டமாக' (Floor) அல்ல, மாறாக 2 சதவிகிதம் போன்ற குறைந்த உச்சவரம்பாக (Low Ceiling) சட்டபூர்வமாக வரையறுக்கப்பட வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இதுவே நாட்டின் அடுத்த பொருளாதார நெருக்கடியைத் தவிர்க்க ஒரே வழி.

மாமனிதர்களின் இலக்கணத்தை நமக்கு உணர்த்திய சகோதரன் பா.கமலநாதன்

 வணக்கம்! அன்பின் உறவுகளே! என் நாவில் பிறக்கின்ற சொற்கள், உங்கள் இதயத்தைத் தொடும் வல்லமை பெற வேண்டும் என்று இறைவனை வேண்டி, ஒரு நல்ல மனிதரைப் பற்றிப் பேசலாம் என நினைக்கின்றேன்.

சமூக வலைத்தளத்தின் வழியே இன்று என் கண் கண்ட காட்சியொன்று, மனதின் கதவுகளைத் தட்டிச் சென்றது; ஆழ்ந்ததொரு மகிழ்ச்சியில் என்னை ஆழ்த்தியது. ஆம், நான் நெடுநாட்களாக அறிந்த, பழகி வருகின்ற ஒரு செயல் வீரன், எமது அன்புச் சகோதரன் கமலநாதன் பாக்கியராஜா அவர்கள் குறித்த செய்திதான் அது.

"தேவ கானங்கள்" இசைப் படைப்புடன் உங்கள் ஆசீர்வாதங்களைப் பெற!

 அன்பான நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

இந்த ஆனந்தம் பொங்கும் நாளில், எங்கும் மகிழ்ச்சி பரவி, உங்கள் இல்லங்கள் அமைதியினாலும், அன்பினாலும், ஆசீர்வாதங்களினாலும் நிரம்பட்டும். தேவனின் அளவற்ற அன்பு உங்கள் வாழ்வில் ஒளியூட்டட்டும்.

என்னுடைய அன்புப் பரிசு: "தேவ கானங்கள்" 

இந்த நன்னாளினை மேலும் சிறப்பிக்கும் விதமாக, நான் இயற்றிய மூன்று பாடல்கள் அடங்கிய "தேவ கானங்கள்" இசைப் படைப்பினை இன்று வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். இந்தப் பாடல்கள் நம் ஆண்டவரின் கருணையையும், நம்பிக்கையையும், ஆறுதலையும் உங்கள் இதயங்களுக்குக் கொண்டு செல்லும் என்று நம்புகிறேன்.

ஒரு புதிய மனச்சாட்சியைக் கேட்கும் கிறிஸ்துமஸ்

வணக்கம்! அன்பின் உறவுகளே!

உண்மைக்குப் புறம்பான உலகிலே, உண்மையைத் தேடும் பயணம் எவ்வளவு உன்னதமானது! இன்று உலகெங்கிலும் ஒரு அற்புதமான கிறிஸ்துமஸ் பிறந்திருக்கிறது. கோலாகலமான விளக்குகளும், உற்சாகமான இசையும், பக்தியின் ஆழமும் இந்த நன்னாளை அலங்கரிக்கின்றன. ஆனால், இந்த பேரொளி பரவும் நன்னாளில், நாம் கேட்க வேண்டிய ஆழமான கேள்வி இதுதான்: இந்த ஒளி எங்கே நிஜமாகப் பிரகாசிக்கிறது? ஆலயத்தின் கோபுரங்களிலா? அன்றி, துன்பப்படும் மனிதரின் இதயத்திலா?

கிறிஸ்துமஸ் ஒரு பாரம்பரிய பண்டிகையாக மட்டும் சுருங்கிவிடாமல், அதன் உண்மையான அர்த்தத்தை நாம் கண்டறிய வேண்டிய நேரம் இது. அன்பின் உறவுகளே, ஏசுநாதரின் போதனைகளின் மையக்கருத்து என்ன? அவர் அதிகாரமும், ஆதிக்கமும் ஆட்சி செலுத்திய ஒரு சமூகத்திலே பிறந்தவர். ஆனால், அவர் உலகிற்குப் போதித்ததோ சகோதரத்துவத்தையும், அமைதியையும்! ஒவ்வொரு மதத்தின் விடுதலையாளரும், மகானும் அமைதியைத்தான் விரும்பினர். அந்த வரிசையில், இயேசுவும் அமைதி இல்லாத உலகிற்கு, சகோதர நெருக்கம் நிறைந்த உலகைத் தரவே விரும்பினார். அதனால்தான், அவர் ஒரு விடுதலையாளர்! அவரது போதனைகள் அமைதி கேட்கும் மக்களின் இதயங்களில் அன்பான உணர்வுடன் எழுதப்பட்டிருக்கின்றன.

24 December 2025

டிட்வா விட்டுச் சென்ற பொருளாதாரப் புயலும், மீண்டெழுதலுக்கான விலை மதிப்பும்

'டிட்வா' (Ditwah) சூறாவளி இலங்கையின் விவசாய நிலங்கள் மற்றும் நகரங்களில் ஏற்படுத்திய பௌதீகச் சேதங்கள் கண்களுக்குப் புலப்படுபவை. ஆனால், அது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள், பொருளாதார நிபுணர்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் இடையில் ஒரு புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளன. 

2026ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் மீது ஒரு குறுகிய கால அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டாலும், அதிகாரிகளின் கருத்துப்படி, புனரமைப்புப் பணிகள் மற்றும் வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்பும் பொருளாதார நடவடிக்கைகள் மூலம் இந்த இழப்பு ஓரளவு ஈடுசெய்யப்படும் என்று நம்பப்படுகிறது. எனினும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழுத் தலைவர் இவான் பாபஜோர்ஜியோ (Evan Papageorgiou) எச்சரிப்பது போல, இது ஒரு தற்காலிக அதிர்ச்சி என்றாலும், அதன் பொருளாதார இழப்பை வெறுமனே வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிட்டுச் சுருக்கிவிட முடியாது. "பொருளாதார இழப்புகள் மிகவும் முக்கியமானவை மற்றும் அவை பெரிய அளவிலானவை" என்ற அவரது வார்த்தைகள், எண்கள் சொல்லாத ஒரு ஆழமான பொருளாதார யதார்த்தத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.

பிறர் துன்பம் தாங்குதற்கு சிலுவை சுமந்தாய்

 தேவன் இல்லாத உலகத்திலே கருணையும் இல்லை 

உன் அன்பில்லாத வாழ்கையிலே ஆனந்தம் இல்லை

ஆடுகள் போல் ஓடுகின்றேன் அருள் கிடைக்கவில்லை

ஆடுகள் போல் ஓடுகின்றேன் அருள் கிடைக்கவில்லை

இயேசு உந்தன் நாமத்திலே உன்னதம் கண்டேன்

நான் உன்னதம் கண்டேன் 

டிட்வா சூறாவளி 2026 க்கான உணவுப் பாதுகாப்பிற்கான ஒரு எச்சரிக்கை

2026 க்கான உணவுப் பாதுகாப்பிற்கான ஒரு எச்சரிக்கை

  • டிட்வா சூறாவளியினால் இலங்கையின் விவசாயத் (Agriculture) துறைக்கு 814 மில்லியன் அமெரிக்க டொடாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், இது 2026 ஆம் ஆண்டின் உணவுப் பாதுகாப்பை [Food Security] பெருமளவு அச்சுறுத்துகிறது.

