ADS 468x60

24 December 2025

பிறர் துன்பம் தாங்குதற்கு சிலுவை சுமந்தாய்

 தேவன் இல்லாத உலகத்திலே கருணையும் இல்லை 

உன் அன்பில்லாத வாழ்கையிலே ஆனந்தம் இல்லை

ஆடுகள் போல் ஓடுகின்றேன் அருள் கிடைக்கவில்லை

ஆடுகள் போல் ஓடுகின்றேன் அருள் கிடைக்கவில்லை

இயேசு உந்தன் நாமத்திலே உன்னதம் கண்டேன்

நான் உன்னதம் கண்டேன் 


பிறர் துன்பம் தாங்குதற்கு சிலுவை சுமந்தாய்

அந்த சிலுவையிலே உயிர் துறந்து மீண்டும் எழுந்தாய்

துன்பம் எல்லாம் அன்பருக்காய் ஏற்று மடிந்தாய்

உனை போல தெய்வம் வாழ்கையிலே கண்டதும் இல்லை

கண்டதும் இல்லை


ஆயர் போல எம்மை என்றும் அழைத்துச் செல்லுவார்

அங்கு அளப்பெரிய கிருபை தந்து அணைத்துக் கொள்ளுவார்

காயம் எல்லாம் என்னிடத்தே ஆற்றி வையப்பா

உனை காதல் செய்ய அன்பொளியை ஏற்றி வையப்பா

நீ ஏற்றி வையப்பா

0 comments:

Post a Comment