இந்த அழிவுக்கு மத்தியிலும், அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாகவும் அறிவிப்புகள் வெளியாகின்றன. அனாத்த முகாமைத்துவ மையங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இது நிச்சயமாகப் பாராட்டுக்குரியது. ஆனால், இந்த நிகழ்வுகளுக்குப் பிந்தைய நடவடிக்கைகள் எப்போதும் போதுமானவையாக இருந்ததில்லை.
முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் தான் நாம் கடும் பற்றாக்குறையைக்
காண்கிறோம். 2004 சுனாமிக்குப்
பிந்தைய "100
அடி வபர்சோன்" திட்டம், நிலச்சரிவு
அபாய பகுதிகள் குறித்து தொடர்ந்து வெளியிடப்படும் அறிவிப்புகள், கடந்த
தசாப்தங்களாக எண்ணற்ற குழுக்கள் மற்றும் ஆணையங்களின் பரிந்துரைகள் ஆகிய அனைத்தும்
அரசியல் சூழலில் தூசியில் புதைந்து போயுள்ளன. உயர் நீதிமன்ற தீர்ப்புகள் கூட
கட்டுப்பாடுகளை விதித்திருந்தும், அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. அண்மைக்
காலங்களில், கூட்டுக்
குழுக்கள் அமைக்கப்பட்டு, சட்டங்களைக் கடுமையாக்குவதற்கான பேச்சுக்கள்
உள்ளன. ஆனால், இந்த
முயற்சிகள் "அரசியல் விருப்பத்திற்கு" எதிராக நிற்கும்போது, அவை
எவ்வளவு திறனோடு செயல்படுத்தப்படும் என்பது ஒரு பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது.
மனிதாபிமானக் கோணத்தில் பார்த்தால், இந்தத்
துயரம் எண்ணிக்கையால் மட்டும் அளவிட முடியாதது. கைப்பற்றிய சில பொருட்கள், குழந்தைகளின்
பாடப் புத்தகங்கள்,
சிதைந்த படுக்கைகள், ஒரு வாழ்க்கை முழுவதும் சேர்த்த சிறு சேமிப்புகள்
ஒரு நொடியில் அழிக்கப்பட்ட நிகழ்வுகள் இவை. ஒரு குடும்பம் தன் வீட்டின் மீது
விழுந்து வரும் சேறு மற்றும் பாறைகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும்
சித்திரவதை. "இது எங்கள் பாட்டன் பூர்விகம்," "இதற்கு
மேல் எங்கு போவோம்?"
என்று கேட்கும் குரல்களில் தொங்கும் நம்பிக்கையின்மை. இந்த
மக்களில் பலர் பலமுறை எச்சரிக்கப்பட்டவர்கள். ஆனால், அவர்களுக்கு மாற்று வாழ்விடம், மாற்று
வாழ்வாதாரம் என்று உறுதியான தீர்வுகள் வழங்கப்படவில்லை. மேலும், பலர்
உள்ளூர் அரசியல்வாதிகள் "நீங்கள் இங்கேயே இருங்கள், நாங்கள்
பார்த்துக் கொள்கிறோம்" என்று வழங்கிய போலி உறுதிமொழிகளில் நம்பிக்கை
வைத்தனர். அந்த உறுதிமொழிகள் இன்று நீரில் கரைந்து, சேற்றில் புதைந்து போயுள்ளன.
பொருளாதாரத் தாக்கம் மிகவும் ஆழமானது மற்றும் பல அடுக்கு.
குறுகிய காலத்தில்,
வீடுகள் மற்றும் உடைமைகள் அழிவு நேரடி சொத்து இழப்பை
ஏற்படுத்துகிறது. விவசாய நிலங்கள் அழிவு, சிறு தொழில் அலகுகள் அழிவு, கால்நடைகள்
இழப்பு ஆகியவை வாழ்வாதாரங்களைத் தகர்த்து விடுகின்றன. நெடுஞ்சாலைகள், பாலங்கள், மின்
தொடர்புகள் மற்றும் தொலைத்தொடர்புகள் செயலிழப்பு, பாதிக்கப்பட்ட பகுதிகளை பொருளாதார ரீதியாக
தனிமைப்படுத்துகிறது. நீண்டகாலத்தில், இந்த அழிவுகள் தேசிய வளர்ச்சியின் வட்டார
சமநிலையைக் குலைக்கும். மீண்டும் கட்டமைப்பதற்கான செலவு கோடிகளில் கணக்கிடப்படும்.
சுற்றுலாத் துறைக்கு ஏற்படும் பாதிப்பு, முதலீட்டாளரின் நம்பிக்கைக்கு ஏற்படும் அடி
ஆகியவை பொருளாதாரத்தை மெதுவாக்கும். மிக முக்கியமாக, மனித மூலதானம் அழிவு என்பது எந்தப் பொருளாதார
மாதிரியாலும் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பு.
கட்டமைப்புச் சேதம் பரவலானது. கிராமப் புறங்களை நகரங்களுடன்
இணைக்கும் பாதைகள் அல்லாமல் போயின. மின் கம்பங்கள் மரங்களுடன் சாய்ந்து வீழ்ந்தன. தொலைதொடர்பு
கோபுரங்கள் செயலிழந்ததால், மீட்புப் பணிகளும், குடும்பங்களுக்கிடையேயான
தொடர்பும் தடைப்பட்டன. இந்த உடைந்த கட்டமைப்புகளை விட மோசமானது, நமது
நிறுவன மற்றும் சட்டக் கட்டமைப்பின் சேதம். நில அபிவிருத்தி, கட்டுமானக்
கட்டுப்பாடு, சுற்றுச்சூழல்
பாதுகாப்பு, பேரிடர்
மேலாண்மை எனும் நான்கு முக்கிய அமைப்புகளும் தங்களுக்குள் ஒருங்கிணைக்கப்படாமலும், அரசியல்
செல்வாக்குக்கு ஆட்படுவதாலும் முறியடிக்கப்பட்டுள்ளன. இது ஒரு முறையான, நிர்வாக
அழிவின் அறிகுறியாகும்.