  • மகா பருவ நெற்செய்கையில் [Maha Season] இலக்கிடப்பட்ட 800,000 ஹெக்டேயரில் 563,950 ஹெக்டேயர் மாத்திரமே பயிரிடப்பட்டுள்ள நிலையில், அவற்றில் பெரும்பாலானவை வெள்ளத்தினால் கடும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன.

  • சந்தைகளில் கரட், பச்சை மிளகாய் போன்ற அத்தியாவசிய மரக்கறிகளின் விலைகள் 100% முதல் 350% வரை அதிகரித்துள்ளமை, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் போசனை நிலையை [Nutrition Status] மோசமாக்கியுள்ளது.

  • இதர வயல் பயிர்களில் 64 சதவீதமும், மரக்கறிச் செய்கையில் 74 சதவீதமும் அழிவடைந்துள்ளமை விவசாயிகளின் வருமானத்தை வீழ்த்தி, அவர்களை கடன் பொறிக்குள் [Debt Trap] தள்ளும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

23 December 2025

டிட்வா சூறாவளி மீட்சி மற்றும் சர்வதேச நிதியுதவி

  • ·    சர்வதேச முகவர் அமைப்புகள் இலங்கையின் சூறாவளி மீட்சிப் பணிகளுக்காக 350 மில்லியன் அமெரிக்க டொடாலர்களை (US Dollars) வழங்க தற்போது உறுதியளித்துள்ளன.
  • ·        சர்வதேச நாணய நிதியம் (IMF) அதன் விரைவான நிதி கருவியின் (Rapid Finance Instrument - RFI) மூலம் 206 மில்லியன் அமெரிக்க டொடாலர்களை அவசரகால நிதி உதவியாக வழங்கியுள்ளது.
  • ·        உலக வங்கி (World Bank) தனது புதிய செயற்திட்டங்களில் அவசரகாலக் கூறுகளாக 120 மில்லியன் அமெரிக்க டொடாலர்களை (Emergency Components) உடனடியாகச் செயற்படுத்தியுள்ளது.
  • ·        இலங்கை நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா மேலதிக மதிப்பீடானது (Supplementary Estimate), சூறாவளியினால் பாதிக்கப்பட்ட உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரங்களை மீளக்கட்டியெழுப்பப் பயன்படுத்தப்படும்.

"பொருளாதார முன்னேற்றம் என்பது ஒரு சிலரின் செல்வத்தால் அளவிடப்படுவதல்ல, மாறாகப் பலரின் கண்ணியத்தால் அளவிடப்பட வேண்டியது." என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் (Amartya Sen) கூறிய வார்த்தைகள், இன்றைய இலங்கையின் சூழலுக்கு மிகவும் பொருத்தமானவை. ஒரு நாடு இயற்கைச் சீற்றத்தினால் நிலைகுலையும் போது, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) எண்கள் வீழ்ச்சியடைவதை விட, அங்குள்ள சாமானிய மனிதனின் கண்ணியமான வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதே மிகப்பெரிய இழப்பாகும். 

2025 நவம்பர் இறுதியில் எம்மைத் தாக்கிய ‘டிட்வா’ (Ditwah)

 வணக்கம்! அன்பின் உறவுகளே!

இயற்கை அன்னை எப்போதுமே எமக்கு வாரி வழங்குபவள் தான். ஆனால், சில நேரங்களில் அவள் சீற்றம் கொள்ளும்போது, நாம் கட்டியெழுப்பிய கனவுகள் கானல் நீராகிவிடுமோ என்ற அச்சம் எழுகிறது. 2025 நவம்பர் இறுதியில் எம்மைத் தாக்கிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி, கடந்த ஒரு நூற்றாண்டில் இலங்கை கண்டிராத மிக உக்கிரமான ஒரு இயற்கை அனர்த்தம். இது வெறும் காற்றல்ல, எமது தேசத்தின் பொருளாதார முதுகெலும்பையே உலுக்கிச் சென்ற ஒரு பேரிடர்.

டிட்வா சூறாவளியின் பேரிடியும் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான சவால்களும்

இலங்கை கடந்த காலங்களில் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகளின் வடுக்கள் இன்னும் ஆறாத நிலையில், இயற்கைச் சீற்றமான 'டிட்வா' (Cyclone Ditwah) சூறாவளி நாட்டின் பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பில் பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக வங்கியின் (World Bank) அண்மைக்கால ஆய்வுகளின்படி, இந்த சூறாவளியினால் இலங்கைக்கு ஏற்பட்ட நேரடிப் பௌதிக சேதங்கள் (Direct Physical Damage) மாத்திரம் சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொடாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product - GDP) சுமார் 4 சதவீதமாகும். ஏற்கனவே 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நாணயப் பெறுமதி வீழ்ச்சி (Currency Collapse) மற்றும் நெகிழ்வான பணவீக்க இலக்கு (Flexible Inflation Targeting) போன்ற பொருளாதாரக் கொள்கைகளினால் ஏற்பட்ட வறுமையிலிருந்து மீளப் போராடும் மக்களுக்கு, இந்த அனர்த்தம் ஒரு மீளமுடியாத பேரிடியாக அமைந்துள்ளது. 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட நாணயச் சரிவுகளின் தொடர்ச்சியாக, தற்போதைய இந்த பாதிப்பானது நாட்டின் நீண்டகால நிலைபேற்றுத்தன்மையை (Long-term Sustainability) கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

22 December 2025

அநுரவின் நிவாரண அறிவிப்பு- தேசிய மீட்சிக்கு ஒரு பலமான அத்திவாரம்

அண்மையில் 'திட்வா' (Titwa) புயல் மற்றும் அதனுடன் இணைந்த கனமழை, வெள்ளப்பெருக்கு, மற்றும் மண்சரிவினால் இலங்கை தேசம் சந்தித்திருக்கும் பாரிய அழிவுகள், 2004ஆம் ஆண்டின் ஆழிப்பேரலையின் (Tsunami) பின்னரான காலப்பகுதியை ஒத்த ஒரு தேசிய சவாலை உருவாக்கியுள்ளன. நாட்டின் பல பாகங்களிலும் பரவலாகப் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்கள், தமது வாழ்வாதாரத்தையும், உடைமைகளையும், சில சமயங்களில் சொந்தங்களையும் இழந்து, பூச்சியத்தில் இருந்து தமது வாழ்க்கையை மீளத் தொடங்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றார்கள். இத்தகைய ஒரு இக்கட்டான சூழ்நிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்கள் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ள விசேட நிவாரண மற்றும் வாழ்வாதார மீட்சித் திட்டங்கள், பாதிக்கப்பட்ட மக்களின் துயர்துடைப்பதற்கான அரசாங்கத்தின் உறுதியான தலையீட்டைப் பிரதிபலிக்கின்றன. 

'தித்வா'வின் வடுக்கள்: நிவாரணத்திலிருந்து நிலையான பொருளாதார மீட்சியை நோக்கி

கடந்த 2025 நவம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இலங்கையின் கரையோரங்களைக் கடந்த 'தித்வா' சூறாவளி (Cyclone Ditwah), தேசத்தின் நவீன வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாததொரு சமூக-பொருளாதாரச் சவாலை (Socio-economic challenge) எமக்கு முன் நிறுத்தியுள்ளது. உடனடி மனிதாபிமானப் பதிலளிப்பு நடவடிக்கைகளில் அரசாங்கமும் தொண்டு நிறுவனங்களும் முதன்மையாகக் கவனம் செலுத்தி வருகின்ற போதிலும், சர்வதேச முகவர் நிலையங்களிலிருந்து வெளிவரும் புதிய தரவுகள், நாட்டின் பேரண்டப் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் (Macroeconomic stability) மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் வாழ்வாதாரத்திற்கும் ஏற்பட்டுள்ள ஆழமானதும், அமைப்பு ரீதியானதுமான அச்சுறுத்தலைச் சுட்டிக்காட்டுகின்றன. தேசிய மற்றும் சர்வதேச அபிவிருத்திக் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் அவதானிப்பவர்களின் பார்வையில், தற்போதைய மீட்புச் செயல்முறையானது வெறுமனே பழைய நிலைக்குத் திரும்புவதாக (Status Quo) அமையக்கூடாது என்பது தெளிவாகிறது. மாறாக, இது அனர்த்த இடர் முகாமைத்துவத்தை (Disaster Risk Management) வலுவான வேலைவாய்ப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு கொள்கைகளுடன் ஒருங்கிணைக்கும் ஒரு மாற்றத்திற்கான முயற்சியாக அமைவது காலத்தின் கட்டாயமாகும்.

21 December 2025

இலங்கை எதிர்கொள்ளும் புவிசார் சவால்களும் தீர்வுகளும்

இந்து சமுத்திரத்தின் மையப்பகுதியில் ஒரு முத்து என வர்ணிக்கப்படும் இலங்கை, அதன் அமைவிடத்தினால் வரத்தைப் பெற்றுள்ளதா அல்லது சாபத்தைப் பெற்றுள்ளதா என்ற விவாதம் அண்மைக்காலமாக பொதுவெளியில் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, தொடர்ச்சியாக நிகழும் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு மற்றும் காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவுகள் இந்த விவாதத்தைத் தூண்டிவிட்டுள்ளன. ஆனால், ஒரு நாட்டின் புவியியல் அமைவிடம் (Geographical location) என்பது தானாகவே வரமாகவோ அல்லது சாபமாகவோ அமைவதில்லை. அது அந்த நிலப்பரப்பில் வாழும் மக்கள் மற்றும் அதனை நிர்வகிக்கும் ஆட்சியாளர்களின் தீர்மானங்களிலேயே தங்கியுள்ளது. இலங்கை ஒரு காலநிலை பாதிப்புக்குள்ளாகக்கூடிய (Climate-vulnerable) நாடு என்பது உண்மைதான். ஆனால், இன்று நாம் அனுபவிக்கும் அனர்த்தங்கள் இயற்கையின் சீற்றம் என்பதை விட, கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக நாம் இழைத்த வரலாற்றுத் தவறுகளின் விளைச்சலே என்பதுதான் கசப்பான உண்மையாகும்.

20 December 2025

நெருப்பில் பங்களாதேஷ்- மாணவர் இயக்கத் தலைவரின் கொலையும், இந்துக்கள் மீதான வன்முறையும் இந்தியாவுக்கு விடுக்கப்படும் சவால்

பங்களாதேஷில் மீண்டும் ஒரு கொந்தளிப்பான அத்தியாயம் திறக்கப்பட்டுள்ளது. நாட்டின் அரசியல் எதிர்காலத்திற்கான பாதையைத் தீர்மானிக்க வேண்டிய காலகட்டத்தில், முக்கிய மாணவர் இயக்கத் தலைவரும், டாக்கா-8 தொகுதி வேட்பாளருமான ஷெரீப் உஸ்மான் ஹாடி (Sharif Osman Hadi) சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், அங்கு நிலைநிறுத்தப்பட்டிருந்த தற்காலிக அமைதியை மொத்தமாகச் சிதைத்துள்ளது. 

இந்தக் கொலையைத் தொடர்ந்து, நாடு தழுவிய ரீதியில் வெடித்துள்ள மாணவர் போராட்டங்கள், எதிர்பாராத விதமாகத் திசைமாறி, இந்தியாவுக்கு எதிரான கோஷங்களாகவும், இந்துச் சிறுபான்மையினரை (Hindu Minority) குறிவைக்கும் வன்முறையாகவும் உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு மாணவர் போராட்டங்களின் விளைவாக, பிரதமர் பதவியிலிருந்து விலகிய ஷேக் ஹசீனா (Sheikh Hasina) நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்திருந்தமை, இந்தப் புதிய அலை போராட்டங்களுக்கு ஒரு அரசியல் பின்னணியைக் கொடுக்கிறது. 

புனிதப் பயணமா? பரிதாபத்தின் வியாபாரமா?

 அன்பின் உறவுகளே! ஒரு தேசத்தின் மதிப்பு என்பது, அதன் எல்லைகளுக்கு வெளியே வாழும் அதன் பிரஜைகளின் நடத்தையில் தங்கியிருக்கிறது. அண்மையில் சவுதி அரேபியாவில் நடந்த ஒரு சம்பவம், முழு உலக சமூகத்தின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது.

புனித யாத்திரைக்காக, குறிப்பாக 'உம்ரா' எனும் ஆன்மீகப் பயணம் என்ற போர்வையில் சவுதி அரேபியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானியர்கள், மெக்கா, மதினா போன்ற புனிதத் தலங்களில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆம், ஒரு புனிதச் செயலின் பின்னால் பிச்சை எனும் பரிதாபத்தின் வியாபாரம்!