இப்போதாவது, அவசர நடவடிக்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள்
முழுமையானதாக இருக்க வேண்டும். புதிய சட்டங்களை உருவாக்குவதை விட, ஏற்கனவே
உள்ள சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். நில
அபிவிருத்தி கொள்கை,
தேசிய வீட்டுவசதிக் கொள்கை, நீர் மேலாண்மைக் கொள்கை, பேரிடர்
மேலாண்மைக் கொள்கை ஆகியவற்றை ஒருங்கிணைத்து, வலுவான ஒரு "தேசிய நிலம் மற்றும்
வாழ்விட மேலாண்மை கொள்கையாக" உருவாக்கி, சட்டப் பலமுடன் நடைமுறைப்படுத்த வேண்டும்.
அங்கீகாரம் இல்லாத அனைத்துக் கட்டுமானங்களையும், யாருடைய அரசியல் காப்புப் பாதுகாவலில்
இருந்தாலும், முறையாகப்
பதிவு செய்து, அவற்றின்
அபாயத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு காலக்கெடுவுடன் அகற்றும் படி நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும். மாற்று வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை வழங்குவதன்
மூலம் இதைச் செயல்படுத்த வேண்டும். பேரழிவு மேலாண்மை ஒரு தனி அமைப்பாக மாற்றப்பட
வேண்டும், அது
தொழில்முறைத் திறன் மிக்கதாகவும், அரசியல் செல்வாக்கிலிருந்து விடுபட்டதாகவும்
இருக்க வேண்டும்.
இந்தப் போராட்டத்தில் கூட்டு பொறுப்பு முக்கியமானது.
தனியார் துறை, வங்கிகள், கட்டுமான
நிறுவனங்கள் பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான கட்டுமானங்களை மட்டுமே
ஊக்குவிக்கும் வகையில் தங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். தன்னார்வ
அமைப்புகள், விவசாயிகளின்
சங்கங்கள், மாணவர்
சமூகம் போன்ற நகர்புற சமூகங்கள், சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக குரல்
எழுப்பும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். வெளிநாட்டில் வாழும்
இலங்கைத் தமிழ் மற்றும் சிங்களவர் உட்பட இலங்கை வம்சாவளியினர், தொழில்நுட்ப
அறிவு மற்றும் நிதி ஆதாரங்களை வழங்குவதன் மூலம் பாதுகாப்பான மறுகட்டமைப்புத்
திட்டங்களுக்கு உதவ முடியும். இது ஒரு தேசிய முயற்சியாக இருக்க வேண்டும், இதில்
ஒவ்வொரு குடிமகனும் ஒரு பங்கைக் கொண்டிருக்கிறார்.
அரசியல் மற்றும் சமூக செய்தி தெளிவாக உள்ளது: கண்டிப்பு.
நாம் பிரிவினை, இனம், மதம்
அல்லது கட்சி அடிப்படையில் இந்தத் துயரத்தைப் பார்க்க முடியாது. வெள்ளம் மற்றும்
நிலச்சரிவுகள் அனைவரையும் ஒரே மாதிரியாகத் தாக்கும். எனவே, எதிர்வினையும்
ஒற்றுமையாக இருக்க வேண்டும். குற்றம் சாட்டும் விரலை உயர்த்துவதை விட, முன்னோக்கிப்
பார்க்கும் ஒரு பெரிய தேசிய பார்வையை உருவாக்குவதே நம் குறிக்கோளாக இருக்க
வேண்டும். இந்தப் பார்வை பாதுகாப்பான வாழ்விடங்கள், நிலையான வளர்ச்சி மற்றும் சட்டத்தின் ஆட்சி
ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டிருக்க வேண்டும். நமது அரசியல்வாதிகள், நகர மன்ற
உறுப்பினர்கள் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை, அவர்களின் தனிப்பட்ட சுயநலத்தை விட நாட்டின்
நலனை முன்னிறுத்த வேண்டும்.
முடிவில், இது ஒரு தீர்க்கமான தருணம். தித்வாவின்
சூறாவளி ஒரு கடும் எச்சரிக்கையாகும். இது நமது கூட்டு மனசாட்சியைத் தட்டி
எழுப்புகிறது. துயரத்தின் கண்ணீரை வரிகளாகப் பதிக்கும் முன்பு, இந்தப்
பேரழிவின் ஆழமான செய்தியைச் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். வீழ்ச்சியடைந்த
நிலையிலிருந்து மீள்வதற்கான புதிய தொடக்கமாக இதை மாற்றுவது நம் அனைவரின் பொறுப்பு.
நாம் கற்றுக்கொள்ள வேண்டும், மாற வேண்டும், மேம்பட வேண்டும். ஒரு வீடு கட்டுவதற்கு
முன்பு, அதன்
அஸ்திவாரம் சட்டத்தின் வலுவான பாறையில் அமைந்துள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்
கொள்ளுங்கள். ஏனெனில்,
அந்தப் பாறை மட்டுமே எதிர்காலத்தின் புயல்களைத் தாங்கும்.
இறந்தவர்களின் ஆத்மாக்கள் ஓய்வு பெற, உயிர் பிழைத்தவர்களின் நம்பிக்கை மீண்டும் எழ, நமது
நாட்டின் வருங்காலம் பாதுகாப்பாக இருக்க, நாம் இப்போதே செயல்பட வேண்டும்.


0 comments:
Post a Comment