19 December 2025

நவம்பர் அனர்த்தம் விடுக்கும் இறுதி எச்சரிக்கை

நவம்பர் மாதக் காற்றும் மழையும் இலங்கையின் வரலாற்றில் மற்றுமொரு வடுவை ஏற்படுத்திச் சென்றுள்ளன. ஆனால்
, இம்முறை அந்த வடுக்கள் வழமையான பருவபெயர்ச்சிக் காலத்தின் விளைவுகள் அல்ல என்பதை சர்வதேச ஆய்வுகள் எமக்கு ஆணித்தரமாக உணர்த்துகின்றன. அண்மையில் வெளியான சர்வதேச வானிலை ஆய்வு அறிக்கையானது, இலங்கை அதிகாரிகளின் அடிவயிற்றில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஏனெனில், அந்த ஆய்வின் முடிவுகள் வெறுமனே காலநிலை நெருக்கடி குறித்த மற்றொரு நினைவூட்டல் மட்டுமல்ல; அவை எமது தேசத்தின் காலாவதியான கண்காணிப்பு முறைமைகள், ஆமை வேகத்தில் நகரும் அனர்த்தத் தயார்நிலை மற்றும் தடுக்கக்கூடிய மனிதத் தவறுகள் என்பன எவ்வாறு எமது மக்களின் உயிர்களைத் தேவையற்ற ஆபத்தில் தள்ளுகின்றன என்பதற்கான நேரடி எச்சரிக்கையாகும். 'டிட்வா' (Ditwah) சூறாவளி போன்ற மற்றுமொரு பேரழிவைச் சந்தித்து, அதன் மூலம்தான் எமது நாடு எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதை நிரூபிக்கும் துரதிர்ஷ்டவசமான நிலையை இலங்கை இனியும் தாங்கிக்கொள்ள முடியாது.

மன்னிப்பார் மீட்பரே!

 அன்பினைக் கொடுக்கும் இரக்கத்தின் கரங்கள்

இயேசுவின் கரங்களே

பாவங்கள் நீங்க பார்த்திடும் கண்கள்

இயேசுவின் கண்களே

 

அடியவர் சுமையை சுமந்திடும் தோழ்கள்

தேவனின் தோழ்களே

என்றும் மடிகின்ற போதும் மானிடர் வாழ

மன்னிப்பார் மீட்பரே

'டிட்வா'விற்குப் பின்னால் எழும் தேசத்தின் பசிப்பிணிச் சவால்

 'டிட்வா' சூறாவளியின் கோரத் தாண்டவம் ஓய்ந்து, வெள்ள நீர் மெல்ல வடியத் தொடங்கியிருக்கும் இந்தத் தருணத்தில், இலங்கைத் தீவு தனது வரலாற்றில் மற்றுமொரு பாரிய சோதனையை எதிர்கொண்டு நிற்கிறது. அன்புக்குரியவர்களை இழந்தவர்கள், வீடுகளைப் பறிகொடுத்தவர்கள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்தவர்களின் துயரம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. ஆனால், இந்தத் தேசியத் துயரத்தின் மையப்புள்ளியில், நாட்டின் உணவுப் பாதுகாப்பின் முதுகெலும்பாகத் திகழும் சிறுபோக விவசாயிகள், மரக்கறிச் செய்கையாளர்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். 

உட்கட்டமைப்புச் சிதைவுகள் சொல்லும் பாடம்

கடந்த டிசம்பர் 11ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்திக்கான துறைசார் மேற்பார்வைக் குழு கூடியபோது, மேசையில் வைக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் எஞ்சியிருக்கும் மெத்தனப்போக்கையும் மௌனமாக்குவதற்குப் போதுமானதாக இருந்தன. வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு ஏற்பட்ட 75 பில்லியன் ரூபா நஷ்டம், இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட 20 பில்லியன் ரூபா இழப்பு, லெக்கோ (LECO) நிறுவனத்திற்கு ஏற்பட்ட நூற்றுக்கணக்கான மில்லியன் இழப்புகள், மற்றும் நீர் வழங்கல் திட்டங்களுக்கு ஏற்பட்ட 5.6 பில்லியன் ரூபா சேதம் என அனைத்தும் ஒன்றிணைந்து, சமீபத்திய பேரழிவின் உண்மையான பொருளாதார விலையை ஒரு நிதானமான சித்திரமாகத் தீட்டிக் காட்டின. இவை வெறும் இருப்புநிலைக் குறிப்பில் (Balance Sheet) உள்ள அரூபமான எண்கள் மட்டுமல்ல; இவை தீவு முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைத் துண்டித்த, வீதிகளைக் கழுவிச் சென்ற, மின்கம்பிகளைச் சாய்த்த மற்றும் அத்தியாவசிய சேவைகளை முடக்கிய ஒரு தேசிய சோகத்தின் அளவுகோலாகும். ஏற்கனவே பல வருடங்களாகத் தொடர்ந்த நெருக்கடிக்குப் பின்னர் தனது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டிற்கு, இத்தகைய இழப்புகள் உடனடித் திருத்தப் பணிகளுக்கு அப்பால் மிக நீண்ட கால விளைவுகளைச் சுமந்து நிற்கின்றன.

18 December 2025

காலநிலை மாற்றம் இலங்கையின் தலையெழுத்தை எழுதியதா?

 2004 சுனாமியின் இரத்த சாட்சியங்கள் இன்னும் மனதின் ஆழத்தில் கனத்திருக்க, நவம்பர் 27 மற்றும் 28ஆம் திகதிகளில், 'டிட்வா' சூறாவளிக் காற்று இலங்கையின் மீது வலுவான காற்றையும் மிக அதிக மழைவீழ்ச்சியையும் ஒரே நேரத்தில் பொழிந்து, 2000ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்திற்குப் பின் மிக மோசமான வெள்ளப்பெருக்கையும் நிலச்சரிவுகளையும் ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளது. புள்ளிவிவரங்களின்படி, 'டிட்வா' எமது தேச வரலாற்றில், 2004 சுனாமிக்குப் பின் மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய ஒரு வானிலை தொடர்பான அனர்த்தமாகப் பதிவாகியுள்ளது.  இந்தத் துயரம் இலங்கையோடு மட்டும் நின்றுவிடவில்லை. இந்தோனேசியாவையும் மலேசியாவையும் தாக்கிய 'சென்யார்' சூறாவளியுடனும், ஆசியாவின் பிற பகுதிகளைத் தாக்கிய 'கோட்டோ' சூறாவளியுடனும் இது ஒரே நேரத்தில் நிகழ்ந்த ஒரு 'முப்பெரும் சூறாவளித்' தாக்குதலாகும்.

17 December 2025

திட்வாவின் பின்னரான மீண்டெழல் ஒரு தேசியப் பார்வை

இலங்கை தேசம் ஒவ்வொரு கால் நூற்றாண்டுக்கும் ஒரு தடவை, இயற்கையின் சீற்றத்தால் பெரும் சவால்களை எதிர்கொண்டு வந்திருக்கின்றது. 1950களில் வெள்ளம், 1970களின் பிற்பகுதியில் புயல், 2004ஆம் ஆண்டின் ஆழிப்பேரலை (Tsunami), இப்போது 'திட்வா' (Titwa) புயலால் தூண்டப்பட்ட பாரிய மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளின் கோரத் தாண்டவம் என்று இந்தத் தொடர் அனர்த்தங்களின் பட்டியல் நீள்கிறது. 

2004 சுனாமி அனர்த்தம் கிழக்கு மற்றும் தென் மாகாணங்களின் கரையோரங்களைப் பிரதானமாக அழித்து, மீளக் கட்டியெழுப்ப வேண்டிய ஒரு பாரிய தேவையை ஏற்படுத்தியிருந்தது. அதைப் போன்றதொரு மிகப்பரவலான, ஆனால் முற்றிலும் வேறுபட்ட பரிமாணத்திலான அழிவு இப்போது நம் மத்தியில் மீண்டும் ஏற்பட்டிருக்கின்றது. 

சந்தைத் தெருவும் டிஜிட்டல் திரையும்: இலங்கை வர்த்தகத்தின் புதிய 'பிஜிடல்' பரிணாமம்

கடந்த தசாப்தத்திலே இலங்கையின் சில்லறை வர்த்தக நிலப்பரப்பானது கற்பனைக்கு எட்டாத வகையில் பாரிய மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. கொழும்பின் பரபரப்பான கடைத்தெருக்கள் முதல் கிராமப்புறங்களின் வாராந்தச் சந்தைகள் வரை, வர்த்தகம் என்பது வெறுமனே பொருட்களைப் பரிமாறிக் கொள்ளும் இடமாக மட்டும் இருந்து வந்த காலம் மலையேறிவிட்டது. பாரம்பரியமான வர்த்தக முறைகள், தொழில்நுட்பத்தால் உந்தப்பட்ட புதிய புத்தாக்கங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில், இணைய வழி வர்த்தகம் (Online) வேறு, நேரடி வர்த்தகம் (Offline) வேறு என்று தனித்தனித் தீவுகளாகப் பார்க்கப்பட்ட நிலை மாறி, இன்று இவை இரண்டும் ஒன்றிணைந்த ஒரு புதிய கலவையாக உருவெடுத்துள்ளது. 

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், இலங்கையின் பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பிலும் ஆழமான அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாற்றமானது, வெறுமனே வணிக உத்திகளின் மாற்றம் மட்டுமல்ல; இது நுகர்வோரின் வாழ்க்கை முறை, சமூகத் தொடர்புகள் மற்றும் தேசத்தின் டிஜிட்டல் முதிர்ச்சி ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு கலாசாரப் புரட்சியாகும். இந்த மாற்றத்தின் மையப்புள்ளியாக 'பிஜிடல்' (Phygital) என்ற புதிய கோட்பாடு—அதாவது பௌதிக (Physical) மற்றும் டிஜிட்டல் (Digital) அனுபவங்களின் சங்கமம்—எழுந்து நிற்கிறது. இது இலங்கையின் வர்த்தகத் துறையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் ஒரு தீர்க்கமான சக்தியாக மாறியுள்ளது.

16 December 2025

டிட்வா தந்த அனர்த்தம்: அடுப்பங்கரைத் தீயும், ஆகாயத்தை முட்டும் விலைகளும்

 நவம்பர் மாதத்தில் இலங்கையை உலுக்கிய 'டிட்வா' சூறாவளியின் சீற்றம், கரையோரப் பகுதிகளை மட்டுமல்ல, நடுத்தர மக்களின் அடுப்பங்கரையையும் நடுங்கச் செய்திருக்கிறது. இயற்கையின் சீற்றம் ஓயலாம், ஆனால் அதன் பொருளாதாரத் தாக்கம் என்பது உடனடி மரணத்தை விட மெதுவான, ஆனால் கொடியதொரு விஷமாகச் சமூகத்தில் பரவி வருகிறது. வீடுகளை நீர் சூழ்ந்தபோது எழுந்த அச்சம் ஒருபுறமிருக்க, இன்று சந்தையில் காய்கறிகளின் விலை உயர்வைக் காணும்போது எழும் அச்சம் என்பது, ஒரு குடும்பத்தின் நாளைய உணவைப் பற்றிய அடிப்படைப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கிவிட்டது. வெறும் சில வாரங்களுக்கு முன்னர் கிலோ ரூ. 150-200க்கு விற்கப்பட்ட வெங்காயம், கிழங்கு போன்ற அத்தியாவசியப் பொருட்கள், இன்று கிலோ ரூ. 400 முதல் 500 வரை சில்லறை விலையில் விற்கப்படுவதாக மொத்த மற்றும் சில்லறை வர்த்தகர்கள் தெரிவிக்கிறார்கள். இனிப்பின் ஆதாரமான சர்க்கரைவள்ளிக்கிழங்கின் விலை ரூ. 650 ஐத் தொட்டிருக்கிறது. இந்த விலையேற்றம் என்பது வானிலை குறித்த மற்றுமொரு செய்தி அல்ல; இது எமது தேசத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் விநியோகச் சங்கிலி அமைப்புகள் எந்த அளவிற்கு பலவீனமாக உள்ளன என்பதற்கான ஒரு நேரடி அறைகூவலாகும். அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடும் எமது மக்களின் அடிப்படை உரிமையான ஆரோக்கியமான உணவை இந்த அனர்த்தம் பறித்திருக்கிறது.

15 December 2025

அசாத்தியத் துணிவு: ஆயுதமற்ற கரங்களால் உயிர்களைக் காத்த மனிதநேயம்

வணக்கம்! அன்பின் உறவுகளே! இன்று நான் எடுத்துக்கொண்ட விடயம், ஒரு சாதாரண மனிதன், தனது உயிரைப் பணயம் வைத்து, சனநாயகத்தின் மேன்மையை நிலைநாட்டிய ஒரு அசாத்தியத் துணிவு பற்றியது. ஒரு கணம் கண்களை மூடுங்கள்... உங்கள் கற்பனையில் ஒரு துயரச் சித்திரத்தைக் கொண்டு வாருங்கள்.

அவுஸ்திரேலிய பாண்டைக் கடற்கரை வணிக வளாகம்... மக்கள் நிம்மதியாய்ச் சென்று வரும் ஒரு இடம். ஆனால், அங்கே பயங்கரவாதத்தின் பிடி இறங்குகிறது. துப்பாக்கிச் சத்தத்தால் தெருக்கள் நடுங்குகின்றன. அந்த நிமிடம், பொதுமக்கள் 16 பேர் கொல்லப்பட்டதாக அறியும்போது, மரணத்தின் மிரட்டல் எப்படி இருந்திருக்கும் என்பதை நாம் உணரலாம். அங்கே, அச்சம், அதிர்ச்சி, தப்பியோட்டம் என அனைத்தும் ஒரே வேளையில் நிகழ்ந்தது. ஆயுதத்தின் அச்சுறுத்தல் கண் முன்னே நின்றபோது, எல்லோரும் பின்வாங்கும் வேளையிலே, துணிவின் ஒரு தீபம் அங்கே அணையாமல் எரிந்தது!

11 December 2025

டிட்வா சூறாவளியால் அம்பலமான இலங்கையின் சமூக-பொருளாதாரப் பலவீனங்கள்

புயல் காற்றும் பெருவெள்ளமும் ஓய்ந்திருக்கலாம், ஆனால் அவை இலங்கையின் தேசப்படத்தில் ஏற்படுத்திய வடுக்கள், எமது வரலாற்றின் மிக இருண்ட பக்கங்களில் ஒன்றாகப் பதிவாகியுள்ளன. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) அண்மையில் வெளியிட்ட அதிநவீன செய்மதி மற்றும் புவியிட ஆய்வுத் தரவுகள் (Geospatial Analysis), 'டிட்வா' சூறாவளி எமது தேசத்தின் மீது ஏற்படுத்திய தாக்கத்தின் உண்மையான விஸ்தீரணத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. சுமார் 2.3 மில்லியன் இலங்கையர்கள், அதாவது நாட்டின் மொத்த சனத்தொகையில் கணிசமானதொரு பகுதியினர், இந்த அனர்த்தத்தினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி, வெறும் புள்ளிவிவரம் மட்டுமல்ல; அது எமது தேசிய மனசாட்சியை உலுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாகும். நாட்டின் மொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 20 சதவீதத்தை, அதாவது 1.1 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை வெள்ளம் விழுங்கியுள்ளது என்ற தரவானது, எமது இயற்கை வளங்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் மீது விழுந்த அடியின் ஆழத்தை உணர்த்துகிறது. ஒரு சிறிய தீவு தேசமாக, இவ்வளவு பெரிய அளவிலான நிலப்பரப்பு ஒரே நேரத்தில் நீரினால் சூழப்படுவது என்பது, தேசியப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு விடுக்கப்பட்ட ஒரு நேரடிச் சவாலாகும்.

10 December 2025

அனர்த்தமும் அரசியல் தலையீடும் - மீண்டெழுதத் துடிக்கும் தேசத்தின் அடிமட்ட அதிகாரி எதிர்கொள்ளும் அவலம்

பெரும் வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் தீவு முழுவதும் மக்களை உலுக்கிய பாரிய இடம்பெயர்வு போன்ற ஒரு பேரழிவுக் காலத்தை இலங்கை இப்போது கடந்து கொண்டிருக்கிறது. இந்தத் துயரத்தில் இருந்து மக்கள் மீண்டெழத் துடிக்கும் வேளையில், நிவாரண முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கையில், கிராம உத்தியோகத்தர் (GN) சங்கங்களின் கூட்டமைப்பு எழுப்பியுள்ள ஒரு கவலை தரும் விடயம் தேசத்தின் கவனத்தைக் கோருகிறது. அதாவது, நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் செயல்முறையின் போது, தமது அதிகாரிகள் சுதந்திரமாகத் தமது கடமைகளைச் செய்வதைத் தடுத்து, அரசியல் சக்திகளால் அவர்களுக்கு இடையூறு விளைவிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தத் தலையீடு, நிவாரண விநியோகத்தின் போதும், தற்காலிகத் தங்குமிடங்களை நிர்வகிப்பதிலும் பல்வேறு அரசியல் பிரிவுகளால் அழுத்தம் கொடுக்கப்படுவதைச் சுட்டிக் காட்டுகிறது. இவ்வாறான நெருக்கடி நிலைகளில் ஒழுங்கைப் பேணுவதற்கும், அனைவருக்கும் சமமான நியாயத்தை உறுதி செய்வதற்கும் அதிகாரிகளுக்கு இது பெரும் சவாலாக உள்ளது.

டிட்வா சூறாவளியும் உணவுப் பாதுகாப்பின் புதிய அபாயமும்

 2025ஆம் ஆண்டானது இலங்கையின் விவசாயத் துறைக்கு, குறிப்பாக 'டிட்வா' சூறாவளியின் சீற்றத்திற்குப் பிறகு, ஒரு துயரமான ஆண்டாகவே வரலாற்றில் இடம்பிடித்துவிட்டது. பெரும் மழை, நிலச்சரிவுகள் மற்றும் பயிர்ச் சேதங்கள் மூலம் நாட்டின் பல்வேறு விவசாய-சூழலியல் மண்டலங்களில் ஏற்பட்ட அழிவு கணக்கிலடங்காதது. வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளில் ஏற்பட்ட உடனடிப் பௌதீகச் சேதம் கண்களுக்குப் புலப்பட்டாலும், 2026ஆம் ஆண்டு வரை உணவு விநியோகம் மற்றும் விவசாய வருமானத்தை வடிவமைக்கப் போகும் ஆழமான, நீண்ட கால விளைவுகள் – அதாவது, மறைந்த விவசாய இழப்புகள்தான் மிகவும் அச்சமூட்டுகின்றன.

யாழ்ப்பருவப்
பயிர்கள் அறுவடை செய்யப்பட்டிருந்த வேளையிலும், பெரும்பான்மையான பெரும்போகப் பருவப் பயிர்கள் முளைவிட்டுக் கொண்டிருந்த அல்லது மிகவும் பலவீனமான இளம் வளர்ச்சி நிலையில் இருந்தபோதே சூறாவளி நாட்டைத் தாக்கியது. இளம் நாற்றுகள் புதைக்கப்பட்டன அல்லது பிடுங்கி எறியப்பட்டன. வயல்கள் நீரில் மூழ்கின. மரங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக விகிதத்தில் தங்கள் பழங்கள் மற்றும் பூக்களை இழந்தன. இந்த அனைத்து இடையூறுகளும் நெல், மரக்கறிகள், பழங்கள், பெருந்தோட்டப் பயிர்கள் மற்றும் வீட்டுத் தோட்டங்களைப் பாதித்து, ஒரு தொடர்ச்சியான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது தற்போதைய உற்பத்தியை மட்டுமல்லாமல், எதிர்கால அறுவடை, குடும்பப் போசாக்கு மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்புக்குமே அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது.

09 December 2025

இது அனுரவின் ஆட்சி… இனி களவெடுக்காதே!

 பேரிடர் வந்தது பெருநீதி தந்தது

மக்களை ஒரு கணம் நினை

இதில் கொள்ளை அடிப்பது வினை

 ஆயிரம் ஆயிரம் உதவிகள் வருகுது

ஆறுதலாகட்டும் கொடு

அள்ளி எடுப்பதை விடு

 இனி கொள்ளை அடிப்பதற்கு இடமில்லை

கொண்டு கொடுப்பதற்கு பயனில்லை

எல்லாம் இங்கு நீதியடா

'டிட்வா'வின் பின்னான பொருளாதாரச் சுமையைச் சுமக்கப் பொதுச் சேவைக்கு உள்ள சவால்

சமீரபத்திய வரலாற்றில் இலங்கைச் சந்தித்துள்ள மிகக் கடுமையான காலநிலை அனர்த்தங்களில் ஒன்றான ‘டிட்வா’ சூறாவளி, தேசத்தின் பொருளாதார முதுகெலும்பில் ஆழமான காயத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது. கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு முன்னர் நாட்டைத் தாக்கிய இந்தச் சீற்றத்தின் விளைவாக ஏற்பட்ட பாரிய சேதங்களைச் சரிசெய்யும் பணியில் அரசாங்கம் இப்போது இறங்கியுள்ளது. இந்தப் பணியில் உயிர் இழந்தவர்களுக்கான நஷ்டஈடு, வீடுகள் மற்றும் வணிக நிலையங்கள் உட்படச் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான கொடுப்பனவுகள் என அரசுக்குப் பலத்த செலவினம் ஏற்படும் என்பது யதார்த்தம். சூறாவளிக் காற்றும், கடும் வெள்ளமும் சிறு வர்த்தகர்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது. இதனால், தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்த வணிகர்கள் மீண்டும் மீண்டெழத் தேவையான வசதிகள் இருக்குமா என்பது சந்தேகமே. இதன் சமூகப் பின்விளைவுகள் மிகத் தீவிரமானதாக இருக்கும் என்பதால், அரசாங்கம் கூடிய விரைவில் இயல்பு நிலையை மீட்டெடுத்துப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நெருக்கடியில் பூத்த உலக உறவுகள்- இலங்கை மீண்டெழ வழிகாட்டும் இராஜதந்திரத் தெளிவு

 தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு துயர அத்தியாயத்தின் மத்தியில் இன்று இலங்கை நின்று கொண்டிருக்கிறது. பல மாவட்டங்களை உலுக்கிய கடும் வெள்ளம் மற்றும் சீரற்ற வானிலையுடன் தொடர்புடைய அனர்த்தங்களின் விளைவுகளிலிருந்து தேசம் மீண்டெழும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், உலகளாவிய உதவிக்கரம் இலங்கையை நோக்கி நீண்டுள்ளது. கண்ணீர் இன்னும் காயாத, சேறும் சகதியுமான கிராமங்களில் நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக சர்வதேச சமூகத்தின் ஆதரவு பெருக்கெடுத்து வருகின்றது. இது வெறும் பொருள் சார்ந்த உதவி மட்டுமல்ல; மாறாக, ஒரு தேசம் நிலைகுலைந்து நிற்கையில், முழு உலகமும் தோளோடு தோள் நிற்கின்றது என்ற தார்மீகத் துணிவை எமக்கு ஊட்டுகின்றது.

அனர்த்த அரசியலும் மக்களின் கண்ணீரும்

 அனர்த்தங்கள் அரசியல் ரீதியாகப் பயன்படுத்தப்படுவது (Politicization of Disasters) என்பது பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களில் உப்பைத் தடவுவதற்குச் சமமாகும்

அனர்த்த முகாமைத்துவம் (Disaster Management) என்பது வெறும் உதவி விநியோகமே அல்ல; இது ஒரு அறிவியல் துறை. இது தரவு மதிப்பீடு, அனர்த வரைபடம், இடர் சாத்தியக் கணிப்பு, அமுல்படுத்தல் முறைகள், மற்றும் மனித உயிர் பாதுகாப்பு ஆகியவற்றின் மீது தங்கியுள்ளது.இலங்கையில் 2005-ல் Disaster Management Act உருவாக்கப்பட்டது. அதன்படி Disaster Management Centre (DMC) நிறுவப்பட்டது. ஆனால் கண்காணிப்புப் பொறுப்பும் ஒருங்கிணைப்புப் பொறுப்பும் பல திணைக்களங்களில் சிதறிக் கிடக்கிறது; இது அதிகாரத் தகராறு—accountability vacuum உருவாக்குகிறது. UNDRR (United Nations Office for Disaster Risk Reduction) 2019 அறிக்கையில், இலங்கை உயர் அபாய நாடுகளில் ஒன்றாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம்: அனர்தத்துக்கு முன்னதான முகாமைத்துவத்தின் பலவீனம் — ஆனால் இன்று நாடு அதிகம் பேசுவது அனர்தத்துக்கு பிந்தைய உதவி விநியோகத்தைப் பற்றியே.

08 December 2025

டிட்வா சூறாவளி- 600 உயிர்களைக் காவுகொண்ட முன் அறிவிப்பு தோல்வியின் அரசியல் பாடம்

 இந்தக் கேள்வி, உயிர் தப்பிய ஒவ்வொருவரையும், அன்புக்குரியவரை இழந்த ஒவ்வொரு குடும்ப உறுப்பினரையும், மிகத் தாமதமாக வந்த ஒவ்வொரு மீட்புப் பணியாளரையும் வேட்டையாடுகிறது. "நாங்கள் ஏன் எச்சரிக்கப்படவில்லை?" என்பதே அது. அனர்த்தத்திற்குப் பிந்தைய ஆய்வுகளில் இருந்து வெளிப்படும் சங்கடமான உண்மை தெளிவாக உள்ளது: புயல் கண்காணிக்கப்பட்டு, முன்னறிவிக்கப்பட்ட போதிலும், இலங்கையின் எச்சரிக்கை மற்றும் பதிலளிப்பு அமைப்புகள் பேரழிவுகரமாகத் தோல்வியடைந்துள்ளன. இதன் விளைவாக 600க்கும் அதிகமானோர் மரணித்ததோடு, 1.4 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது எச்சரிக்கை இல்லாமல் வந்த தெய்வச் செயல் அல்ல. இது தவிர்க்கக்கூடிய ஒரு துயரம். தகவல் தொடர்புகளில் ஏற்பட்ட அமைப்பு ரீதியான தோல்விகள், தகவல் பரப்புதலில் நடந்த மொழி ரீதியான பாகுபாடுகள் மற்றும் உத்தியோகபூர்வ பதில்களில் ஏற்பட்ட தாமதங்கள் ஆகியவற்றால் இது மேலும் மோசமடைந்தது. இந்தப் பிழைகள், பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை இயற்கையின் சீற்றத்திற்கு எதிராக எந்தவொரு பாதுகாப்பும் இன்றித் தனியாக விட்டுச் சென்றன. வானிலை ஆய்வு முகவரகங்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுப்பதில்லை என்பது தெரிந்ததே—ஏனெனில் இத்தகைய நிகழ்வுகள் மிகவும் நிச்சயமற்றவை. இருப்பினும், ஒரு வாரத்திற்கு முன் வெளியிடப்பட்ட அல்லது மூன்று நாட்களுக்கு முன் துல்லியமாகத் தெரிந்த தகவல்கள்கூடத்  மக்களைச் சென்றடையத் தவறியது எதனால் என்ற கேள்விதான் இப்போது எழுந்துள்ளது.

தித்வா சூறாவளியின் போது ஏற்பட்ட இழப்பு மற்றும் மனித இயல்பு குறித்த எனது அனுபவப் பதிவு

இலங்கையை சமீபத்தில் தாக்கிய இந்த அனர்த்தம், தித்வா சூறாவளியின் காற்றுகள், பேரழிவை ஏற்படுத்தும் வெள்ளம், நிலச்சரிவுகள், மற்றும் அதன்பின் ஏற்படும் தொற்று நோய்களின் அச்சுறுத்தல் என பலவகைப்பட்ட ஒரு துயரச் சம்பவமாக அமைந்தது. இது இரக்கமின்றி உயிர்களை பலிகொண்டதுடன், எண்ணற்ற மக்களின் வாழ்நாள் சேமிப்பையும், உடைமைகளையும் சூறையாடியது. 

இந்தக் கட்டுரை ஒரு செய்தி அறிக்கையல்ல. மாறாக, இது என் குடும்பம் அனுபவித்த துயரங்களின் விரிவான பதிவாகும். இதில் தனிப்பட்ட துயரத்தின் தாக்கம் ஆகியவை துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. எங்களின் மிகப் பெரிய இழப்புகள், நாங்கள் சந்தித்த சோதனைகள், நான் கற்றுக்கொண்ட ஆழமான பாடங்கள் மற்றும் எதிர்கால தயார்நிலையின் இன்றியமையாத தேவை ஆகியவற்றை இந்தக் கட்டுரை பிரதிபலிக்கிறது.

07 December 2025

டிட்வா சூறாவளியின் ஆழமான வடுக்கள்: மீண்டெழுதத் துடிக்கும் தேசத்தின் பரீட்சை

 2025ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 28ஆம் திகதி அதிகாலைப் பொழுதின் மங்கலான பனிமூட்டத்தில், 'டிட்வா' சூறாவளியின் கண் சுவர் திருகோணமலைக்கு அருகாமையில் தரையை நோக்கி நகர்ந்தபோது, அது நாட்டின் தலைவிதியையே மாற்றியமைக்கப் போகிறது என்று யாரும் நினைக்கவில்லை. எமது தேசத்தின் தொன்மையான உயிர்நாடியாக விளங்கும் மகாவலி கங்கையின் நீர், அந்த நாளில் ஒரு பூதாகாரமான நாகத்தைப் போலக் கொதித்தெழுந்து, சேற்றுடனும், சீற்றத்துடனும் சுழன்றோடியது. நண்பகலுக்குள், திருகோணமலைக்கு அருகிலுள்ள பல கிராமங்கள் நிலச்சரிவுகளால் விழுங்கப்பட்ட நினைவுகளாகிப் போயின. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் "எமது வரலாற்றில் மிகச் சவாலான இயற்கை அனர்த்தம்" என்று வர்ணித்த இந்தச் சூறாவளியில், எண்ணற்ற குக்கிராமங்கள் அழிக்கப்பட்டன.

'டிட்வா' விட்டுச் சென்ற வடுக்களும், நீதி கோரும் நிவாரணமும்- பொதுச் சேவையின் மீண்டெழு பரீட்சை

சமீபத்திய வரலாற்றில் இலங்கையை உலுக்கிய மிக மோசமான சூறாவளிகளில் ஒன்றான 'டிட்வா', கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் நாட்டைச் சூறையாடிச் சென்றது. அது விட்டுச் சென்ற வடுக்கள் ஆழமானவை; பலரது வாழ்வாதாரங்கள் சிதைந்து போயின. ஆனால், தேசத்தின் ஆன்மா இன்னும் உடையவில்லை. இந்தத் துயரத்தின் மத்தியில், அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளமையானது, இருண்ட வானில் தென்படும் ஒரு வெள்ளி ரேகையாகத் தெரிகிறது. ஆனால், இந்த நிவாரணம் என்பது வெறும் அறிவிப்புகளோடு நின்றுவிடாமல், உண்மையாகப் பாதிக்கப்பட்டவர்களின் கைகளைச் சென்றடைவதை உறுதிசெய்வது இப்போது பொதுச் சேவையாளர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் விடுத்த தெளிவான உத்தரவுகள், வெறும் நிர்வாக அறிவுறுத்தல்கள் மட்டுமல்ல; அவை எமது தேசத்தின் மனசாட்சியின் குரலாகும்.

மீண்டும் சிறந்ததாய் கட்டியெழுப்புவோம் - இலங்கையின் புதிய பரிமாணம்!

சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியப் பெருங்கடல் சுனாமி இந்தோனேசியா, இலங்கை மற்றும் ஆசியா, ஆப்பிரிக்காவின் மேலும் 12 இற்கும் மேற்பட்ட நாடுகளைத் தாக்கியபோது, மரண எண்ணிக்கையும், பௌதீக உள்கட்டமைப்புச் சேதங்களும் முன்னெப்போதும் இல்லாத வகையில் இருந்தன. உள்கட்டமைப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளை உடனடியாக மீளச் செயற்பட வைப்பதற்கான உடனடித் தேவை இருந்தது (குறிப்பாக ரயில்வே துறையில்). ஆனால், சேதமடைந்த உள்கட்டமைப்பை அதன் முந்தைய நிலைக்கு மீட்டெடுப்பதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட நாடுகள் "மீண்டும் சிறந்ததாய் கட்டியெழுப்புவோம்" (Build Back Better - BBB) என்ற கருத்தை ஏற்றுக்கொண்டு, ஒரு படி மேலே சென்று செயல்பட உலகளாவிய ஒருமித்த கருத்து இருந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மீளக் கட்டியமைக்கப்பட்ட வசதிகள், அவற்றின் முந்தைய நிலையை விட மிகவும் மேம்பட்டதாக இருக்கும் என்பதே இதன் பொருள்.

06 December 2025

நெஞ்சே எழு!

 நெஞ்சே எழு நெஞ்சே எழு

நெஞ்சே எழு நெஞ்சே எழு

சரியும் நிலமும் சகதி வெள்ளமும்

சாயும் மரமும் பேயும் மழையும்

ஒன்றானால் என்ன செய்யுமோ?

ஓயாமல் மழையும் பெய்யுமோ?

இயற்கை அனர்த்தங்கள் ஒருபோதும் அரசியல் புள்ளிகள் பெறுவதற்கான தளங்களாக மாறக்கூடாது.

'தித்வா' சூறாவளி இலங்கையின் மீது இறுகிய தனது கரங்களை நீக்கியது. ஆனால், அது விட்டுச் சென்ற மரணப் பாதை, பேரழிவுத் தடங்கள், ஆழமான காயங்கள் மற்றும் எண்ணற்ற கேள்விகள் நம்மை அச்சுறுத்துகின்றன. கொடிய நிலச்சரிவுகள், சரிந்து விழும் மண்ணின் கீழ் புதைக்கப்பட்ட குடும்பங்கள், நூற்றுக்கணக்கானோர் பலி, இன்னும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயிருப்பது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீதிகள், மூழ்கிய வீடுகள், உணவு, சுத்தமான நீர் அல்லது மருத்துவ உதவி இன்றி நாட்கணக்கில் சிக்கித் தவித்த சமூகங்கள் – இது வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல, எமது தேசத்தின் ஒட்டுமொத்த ஆன்மாவை உலுக்கிய ஆழ்ந்த துயரத்தின் நிதர்சனமான வெளிப்பாடுகளாகும்.